search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்து மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் காணிக்கை
    X

    புத்து மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் காணிக்கை

    • 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளி
    • பணத்தை எண்ணும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத் தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

    மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் , அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது . வேலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில் வாணியம்பாடி சரக ஆய்வர் ரவிக்குமார், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் , உண்டியல்களில் ரூ .13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கமாகவும் , 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

    Next Story
    ×