search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Convoy"

    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • பிரதமர் மோடி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
    • பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்தவர்.

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாயை இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பிரதமர் மோடியின் கான்வாய் வாரணாசியின் ருத்ராக்ஷ் செண்டர் வந்த போது, இந்த சம்பவம் அரங்கேறியது.

    பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்த கிருஷ்ண குமார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசியாப்பூரை சேர்ந்த கிருஷ்ண குமார், பிரதமர் மோடியின் கான்வாய் அருகே செல்ல முயன்ற நிலையில், பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரை விரைந்து சென்று பிடித்தனர். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர் ஓடி வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    "பா.ஜ.க. கட்சியின் மூத்த உறுப்பினர் பரத் குமாரின் மகன், கிருஷ்ண குமார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க விரும்பியுள்ளார்," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக வாரணாசியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்திருந்தார். இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் டிசம்பர் 2025 வாக்கில் நிறைவுபெறும் என்று தெரிகிறது.

    ×