search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டியிட விரும்புகிறவர்களுடன் அதிமுக 2-வது நாளாக நேர்காணல்
    X

    போட்டியிட விரும்புகிறவர்களுடன் அதிமுக 2-வது நாளாக நேர்காணல்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று 2-வது நாளாக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.

    முதல் நாளான நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

    2-வது நாளான இன்று 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. காலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

    மாலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #LSPolls #ADMK
    Next Story
    ×