search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maruti suzuki"

    • இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
    • 2024 ஸ்விப்ட் மாடல் ஆறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விப்ட் மாடல் காரை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பாகவே 2024 ஸ்விப்ட் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலை பயனர்கள் ரூ. 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய ஸ்விப்ட் மாடல்- புளூ, ரெட், வைட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கலாம்.

    2024 மாருதி ஸ்விப்ட் மாடலின் முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள், புதிய டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் இந்த கார் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்குமா அல்லது பழைய 1.2 லிட்டர் K12C என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் YED எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட அதிக அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் கார் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த கார் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     


    அதன்படி இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ, பிரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களை போன்ற இன்டீரியர் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ADAS போன்ற அம்சங்கள், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

     


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.

    இந்த கார் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 2023 மாடலை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024 மாருதி ஜிம்னி மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    இத்துடன் ரூ. 3 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • எஸ் பிரெஸ்ஸோ மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    புதிய அறிவிப்பின் படி எஸ் பிரெஸ்ஸோ VXi (O) AMT, VXi (O) AMT வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ புதிய விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் ரூ. 6 லட்சம் என மாறியுள்ளது.

    இரண்டு வேரியண்ட்கள் தவிர மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி, K10C என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 49 கிலோவாட் பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் என்ட்ரி லெவல் விலை ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் Std, LXi, VXi, மற்றும் VXi (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தோனேசிய சர்வதேச மோட்டார் விழா 2024-இல் சுசுகி நிறுவனம் தனது எர்டிகா குரூயிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் மூலம் சுசுகி நிறுவனம் எர்டிகாவுக்கு காஸ்மடிக் அப்கிரேடுகளை செய்துள்ளது. புதிய எர்டிகா குரூயிஸ் மாடலின் பேஸ் வேரியன்ட் விலை IDR 288 மில்லியன், இந்திய மதிப்பில் ரூ. 15.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை IDR 301 மில்லியன், இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் முகப்பு பகுதியில் இன்வெர்ட் செய்யப்பட்ட L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மேம்பட்ட பம்ப்பரில் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன.

     


    இதில் உள்ள கருப்பு நிற கிரில் பகுதியை சுற்றி க்ரோம் ட்ரிம் உள்ளது. இவை ஹெட்லேம்ப்களை சுற்றியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக் டீகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் கூல் பிளாக் மற்றும் பியல் வைட்/கூல் பிளாக் டூ-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எர்டிகா ஸ்டான்டர்டு மாடல் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    2024 சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடலில் பெரிய பேட்டரி பேக் கொண்ட மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.எஸ். பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    முற்றிலும் புதிய சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி எர்டிகா மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சத்து 03 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • மாருதி எர்டிகா மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • இதன் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்.பி.வி. மாடல் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியது. கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி எர்டிகா மாடல் விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், மாருதி எர்டிகா மாடல் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய எம்.பி.வி. என்ற பெருமையை பெற்றது.

    எம்.பி.வி. மாடல்கள் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா 37.5 சதவீத பங்குகளை பெற்றிருக்கிறது. இந்த கார் LXi (O), VXi (O), ZXi (O) மற்றும் ZXi பிளஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா மாடலின் விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

     


    அறிமுகமான முதல் ஆண்டிலேயே எர்டிகா மாடல் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பிறகு, 2019 ஆண்டு ஐந்து லட்சம் யூனிட்களை கடந்தது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் மாதாந்திர அடிப்படையில் சராசரியாக 10 ஆயிரம் யூனிடகள் வரை விற்பனையாகி வருகிறது.

    மூன்றடுக்கு இருக்கை கொண்ட எம்.பி.வி. பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் XL6 மற்றும் இன்விக்டோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய வெர்ஷன் பலவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • இந்த கார் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. கிராண்ட் விட்டாரா மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலும் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.

    மிட்-சைஸ் எஸ்.யு.வி.-யை தொடர்ந்து மாருதி நிறுவனம் 7 சீட்டர் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் புதிய 7 சீட்டர் கார்களை மாருதி சுசுகி அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் 7 சீட்டர் வெர்ஷன் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

    மேலும், இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 7 சீட்டர் வெர்ஷனை தொடர்ந்து டொயோட்டா பிரான்டிங்கில் ஹைரைடர் 7 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மூன்றடுக்கு இருக்கை கொண்ட எஸ்.யு.வி. மாடல்கள் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இவற்றில் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படலாம்.

    • மற்ற வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
    • இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி மாதத்தில் தான் மாற்றியமைத்தது. சில மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சில கார்களின் தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்டிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.

    அந்த வரிசையில் மாருதி ஜிம்னி மாடலின் சீட்டா AT, ஆல்ஃபா AT மற்றும் ஆல்ஃபா AT டூயல் டோன் போன்ற மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி.-இன் மற்ற வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    விலை மாற்றம் காரணமாக மாருதி ஜிம்னி விலை தற்போது ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர், K15B பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாக தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் eVX மாடலை 2025 வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில், மாருதி eVX மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களின் படி மாருதி eVX மாடலில் ADAS சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மாருதி eVX கார் அறிமுகமாகும் போதே ADAS வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், ADAS லெவல் 1 அல்லது லெவல் 2 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

     


    இந்த காரில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், கன்மெட்டல் நிறம் கொண்ட மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டர்கள், சி பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது. முன்னதாக eVX மாடல் 2023 ஜப்பான் மொபிலிட்டி விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    • எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும்.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தயர்போது எர்டிகா மற்றும் XL6 என இரண்டு எம்.பி.வி. கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் XL6 மாடல் ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய எம்.பி.வி. மாடல் ஆகும்.

    7 சீட்டர் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     


    இரண்டு கார்களில் ஒன்று மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும். இது எர்டிகா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சுசுகி ஸ்பேசியா மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த கார் அளவில் 4 மீட்டர் நீளமாகவும், சற்றே வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர காரின் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவம் கொண்டிருக்கும். புதிய YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இந்த கார் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    கிரான்ட் விட்டாரா சார்ந்த 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை மாருதி சுசுகி உருவாக்கி வருகிறது. இந்த கார் Y17 எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இது சுசுகியின் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கிரான்ட் விட்டாரா மாடலும் உருவாக்கப்பட்டது. 

    ×