என் மலர்
நீங்கள் தேடியது "வேட்பாளர்கள் நேர்காணல்"
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 17ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 19ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 20ம் தேதி நடக்கிறது.
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு 21ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 22ம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்.
- சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.
முதல் நாளான நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.
2-வது நாளான இன்று 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. காலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.
மாலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.
18 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #LSPolls #ADMK
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.

முதலாவதாக சேலம் தொகுதிக்கு தற்போது எம்.பி.யாக உள்ள பன்னீர் செல்வத்திடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதகம் குறித்து கேட்டறிந்தனர்.
மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். நாளை 12-ந்தேதி மீதமுள்ள 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. #LSPolls #ADMK #ADMKAlliance
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. #LSPolls #DMDK






