என் மலர்
நீங்கள் தேடியது "Bill offering"
- 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் கிடைத்தது
- அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், லட் சுமி நரசிம்மர் கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில் நடந்தது.
இதில் 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும் 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கிஷோர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
- தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.
உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
- 1.31 கிலோ வெள்ளி கிடைத்தது
- ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை யாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
இவ்வாறு பவுர்ணமிக்கு பிறகு, பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
- 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளி
- பணத்தை எண்ணும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத் தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் , அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது . வேலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில் வாணியம்பாடி சரக ஆய்வர் ரவிக்குமார், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் , உண்டியல்களில் ரூ .13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கமாகவும் , 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .