search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI World Cup"

    • கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
    • அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன்.

    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார். இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்படவுள்ளார்.

    இந்நிலையில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கடந்த ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனாது துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின் போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன்.

    ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது. உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
    • ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

    மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சாதனையை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் முறியடித்துள்ளது.

    • 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

    ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

    லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.



    • 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    இதனை தொடர்ந்து வரும் 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. தன்மையுடன் ஒன்று கூறுகிறேன். டிக்கெட் கேட்டு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். வீட்டில் இருந்தே கிரிக்கெட்டை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

    ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது அனைத்து அணியின் கேப்டன்களும் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையுடன் 10 அணியின் கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
    • ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

    உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.
    • ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது.

    புலவாயோ:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தகுதி சுற்றில் தற்போது 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை போட்டிக்கு 2-வதாக தகுதி பெறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இருக்கின்றன.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை 8 புள்ளியுடனும், ஜிம்பாப்வே 6 புள்ளியுடனும், ஸ்காட்லாந்து 4 புள்ளியுடனும், நெதர்லாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஓமன் அணிகள் இன்னும் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.
    • 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.


    அகமதாபாத்தில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11-ந் தேதி எதிர்கொள்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.


    இந்திய அணி மோதும் விவரம்:-

    இந்தியா - ஆஸ்திரேலியா அக்டோபர் 8 - சென்னை

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அக்டோபர் 11 - டெல்லி

    இந்தியா - பாகிஸ்தான் அக்டோபர் 15 - அகமதாபாத்

    இந்தியா - வங்களாதேசம் அக்டோபர் 19 - புனே

    இந்தியா - நியூசிலாந்து அக்டோபர் 22 - தர்மசாலா

    இந்தியா - இங்கிலாந்துஅக்டோபர் 29 - லக்னோ

    இந்தியா - குவாலிபையர்-2நவம்பர் 2 - மும்பை

    இந்தியா - தென் ஆப்பிரிக்காநவம்பர் 5 - கொல்கத்தா

    இந்தியா - குவாலிபையர்-1நவம்பர் 11 - பெங்களூரு

    • பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை.
    • அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் 2 இடங்களை மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    பாகிஸ்தான் அணி ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய 5 இடங்களில் விளையாட போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து- நியூசிலாந்து போட்டியுடன் உலகக்கோப்பை தொடங்கும் என எதிர்பார்ப்பு
    • இந்தியா 9 இடங்களில் விளையாடும் வகையில் வரைவு அட்டவணை தயாரிப்பு

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.

    அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அகமதாபாத்தில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து நியூசிலாந்தை தொடக்க ஆட்டத்தில் எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இறுதிப் போட்டியும் அங்கே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தியா தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 9 மைதானங்களில் விளையாடும். பாகிஸ்தான் ஐந்து நகரங்களில் விளையாடும்.

    இந்த வரைவு பட்டியல் உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்த வாரம் இறுதி அட்டவணை வெளியிடப்படும்.

    அகமதாபாத்தில் விளையாட பாகிஸ்தான் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
    • அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.

    அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    • நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.
    • உலகக்கோப்பை தொடருக்கு முன் இன்னும் 25 ஆட்டங்களே உள்ளன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.

    அடுத்த வருடம் நவம்பர்- டிசம்பரியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறது.

    ஆனால், டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து தொடரை தவிர்த்து இன்னும் 25 போட்டிகளில்தான் இந்திய அணி விளையாட உள்ளன. இந்த நிலையில் தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் டைமண்ட்-ஐ தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது கைஃப் கூறியதாவது:-

    50 ஓவர் உலகக் கோப்பைக்கு தன்னை தயார்படுத்த இந்திய அணி விரும்பினால் நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் இருந்து அதை செய்ய வேண்டியது அவசியம். உலகக் கோப்பைக்கு முன் அதிக அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இல்லை. உலகக் கோப்பை வரை 25 போட்டிகள் இருக்கலாம்.

    முக்கியமான பிரச்சினை பந்து வீச்சில் உள்ளது. நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடவில்லை. முகமது சிராஜ் இந்தியாவிற்கு திரும்பியதை பார்த்து இருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.

    ஏன் புவனேஷ்வர் குமார் அணியில் இல்லை. அதற்கான எந்த காரணமும் என்னிடம் இல்லை. அவர் சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அணியில் இடம் பெறவில்லை. புது வீரர்களை தேடுவதற்கான பழைய வீரர்களை இழந்து கொண்டு வருகிறோம். டைமண்ட்-ஐ தேடுவதற்கான தங்கத்தை தொலைத்த கதையாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு தயார் படுத்துதல் தொடங்கிவிட்டால், அதன்பின் பரிசோதனை என்ற பேச்சுக்கே நேரமில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து விட்டால், உலகக் கோப்பைக்கான அணுகுமுறைகளை தேட வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, வீரர்கள் யார் என்பதை முடிவு செய்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.

    ×