search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 உயிர்களை பறித்த தீ விபத்து- டெல்லி ஓட்டல் உரிமையாளர் கைது
    X

    17 உயிர்களை பறித்த தீ விபத்து- டெல்லி ஓட்டல் உரிமையாளர் கைது

    டெல்லியில் அர்பிட் பேலஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.



    இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.

    இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார்  ராகேஷ் கோயலை கைது செய்தனர். இன்று அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  #ArpitPalace #Delhifire #Delhihotelfire 
    Next Story
    ×