search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interview"

    • ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது
    • விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார். 

    மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.  48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.

    நடிகை ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது :-




    எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்பு, அவமானங்களை நான் சந்தித்தேன். ஏமாற்றம், மனச்சோர்வு அடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

    நான் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.

    இந்நிலையில் ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது. ஒரு புகைப்படக்கலைஞர் என்னை படம் எடுத்தார். அதன் மூலம் பேஷன் துறைக்கு அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.



    நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. அதன்பின் முயற்சி செய்து நடித்து பிரபலமானேன்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பாகுபாடு காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒரு அடி கூட பின்வாங்க மனமில்லை.




    நான் வெற்றி பெற்ற பிறகு, என்னை பலர் பாராட்டினர். எனது விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான் ஒரு வலிமையான சுதந்திர பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஆடம்பர பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக 'ஜெட்' விமானம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
    • பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

    நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
    • மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ்-2023 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

    27 வயதான கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பரவூரை சேர்ந்த திருநங்கை தீர்த்தா என்பவரும் பங்கேற்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பொது அறிவு, நடத்தை மற்றும் திட்டங்கள் தயாரிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டி மொத்தம் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதியில் அந்த போட்டியில் கேரள திருநங்கை தீர்த்தா வெற்றி பெற்று கர்வி மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். திருநங்கை என்பதால் அவர் பள்ளி நாட்களில் பல்வேறு கேலிகளை சந்தித்துள்ளார். 

    பள்ளி வாழ்க்கையை போன்று கல்லூரியில் என்ஜினீயரிங் படித்த போதும் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்து இருக்கிறார். அதன் மத்தியில் படித்து என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். கடைசியாக தனது தோழிகள் சிலருடன் குடியேறினார்.

    அவர்களின் மூலமாகவே மெட்ரோவில் தீர்த்தாவுக்கு வேலை கிடைத்தது. 2020-ல் தான் பாலியல் அறுவை சிகிச்சை அவருக்கு முழுமையான முடிந்திருக்கிறது. தன்னை கேலி பேசியவர்கள் மத்தியில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்பதை தீர்த்தா தனது நோக்கமாக கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதுவே தன்னை திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் போட்டியில் பட்டத்தை வெல்ல செய்திருக்கிறது என்று தீர்த்தா தெரிவித்திருக்கிறார். தனக்கு சினிமாவில் நடிப்பது, தனது வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரிக்கும் புத்தகம் எழுதுவது என்ற இரு கனவுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
    • ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், எம்மிகானூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எர்ரகொட்டா சென்ன கேசவலு ரெட்டி. இவர் நேற்று தனது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர் பெருநகரங்களில் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள லேப்டாப், டேப் செல்போன் வழங்கப்படுகிறது.

    இதனால் மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை கூறுவது நியாயமானது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குயின்ஹில்ஸ் பகுதி தடுப்புச்சுவர், மவுண்ட்பிளசன்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சுற்று லாத்துறை அமைச்சர்

    கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    பின்னர், நீலகிரி எம்.பி. ஆ,ராசா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தயாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
    • 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழக வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முறையானபடி கிடைக்கி றதா? பண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் சரியானபடி கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நெசவாளர் கண்காட்சி விற்பனை கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்றேன்.

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதி இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி னார். மேலும் அகதிகள் முகாம் என்று கூறாமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்க வலியுறுத்தினார். அந்த வகையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை.

    கடந்தஆண்டு முதல் கட்டமாக 3500 வீடுகளும், 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகளும், மொத்தத்தில் 7000 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 320 குடும்பங்கள் உள்ளன, இந்த பகுதியில் இடத்திற்கு தகுந்தாற்போல 280 வீடுகள் கட்டப்பட உள்ளது.

    அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் உதவிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளிலும் பொருட்கள் தவறாமல் வழங்குகிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் சரியாக கிடைக்கி றதா? என நேரிடையாக சென்று ஆய்வு செய்து வரும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி இங்கு வந்துள்ளேன். இந்த பகுதியில் 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை கோரி விண்ணப்பம் செய்யுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது 3 கப்பல்களில், 172 கோடி மதிப்பீட்டில் மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உதவி செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சாமிபிள்ளை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • திருநங்கையருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் சார்ந்த புதிய கற்றல் செயல்முறையாகவும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையருடன் மாண வர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திருநங்கை பட்டதாரி ரதிமீனா, யாஷிகா, ரகசியா, குபேரன் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளிடம் கலந்துரையாடினர்.

    திருநங்கையர் குழுத் தலைவி ரதிமீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில்

    "திருநங்கை"என்ற சொல்லை முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாம் பாலினத்த வர்க்காக உருவாக்கிய விதம் குறித்தும் திருநங்கைகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்ட விளிம்புநிலையினராய் இருந்த திருநங்கையர் வாழ்வை மறுமலர்ச்சி பெறச் செய்தமை குறித்தும் பேசினர்.

    எங்களைப்போன்ற வர்கள் வாழ்வில் சாதிக்கும் போது உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்த முதுகலைத் தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில்நா ம் வணங்கும் ஆடல்வல்லான் சிவபெரு மானே சிவமும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர ராகவே இருந்து பெண்ணுக்குள் ஆண்மையும் ஆணுக்குள் தாய்மையும் உறைவதை உணர்த்துகிறார்.

    எல்லாக் குழந்தைகளும் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கின்றனர்.

    வளரும்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக திருநங்கையர் களாக அடையாளப்ப டுகின்றனர்.

    நவீன அறிவியல் யுகத்தில் இம்மாற்றங்களைப் பெற்றோர்கள் முன்னரே அடையாளம் கண்டு உரிய நேரத்தில் உரிய முறையில் ஹார்மோன் சிகிச்சை அளித்தால் இதனைத் தொடக்கத்திலேயே சரி செய்யலாம் என்றார்.

    மாணவர்கள் நேரிடை யாக திருநங்கையருடைய வாழ்க்கைச்சூழல், கல்விநிலை குறித்தும் திருநங்கையரிடமே நேர்காணல் நிகழ்த்தினர். மாணவர்கள் வினவிய அனைத்துக் கேள்விகளுக்கும் திருநங்கையர் எதார்த்தமான பதில்களை வழங்கினர்.

    முடிவில் பட்டதாரித் தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என அறிவிப்பு

    சூலூர்,

    சூலூர் அருகே மது விலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இருகூர் பேரூராட்சி பகுதியில் 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஒண்டிப்புதூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து குளங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் திட்டத்தில் பட்டணம்புதூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 125 எச்பி மின் திறன் உள்ள மோட்டார்க்கு இலவச மின்சாரம் அளித்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    செட்டிபாளையம் அருகே உள்ள காடு குட்டைக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை கொண்டு செல்லும் குழாயை திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து செலக்கரிச்சல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து சுமார் 100 பயனாளிகளுக்கு 10 கிலோ விதம் அரிசி மூட்டைகள் வழங்கினார்.

    இதனை அடுத்து சுல்தான்பேட்டை அருகே வடவேடம்பட்டி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில் புதிதாக மது அருந்த வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு டாஸ்மாக் ஊழி யர்கள் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்தி னால் சன்மானம் வழங்கப்ப டும். முன் களப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஆலோசிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், சுல்தான்பேட்டை ஒன்றியகுழு துணைத் தலைவர் பாப்பம்பட்டி மனோகரன், கண்ணம்பா ளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜ கோபால், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார், கலங்கள் ஊராட்சி தலைவர் ரங்க நாதன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழி ல்நுட்ப பிரிவு துணைச் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து மாணிக்கம், செலக்கரச்சல் கிளைச் செயலாளர் தேவராஜ், கலங்கள் கிளைச் செயலாளர் சிவக்குமார், கழிவுநீர் சுத்திகரிப்பு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சீனிவாசன், கண்ணம்பாளையம் நகர செயலாளர் விஸ்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜா வேலுச்சாமி, பாப்பம்பட்டி ராஜன், தொண்டரணி துணைத் தலைவர் ரமேஷ், ஆதி திராவிடர் நலப்பிரிவு மணி மோகன், வெங்கடேஷ் ஒன்றிய மாணவர் அணி, செலக்கரச்சல் ஆறு சாமி, குப்புசாமி, கோவிந்தராஜ் சிவக்குமார் உள்ளிட்டோர் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

    • 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
    • மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

    கடலூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இதில் வட்டார இயக்க மேலாளர் சத்திய நாராயணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அருண் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பணிச்சுமையை ஈடுசெய்யும் வகையில் போலீசாருக்கு ஓய்வு
    • 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்

    கோவை.

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில், ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி வாரத்திற்கு ஒரு முறை போலீசாருக்கு விடுமுைற அளித்து வருகிறோம்.

    தீபாவளி போன்ற முக்கியமான நேரங்க ளில் சாலைகளில் வாக னங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், கடைத்தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஒரு சில நாட்களில் மட்டும் சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க இருக்க வாய்ப்புள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் போலீசாருக்கு ஓய்வு வழங்கப்படும்.

    மேலும் ஒப்பணக்கார வீதியில், கோவை மாநகர போக்குவரத்து போலீ சாருக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தீபாவளியை முன்னி ட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக கடை உரிமையாளர்கள் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதற்கான பாதுகாப்பை போலீஸ் வழங்கும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.

    ஓப்பணக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்டா டேட்டா என்ற புதிய தொழில்நுட்பத்துடனான 110 காமிராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கூடுதலாக 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த காமிராக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்த நவீன காமிராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும் தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

    இதுதவிர மக்கள் கூடும் இடஙகளில் கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கி வைத்தார்
    • வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம் என்று பேச்சு

    கோவை,

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு காணொலி மூலம் தொட ங்கி வைத்தார்.

    அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் நடந்த நடைபயிற்சியை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.

    நடை பயிற்சியை முடிந்த பின்னர் அமைச்சர் முத்து சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது ஏதோ ஒரு திட்டம் அல்ல. நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம்.

    கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயிற்சி மேற்கொள் வோர்கள் பெரிய எண்ணி க்கையில் இருந்தாலும் சாதாரண மக்களும் அதில் பங்கேற்று நடப்பதற்கு தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அரசு பல்வேறு திட்ட ங்களை செய்திருக்கும் நிலையில் இவை அனைத்துமே மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் இரு க்கும் சில பிரச்சனை களை தீர்ப்பதற்காக நடவடி க்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்போம் நலம் பெறுவோம் என்ற இந்த திட்டத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பேர் இதனை பயன்ப டுத்தினால் நிச்சயமாக ஆயிரம் பேர் பயன்படுத்து வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மற்ற நாட்களிலும் இதனை பயன்படுத்தி கொள்வதில் எந்த தவறும் கிடையாது.

    இந்த நடைபயிற்சிக்கு அரசு சார்பாகவும் போலீஸ் துறை சார்பாகவும் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார்கள். மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நடைபயிற்சியில், மாவட்ட கலெக்ட கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க. மாவட்ட செயலா ளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், இரா.சொ.ராமசாமி மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மாநகர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.
    • நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும், நகராட்சி ஆணையாளர், பொறியா ளர்கள் கூட்டத்திற்கு வராதது தொடர்பாகவும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

    இதனால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சி லர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயம் தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் என்பவர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசினார்.

    இந்த நிலையில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அ.தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அலுவலக நுழைவு வாயில் உள்பட அனைத்து இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.

    அவர்களை போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினரை கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.. இதேபோல் 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வெளியில் வர மறுத்ததால் போலீசார் கவுன்சிலர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று தயாராக நிறுத்தி வைத்திருந்த வேனில் ஏற்றி கைது செய்தனர்.

    பின்னர் அவர்களும், அ.தி.மு.க.வினர் வைக்கப்பட்ட மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் நகரமே சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மேட்டுப்பாளையம் விரைந்தார். அங்கு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பேசினர். அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல முறை கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய எந்த பிரச்சினையின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது மக்கள் பிரச்சினைகளை கேட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது தி.மு.க.வினர் நாற்காலியை தூக்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாருமே இதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களுக்காக குரல் கொடுத்த அ.தி.முக.கவுன்சிலர்களை கைது செய்துள்ளனர். அதிகாரத்தால் அ.தி.மு.கவை அடக்கி ஒடுக்கி முடக்கி விடலாம் என்று தி.மு.க. நினைக்க வேண டாம். அது ஒருபோதும் நடக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இரவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விடுவிக்கவில்லை.

    இந்த நிலையில் நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    ×