search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17 பேர் பலி"

    உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #CoalMineBlast
    கியில்:

    கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

    தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #CoalMineBlast
    கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு ரோடு ஷோ நடத்திய ராகுல் மீண்டும் வயநாடுக்கு வந்து பிரசாரம் செய்வேன் என்று கூறி இருந்தார்.

    அதன்படி வருகிற 16, 17-ந்தேதிகளில் கேரளாவில் 2 நாட்கள் ராகுல் பிரசாரம் செய்ய உள்ளார். 16-ந்தேதி காலை டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் முதலில் காலை 10 மணிக்கு பத்மநாபபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.

    பிறகு பத்தனம்திட்டா செல்கிறார். அங்கு 11.30 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    மாலை 4 மணிக்கு ஆலப்புழை நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு பிரசாரம் செய்து பிறகு திருவனந்தபுரம் செல்கிறார். மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    திருவனந்தபுரம் பொதுக்கூட்டம் முடிந்ததும் கண்ணூருக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் காலை வயநாடு தொகுதிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    17-ந்தேதி (புதன்கிழமை) முழுவதும் ராகுல் தனது வயநாடு தொகுதியில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அன்று காலை முதல் இரவு வரை வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார்.

    வயநாடு பாராளுமன்ற தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் எந்தெந்த தொகுதிகளுக்கு ராகுல் செல்வார் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    ஒரே நாளில் 7 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்ல இயலாது என்பதால் மீண்டும் ஒருமுறை வயநாடு தொகுதிக்கு செல்ல ராகுல் முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பேகேரா உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமேதி தொகுதியில் மனு தாக்கல் செய்ய சென்றபோது ராகுல் தலை மீது 7 தடவை லேசர் கதிர்வீச்சு குறியீடு காணப்பட்டது.

    பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த லேசர் மூலம் நீண்ட தொலைவில் இருந்து ராகுலை சுட்டுக்கொல்ல முயற்சிகள் நடந்து இருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்திய உள் துறைக்கு கடிதம் அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ராகுலுக்கு 16, 17-ந்தேதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ராகுல்காந்தி பேசும் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, பத்மநாபபுரம், ஆழப்புழை, வயநாடு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள் அருகே உள்ள பெரிய கட்டிடங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ராகுல் பேசும் இடம் அருகே இருக்கும் கட்டிடங்கள் அனைத்தையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதுதவிர ராகுல் அருகில் யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் கேரள மாநில போலீசார் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #LokSabhaElections2019 #RahulGandhi

    இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது. #LokSabhaElections2019
    திருச்சி:

    இந்தியாவில் அதிகமுறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்ற பெருமை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மநாபனுக்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 16-பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தவர் என்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த 105 வயது தாத்தாவிற்கு கிடைத்துள்ளது.

    தற்போது நடைபெற உள்ள தேர்தலோடு 17-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர் என்ற பெருமையையும் பெறப்போகிறார் இந்த 105 வயது தாத்தா.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் அருகே ராயவரம் என்ற குக்கிராமம் உள்ளது. இங்குதான் வசிக்கிறார் 105 வயதான பழனியப்பா தாத்தா. 1914-ம் வருடம் டிசம்பர் 19-ந்தேதி பிறந்த பழனியப்பா தாத்தா அந்த பகுதியில் அனைவராலும் அய்யா என்றும், தாத்தா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    பழனியப்பா வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்க தயாராகிறார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சந்தித்த 16 பாராளுமன்ற பொதுத்தேர்தல்களிலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற 15 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பழனியப்பா தாத்தா வாக்களித்துள்ளார்.



    இப்போது 17-வது பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட தயாராகி வருகிறார் பழனியப்பா. இவர் வசிக்கும் ராயபுரம் கிராமம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது. அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள பழனியப்பா, இளைஞர்களை தவறாமல் வாக்களிக்கும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

    105 வயதிலும் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லும் பழனியப்பா வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களிக்கிறார். பழனியப்பா தான் இந்தியாவிலேயே மிக வயதான வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வரும் அரசியல், சமூக நிகழ்வுகளை பார்த்து வரும் இவர் சுதந்திர இந்தியாவிற்கு பிறகு ஒரு தேர்தலில் கூட வாக்களிக்க தவறியதில்லை. இது குறித்து பழனியப்பாவின் பேரன் அருணாசலம் (60) கூறியதாவது:-

    எனது தாத்தா பழனியப்பனுக்கு 105 வயதாகிறது. தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை என்பதில் தாத்தா உறுதியாக இருப்பார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் நடந்து சென்றே வாக்களித்தார். இப்போதும் நடந்து சென்று தான் வாக்களிக்க உள்ளார்

    உடலை பராமரிப்பது, உணவு பழக்கம் கடைபிடிப்பது ஆகியவற்றில் இந்த பகுதி இளைஞர்களுக்கு தாத்தா பழனியப்பா முன்மாதிரியாக இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இந்த வயதிலும் தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சிக்கு செல்வார். அவரது வேலையை இப்போதும் அவரே செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு நூற்றாண்டை கடந்து விட்ட பழனியப்ப செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதுவும் டோனி என்றால் டி.வி. முன்பு இருந்து நகர மாட்டார். தற்போது நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை தினமும் இரவு பார்த்துவிட்டு தான் தூங்குகிறார் பழனியப்ப தாத்தா.

    12-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிபெறும் என்று கூறும் பழனியப்பா 17-வது பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது மட்டும் ரகசியம் என்கிறார். முன்பு இருந்த வாக்குச்சீட்டு முறையைவிட எலக்ட்ரானிக் மெசின் வாக்குப்பதிவு செய்ய எளிதாக உள்ளது என்று நவீன முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அனைவரும் வாக்களித்தால் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது தேர்வு செய்யப்படும் வேட்பாளர் தான் உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுதான் ஜனநாயகம். எனவே இளைஞர்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். ஜனநாயக கடமையாற்றுங்கள் என தாத்தா பழனியப்ப செட்டியார் கூறுகிறார்.

    வாக்களிப்பது மட்டுமல்ல சமூகப்பணியாற்றுவதும் ஒவ்வொரு இளைஞனின் கடமை என்று கூறும் பழனியப்ப செட்டியார். ஏலக்காய், தேயிலைத்தோட்டம் வைத்துள்ளார். பழைய மாணவர் சங்கம், பள்ளி பாலிடெக்னிக் கல்லூரி, திருக்கோவில் நிர்வாகத்தலைவர் என பல பொறுப்புகளை 105 வயதிலும் சுமக்கிறார். ரூ.2 கோடியில் பள்ளிக்கு சொந்த நிதியில் கட்டிடம் கட்டி கொடுத்தது, திருமயம் பஸ் நிலையத்தில் ரூ.2.05 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது என தன் வாழ்நாளில் உதவும் எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். #LokSabhaElections2019
    16 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், உபி மாநிலத்தை சேர்ந்த பக்கர் பாபா சாமியார், தொடர்ந்து 17வது முறையாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #LSpolls #Mathura #FakkarRamayani
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம்.

    பக்கர் பாபா பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வி அடைந்து வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கவில்லை.

    இந்நிலையில், உ.பி.யின் மதுரா பாராளுமன்ற தொகுதியில் 17வது முறையாக போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பக்கர் பாபா கூறுகையில், இது எனது 9-வது பாராளுமன்ற தேர்தல். மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். #LSpolls #Mathura #FakkarRamayani
    டெல்லியில் அர்பிட் பேலஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.



    இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.

    இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார்  ராகேஷ் கோயலை கைது செய்தனர். இன்று அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  #ArpitPalace #Delhifire #Delhihotelfire 
    மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் வெற்றி பெறவே உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. அதை கண்டித்து வருகிற 27-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளோம். மதுரையில் மேம்படுத்தப்பட உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் பெரியார் சிலையை வைக்க வேண்டும். மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத பிரதமர், மக்களால் எதிர்ப்பு வரும் என்பதால் அரசு விழாவை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர். #NigeriaAttacks
    அபுஜா:

    நைஜீரியாவில் கும்பல்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.



    தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சிலரது இறுதிச்சடங்கில் மாநில பொறுப்பு ஆளுநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். #NigeriaAttacks
    ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் பள்ளி பஸ் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் 13 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினர். #Flood #schoolbusflood

    ஷாரா மயீன்:

    ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் ஷாரா மயீன் என்ற சுற்றுலா தலத்துக்கு ஒரு பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 37 மாணவர்களும், 7 ஊழியர்கள் இருந்தனர். இவர்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர்.

    இவர்கள் ‘டெட் சீ’ எனப்படும் சாக்கடல் பகுதியில் சென்ற போது, திடீரென வந்த வெள்ளம் இவர்களது பஸ்சை அடித்துச் சென்றது. இதில் பஸ்சில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 13 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினர்.

    மீட்பு பணியில் ஜோர்டான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அண்டை நாடான இஸ்ரேலின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பக்ரைன் சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். #Flood #schoolbusflood

    அயனாவரம் சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறுமி கற்பழிப்பு தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் மற்றும் ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள்.

    இந்த வழக்கில் கைதான 17 பேரும் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    17 பேரும் ஜாமீன் கோரி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மனு தாக்கல் செய்தனர். மகளிர் கோர்ட்டு அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

    17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதன்படி கடந்த 5-ந்தேதி 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது விசாரணையை முடித்துள்ளார்.

    இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 300 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

    அந்த சிறுமியை 17 பேரும் 7 மாதங்களாக மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்கலாம்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டால் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய கிரிமினல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. போக்சோ சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இதில் 376 ஏ.பி. மற்றும் 376 டி.பி. ஆகிய 2 சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 17 பேருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கலாம்.  #ChennaiGirlHarassment #POCSOAct
    17 வயது சிறுமிக்கு திருமணமான சில மணி நேரத்தில் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக் கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்றுமுன்தினம் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை வீட்டினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்தார்.

    இதனால் திடுக்கிட்ட உறவினர்கள், புதுப்பெண்ணை கொளத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறக்கும், என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் சேர்த்தனர். அங்கு அன்று இரவு 9.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்ததும் புதுமாப்பிள்ளை வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான அன்றே புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 
    தேனாம்பேட்டையை சேர்ந்த சி.டி. மணி, 17 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை நகரில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ரவுடிகளும், வழிப்பறி செய்பவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ரவுடிகள் கைது வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி சி.டி.மணி. போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 8 கொலை வழக்கு உள்பட 31 வழக்குகள் உள்ளன. இவருடைய கூட்டாளிகள், அரி, அரிகரன் ஆகியோர் கானத்தூர் சாலையில் போலீசாரிடம் சிக்கினார்கள்.

    திருவான்மியூரில் தனசேகரன், பாரதி, செந்தமிழ்செல்வன், ராஜா ஆகிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் ஒரே நாளில் 18 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. #GoondasAct

    அயனாவரம் சிறுமி கற்பழிப்பில் கைதான 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் இருக்கும் நிலையில் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

    விசாரணை முடிவில் 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த 17 பேரும் முதன்முதலாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். எனவேதான் அவர்களின் காவல் நீட்டிப்பு விசாரணை நேற்று காணொலி மூலம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChennaiGirlHarassment #POCSOAct
     
    ×