search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mark Zuckerberg"

    • மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
    • இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது

    2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).

    உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

    தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

    நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

    இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

    சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

    இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

    இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
    • இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகுக்கிறது.

    தற்போது இரவு 8.30 மணியில் இருந்து உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மெதுவாக உள்ளதாகவும், பலரும் அப்ளிகேஷனை ஓபன் செய்ய முடியாமலும் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.

    இதை அந்நிறுவனம் வேகமாக சரி செய்ய வேண்டும் என்று மக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியவாறு உள்ளனர். 

    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஜாம்நகர் வந்துள்ளார்.

    தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு ராதிகா மெர்ச்சன்ட் உடன் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது மனைவியுடன் ஜாம்நகர் வந்துள்ளார்.

    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மார்க் ஜூக்கர்பர்க் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

    முன்னதாக ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்த அம்பானி குடும்பம், திருமண நிகழ்ச்சிகளின் அங்கமாக 51 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்தது. இதில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

    • செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, ஜுக்கர்பெர்கிடம் "மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்
    • டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் உள்ளன

    உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).

    நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.

    இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

    விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.


    குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.

    அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.

    அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

    நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.

    இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.

    சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

    இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.


    மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.

    அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.

    • 2008லிருந்து 2022 வரை தலைமை இயக்க அதிகாரியாக பணி புரிந்தார்
    • வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுவதாக ஷெரில் தெரிவித்தார்

    மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவன முன்னாள் தலைமை இயக்க அதிகாரி (Chief Operating Officer) ஷெரில் சாண்ட்பர்க்.

    தற்போது 54 வயதாகும் (Sheryl Sandberg) 2008லிருந்து 2022 வரை மெட்டா தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பேற்று நிறுவனத்தை வழிநடத்தினார்.

    வரும் மே மாதம், மெட்டா நிர்வாக இயக்குனர்கள் குழுவில் ஷெரிலின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஷெரில் மெட்டா நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    தனது ஃபேஸ்புக் பதிவில் இது குறித்து ஷெரில், "வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படும். எனவே, இது பிறருக்கு வழி விட சரியான தருணம். மெட்டாவிற்கு ஆலோசனை கூற எப்போதும் தயாராக உள்ளேன். ஜுகர்பர்கிற்கும் பிற நிர்வாக இயக்குனர்களுக்கும் நன்றி" என பதிவிட்டார்.

    ஷெரில் முடிவிற்கு மெட்டா நிறுவனர், மார்க் ஜுகர்பர்க் (Mark Zuckerberg) "ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம்" என பதிலளித்தார்.

    சுமார் 12 வருட காலம் மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஷெரில், தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் 14 வருட காலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட்டா நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஷெரில், ஃபேஸ்புக்கில் விளம்பர வருவாயை ஊக்குவிக்கும் தற்போதைய வடிவமைப்பை கொண்டு வந்தவர். ஃபேஸ்புக் தள உள்ளடக்கத்தில் பல சர்ச்சைக்குரிய சிக்கல்கள் எழுந்த போது அவற்றை சரி செய்து நிறுவன நற்பெயரை காப்பாற்ற பல முடிவுகளை எடுத்தவர்.

    ஷெரில் சாண்ட்பர்கின் நிகர சொத்து மதிப்பு, சுமார் $1.9 பில்லியன் என்கிறது பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

    • உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.
    • பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவரும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில் மாடுகளை வளர்க்க தொடங்கி உள்ளேன். உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.

    மார்க் ஜூக்கர்பெர்க்கின் பண்ணையில் மாடுகளுக்கு மக்காடாமியா உணவுகளை சாப்பிட கொடுப்பதாகவும், குடிப்பதற்கு பீர் வழங்குவதாகவும் கூறி உள்ளார். மேலும் மாடுகளுக்கான பீர் பண்ணையிலேயே உருவாக்கப்பட்டு கொடுக்கப்படுவதாகவும், பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
    • சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.

    அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.

    எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

    இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.

    இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

    எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.

    "கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.

    செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
    • எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்

    செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.

    இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.

    உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.

    இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.

    இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-

    தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.

    இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-

    நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.

    இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.

    இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

    • திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர்.
    • திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது.

    திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார்.

    அத்துடன், திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    பில் கேட்சின் பதிவுக்கு ரியாக்ட் செய்துள்ள மார்க் ஜூக்கர்பர்க், ஆப்-ல் இணைந்தது நல்ல முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.

    • பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
    • மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.

    திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.

    இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது. 

    • ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
    • திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.

    டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

     

    திரெட்ஸ் தொடக்கம்:

    கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

     

    பாடுபடும் டுவிட்டர்:

    டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

    இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

     

    மார்க் விருப்பம்:

    இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

     

    போட்டி நிறுவன சேவைகள்:

    புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.

    எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.

    • மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
    • சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.

    இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

    ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    ×