search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோர்பி பாலம் விபத்து எதிரொலி- மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்கள் ஆய்வு செய்ய முடிவு
    X

    மோர்பி பாலம் விபத்து எதிரொலி- மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்கள் ஆய்வு செய்ய முடிவு

    • ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
    • காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் கூறினார்.

    குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தை அடுத்து, மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்களில் ஆய்வு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

    மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், சிலிகுரியில் உள்ள முடிசூட்டுப் பாலத்தையும், காங்சபதியின் குறுக்கே உள்ள பிரேந்திர சாஸ்மல் சேதுவையும் சீக்கிரம் சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்த்ராகாச்சி பாலத்தை சீரமைக்க தேவையான பணிகள் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் ​​"குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு எடுத்துக் கொள்ள முடியாது." என்றார்.

    Next Story
    ×