search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள்   சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுகோள்
    X

    மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுகோள்

    • ரேஷன் கடை–களில் காலி–யாக உள்ள 191 விற்–ப–னை–யா–ளர் மற்–றும் 19 கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் நடைபெறுகிறது.
    • இந்த நிலையில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான சங்கங்களில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 191 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்க ளுக்கு வழிகாட்டு நெறி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

    தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் தகுதி வாய்ந்த அரசு மருத்து வரால் வழங்கப்பட்ட மாற்றுத்தி றனாளி சான்றி தழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை நாமக்கல் கூட்டுறவு ஒன்றியம் மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×