search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bill offering"

    • 130 கிராம் தங்கமும் கிடைத்தது
    • கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்யதேசங் களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு யோக நரசிம்மர் திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

    கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட உண் டியல்களை திருக்கோவில் ஆணையர் ஜெயா முன்னிலையில் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக 42 லட்சத்து 49 ஆயிரத்து 536 ரூபாய் பணமும், 130 கிராம் தங்கமும், 372 கிராம் வெள்ளியும் எண்ணப்பட்டு கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் சூப்பிரண்டு சுரேஷ், கிஷோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    • 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி கிடைத்தது
    • பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் உள்ளிட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் காணிக்கை உண்டியல்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224, 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    • எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டன
    • 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி இருந்து

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ஒரு கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாயை காணிக்கையாக அளித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலையைச் சுற்றி உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது.

    இதில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் பணம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி ஆகியவற்றை பொதுமக்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

    • நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
    • கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    21 உண்டியல்கள்

    இந்நிலையில் நெல்லை யப்பர் கோவிலின் நிரந்தர உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டன. அதன்படி 21 நிரந்தர உண்டியல்கள் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டது.

    இதில் கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் தனலெட்சுமி என்ற வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து ள்ளனர். இதில் தன்னார்வ லர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது
    • 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாம லைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகும். அன்றைய தினம் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். அதன்படி கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

    ஒவ்வொரு பவுர்ணமி முடிந்த பின்னரும் கோவில் உண்டி யல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி இந்தமாதம் பவுர் ணமிமுடிவடைந்ததையொட்டி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உபகோவில் உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்கள் அருணாச லேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு இணை ஆணையர் குமரேசன் (பொறுப்பு) முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.

    இதில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221-ஐ பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    • 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் கிடைத்தது
    • அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், லட் சுமி நரசிம்மர் கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில் நடந்தது.

    இதில் 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    மேலும் 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கிஷோர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
    • தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • 1.31 கிலோ வெள்ளி கிடைத்தது
    • ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை யாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

    இவ்வாறு பவுர்ணமிக்கு பிறகு, பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளி
    • பணத்தை எண்ணும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத் தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

    மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் , அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது . வேலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில் வாணியம்பாடி சரக ஆய்வர் ரவிக்குமார், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் , உண்டியல்களில் ரூ .13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கமாகவும் , 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

    ×