search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் 2-வது அணி எது? ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து இடையே கடும் போட்டி
    X

    உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் 2-வது அணி எது? ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து இடையே கடும் போட்டி

    • வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.
    • ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது.

    புலவாயோ:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தகுதி சுற்றில் தற்போது 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை போட்டிக்கு 2-வதாக தகுதி பெறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இருக்கின்றன.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை 8 புள்ளியுடனும், ஜிம்பாப்வே 6 புள்ளியுடனும், ஸ்காட்லாந்து 4 புள்ளியுடனும், நெதர்லாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஓமன் அணிகள் இன்னும் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

    Next Story
    ×