search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17 Custody Extended"

    அயனாவரம் சிறுமி கற்பழிப்பில் கைதான 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் இருக்கும் நிலையில் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

    விசாரணை முடிவில் 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த 17 பேரும் முதன்முதலாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். எனவேதான் அவர்களின் காவல் நீட்டிப்பு விசாரணை நேற்று காணொலி மூலம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChennaiGirlHarassment #POCSOAct
     
    ×