என் மலர்
நீங்கள் தேடியது "Hanuma Vihari"
- உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார்.
- விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா - மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவருக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில், விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆந்திரா அணி வீரர்கள் ரிக்கி புய் (149) மற்றும் கரண் ஷிண்டே (110) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இவர்கள் இரண்டு பேரும் அவுட் ஆனதற்கு பிறகு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
Hanuma vihari batting with left hand due to the fracture of his wrist pic.twitter.com/qywEd31S5o
— cric_mawa (@cric_mawa_twts) February 1, 2023
இதனால் 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில்தான் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதுமாக டேப் செய்யப்பட்ட நிலையில் ஒரு கையை மட்டுமே உபயோகித்து விளையாடினார்.
விஹாரி கிட்டத்தட்ட பத்து ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 9-வது இடத்தில் இருந்த லலித் மோகனுடன், பார்ட்னர்ஷிப்பில் ஸ்கோரின் பெரும்பகுதியைச் செய்தார். ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.
சிட்னியில், ஆர் அஷ்வினுடன் இணைந்து இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டியை காப்பாற்ற விஹாரி கிழிந்த தொடை எலும்புடன் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
அடுத்து ஹனுமா விஹாரி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையர் ஏலத்திற்கு வந்தார். இவருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது. பிரசாந்த் சோப்ரா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோப்ரா 17 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.
விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ‘பி’ 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்பானி, பப்பு ராய் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் சமர்த், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமர்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரகானே உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ரகானே 32 ரன்களிலும், ஷுப்மான் கில் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் 39 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்னிலும் வெளியேறிய பின்னர், இந்தியா ‘ஏ’ அணி தடுமாற ஆரம்பித்தது. இஷான் கிஷன் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ 48.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா ‘பி’ 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்ததால் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்னுக்கு மேல் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். களம் இறங்கி பந்தை சந்திக்கும்போது சற்று திணறிய விஹாரி, அதன்பின் சிறப்பாக விளையாடினார்.

இன்-ஸ்விங் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி டிப்ஸ் வழங்கினார் என விஹாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஹாரி கூறுகையில் ‘‘மேக மூட்டமாகவும், அதே சமயத்தில் ஸ்டூவர் பிராட், ஆண்டர்சன் ஆகிய தலைசிறந்த பவுலர்கள் பந்து வீசியதாலும் தொடக்கத்தில் நான் நெருக்கடியில் இருப்பதாக உணர்ந்தேன். சில பந்துகளை சந்தித்த பிறகு, நெருக்கடி எளிதானது. ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாடியது முக்கியமானது.
நெருக்கடி இருந்ததால் என்னுடைய முடிவுகள் சரியாக அமையவில்லை. ஆனால், மறுமுனையில் விளையாடிய விராட் கோலி என்னுடைய வேலையை எளிதாக்கினார். இன்-ஸ்விங் பந்தில் தான் தடுமாறினேன். அப்போது விராட் கோலி எனக்கு சில டிப்ஸ்களை வழங்கினார். இது என்னை வசதியாக விளையாட உதவியது’’ என்றார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அறிமுக வீரரான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள ராகுல் டிராவிட், கங்குலியுடன் இணைந்துள்ளார்.

இதற்கு முன் 1946-ல் ருசி மோடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்துள்ளார். 1996-ல் கங்கு 131 ரன்களும், ராகுல் டிராவிட் 95 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது நான்காவது வீரராக ஹனுமான் விஹாரி 56 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த 6-வது வீரர் ஹனுமான் விஹாரி ஆவார்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜடேஜே உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை இந்தியா 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார்.
தொடர்ந்து விளையாடிய விஹாரி மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தனர்.

அடுத்து இஷாந்த் ஷர்மா களம் இறங்கினார். இவர் ஜடேஜாவுடன் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் இன்னிங்சில் 92 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா பந்தில் குக் கொடுத்த கேட்சை ரகானே பிடிக்க தவறினார். அடுத்த 2-வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் மொயீன் அலி அடித்த பந்தை விராட் கோலி பிடிக்க தவறினார்.

கண்டத்தில் இருந்து தப்பிய இருவரும் அதன்பின் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அலஸ்டைர் குக் 139 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 59 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 66 ரன்னுடனும், மொயீன் அலி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார்.

ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.