search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HS Prannoy"

    • பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    • பிவி சிந்து 18-21, 21-13, 17-21 எனத் தோல்வியடைந்தார்.

    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 15 பேர் ஒன்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். அனைவரும் காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹாய் யுயி-ஐ 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து முதல் செட்டை 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கடுமையாக போராடினார். இருந்தபோதிலும் 17-21 என 3-வது செட்டை தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். பிவி சிந்து ஹாய் யுயி-ஐ ஆறு முறை எதிர்கொண்டுள்ளார். இதில் தற்போது முதன்முறையாக தோல்வியடைந்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    • பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரை தேதி வரை நடக்கிறது.

    ஓடென்ஸ்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரையும், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இந்த இரண்டு போட்டியில் இருந்தும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் 31 வயது இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் விலகி இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் முதுகு வலியுடன் ஆடி ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரனாய் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டுவதற்கு 2-3 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் இந்த போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய் பின்லாந்தின் கால்லே கோல்ஜோனெனுடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய் பின்லாந்தின் கால்லே கோல்ஜோனெனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் பிரனாய், சீனாவின் வெங் ஹாங் யாங் மோதினர்.
    • இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ரஜாவத் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் எச்.எஸ்.பிரனாய் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சீன வீரரான வெங் ஹாங் யாங்கை எதிர்கொள்கிறார்.

    • தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.
    • பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

    தைபே:

    தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

    38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனோய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.
    • இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    இந்தோனேசியா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.


    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
    • பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.

    சிங்கப்பூர்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

    பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரனோய் சீன வீரருடன் மோதினார்.
    • இதில் இந்தியாவின் பிரனோய் வென்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், சீனாவின் வெங் ஹாங்யாங்கை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். 2வது சுற்றை 21-13 என சீன வீரர் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் 21-18 என பிரனோய் வென்றார். இதன்மூலம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    ×