search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuma Vihari"

    • விஹாரியின் அனுபவத்தை மனதில் வைத்து நாங்கள் அவரைத் தக்க வைத்துக் கொண்டோம்.
    • இருப்பினும், விஹாரி சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது.

    நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி திடீரென அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதன்பின் அந்த அணி மத்திய பிரதேச அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின், அந்த அணியின் ஹனுமா விஹாரி தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், இதனால் இனி ஆந்திரா அணிக்காக விளையடப்போவதில்லை என்றும் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மகனுக்காக தன்னுடைய கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    அதன்பின் சம்மந்தப்பட்ட அரசியல்வாதியின் மகன் பிரித்வி ராஜ், "நீங்கள் தேடும் வீரர் நான் தான். ஹனுமா விஹாரி கூறிய குற்றச்சாட்டுகள் பொய். இதுபோன்ற அனுதாப விளையாட்டுக்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடுங்கள்" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். இந்நிலையில்தான் தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என சக வீரர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஹனுமா விஹாரி வெளியிட்டார்.

    இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்கம், "சில வீரர்கள் வந்து செல்வதால் உள்ளூர் வீரர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர் என வீரர்களின் பெற்றோர்கள் எங்கள் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளனர். ஆனால் விஹாரியின் அனுபவத்தை மனதில் வைத்து நாங்கள் அவரைத் தக்க வைத்துக் கொண்டோம். இருப்பினும், விஹாரி சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது.

    கேப்டனாக தொடர அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஆதரவு தெரிவித்த போதிலும், தான் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஹனுமா விஹாரி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் விஹாரி மீது ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக புகாரளித்துள்ளார்கள். இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி பிசிசிஐக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

    • ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
    • சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

    ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

    அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

     

    அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."



    "ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."

    "அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.



    • கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் அடித்துள்ளார்.

    30 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்பினார். ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வரும் அவர் ஏழு இன்னிங்சில 365 ரன்கள் அடித்துள்ளார்.

    தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் "நான் இந்திய அணியில் இல்லாததை கவலையாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.

    தற்போது என்னுடைய பணி ரஞ்சி தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். எனக்கும் அணிக்கும் இந்த சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய லட்சியம் அதிக ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்" என்றார்.

    ஹனுமா விஹாரி 2018-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார். அதில் முறையே 22 மற்றும் 11 ரன்கள் அடித்தார்.

    இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் அடித்துள்ளார்.

    • உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார்.
    • விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

    ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா - மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவருக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதனால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில், விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

    ஆந்திரா அணி வீரர்கள் ரிக்கி புய் (149) மற்றும் கரண் ஷிண்டே (110) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இவர்கள் இரண்டு பேரும் அவுட் ஆனதற்கு பிறகு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.


    இதனால் 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில்தான் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதுமாக டேப் செய்யப்பட்ட நிலையில் ஒரு கையை மட்டுமே உபயோகித்து விளையாடினார்.

    விஹாரி கிட்டத்தட்ட பத்து ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 9-வது இடத்தில் இருந்த லலித் மோகனுடன், பார்ட்னர்ஷிப்பில் ஸ்கோரின் பெரும்பகுதியைச் செய்தார். ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.

    சிட்னியில், ஆர் அஷ்வினுடன் இணைந்து இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டியை காப்பாற்ற விஹாரி கிழிந்த தொடை எலும்புடன் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

    ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கார்லஸ் பிராத்வைட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங்கிற்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவரை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் ஏலம் போகவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் ஏலத்தில் ஹனுமா விஹாரி 2 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையர் 4.20 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டார்கள். #IPL2019 #IPLAuction2019
    2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வீரராக மனோஜ் திவாரி ஏலம் விடப்பட்டார். இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

    அடுத்து ஹனுமா விஹாரி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையர் ஏலத்திற்கு வந்தார். இவருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ‘பி’ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #DeodharTrophy
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். நேற்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை இந்தியா ‘பி’ 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்று இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது. பிரசாந்த் சோப்ரா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோப்ரா 17 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.

    விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ‘பி’ 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்பானி, பப்பு ராய் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் சமர்த், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமர்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரகானே உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ரகானே 32 ரன்களிலும், ஷுப்மான் கில் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவ் 39 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்னிலும் வெளியேறிய பின்னர், இந்தியா ‘ஏ’ அணி தடுமாற ஆரம்பித்தது. இஷான் கிஷன் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ 48.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘பி’ 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்ததால் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    இன்ஸ்விங் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்ட நிலையில் விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கினார் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். #ENGvIND #HanumaVihari
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் 24 வயதான ஆந்திராவின் ஹனுமா விஹாரி இடம்பிடித்தார். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் விஹாரி, ஜடேஜா (86 நாட்அவுட்) இணைந்து சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார்.

    இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்னுக்கு மேல் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். களம் இறங்கி பந்தை சந்திக்கும்போது சற்று திணறிய விஹாரி, அதன்பின்  சிறப்பாக விளையாடினார்.



    இன்-ஸ்விங் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி டிப்ஸ் வழங்கினார் என விஹாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஹாரி கூறுகையில் ‘‘மேக மூட்டமாகவும், அதே சமயத்தில் ஸ்டூவர் பிராட், ஆண்டர்சன் ஆகிய தலைசிறந்த பவுலர்கள் பந்து வீசியதாலும் தொடக்கத்தில்  நான் நெருக்கடியில் இருப்பதாக உணர்ந்தேன். சில பந்துகளை சந்தித்த பிறகு, நெருக்கடி எளிதானது. ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாடியது முக்கியமானது.

    நெருக்கடி இருந்ததால் என்னுடைய முடிவுகள் சரியாக அமையவில்லை. ஆனால், மறுமுனையில் விளையாடிய விராட் கோலி என்னுடைய வேலையை எளிதாக்கினார். இன்-ஸ்விங் பந்தில் தான் தடுமாறினேன். அப்போது விராட் கோலி எனக்கு சில டிப்ஸ்களை வழங்கினார். இது என்னை வசதியாக விளையாட உதவியது’’ என்றார்.
    ஓவல் டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம் அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த சாதனையில் டிராவிட், கங்குலியுடன் இணைந்தார் விஹாரி. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து 332 ரன்களில் ஆல்அவுட் ஆனதும், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அறிமுக வீரரான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள ராகுல் டிராவிட், கங்குலியுடன் இணைந்துள்ளார்.



    இதற்கு முன் 1946-ல் ருசி மோடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்துள்ளார். 1996-ல் கங்கு 131 ரன்களும், ராகுல் டிராவிட் 95 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது நான்காவது வீரராக ஹனுமான் விஹாரி 56 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த 6-வது வீரர் ஹனுமான் விஹாரி ஆவார்.
    புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜடேஜே உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை இந்தியா 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் புதுமுக வீரர் ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். ஜடேஜா போராடுகிறார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார்.

    தொடர்ந்து விளையாடிய விஹாரி மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தனர்.



    அடுத்து இஷாந்த் ஷர்மா களம் இறங்கினார். இவர் ஜடேஜாவுடன் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் இன்னிங்சில் 92 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    லண்டன் ஓவல் டெஸ்டில் அலஸ்டைர் குக், மொயீன் அலி நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா பந்தில் குக் கொடுத்த கேட்சை ரகானே பிடிக்க தவறினார். அடுத்த 2-வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் மொயீன் அலி அடித்த பந்தை விராட் கோலி பிடிக்க தவறினார்.



    கண்டத்தில் இருந்து தப்பிய இருவரும் அதன்பின் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அலஸ்டைர் குக் 139 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 59 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 66 ரன்னுடனும், மொயீன் அலி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×