search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அசிங்கப்படுத்துற.. இன்சல்ட் பண்ற? டிக்கெட் கேட்ட நண்பர்களுக்கு ஸ்டேட்டஸ் வைத்த கோலி!
    X

    அசிங்கப்படுத்துற.. இன்சல்ட் பண்ற? டிக்கெட் கேட்ட நண்பர்களுக்கு ஸ்டேட்டஸ் வைத்த கோலி!

    • 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    இதனை தொடர்ந்து வரும் 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. தன்மையுடன் ஒன்று கூறுகிறேன். டிக்கெட் கேட்டு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். வீட்டில் இருந்தே கிரிக்கெட்டை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×