search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லார்ட்ஸ் டெஸ்ட்"

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி துல்லியமாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கித் திணறியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    அந்த அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 27 ரன்னும், ஹோட்ஜ் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    லார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்வி எதிரொலியாக தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். #GautamGambhir
    புதுடெல்லி :

    லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

    இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது பரவலாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. 

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் குறித்து இந்திய அணியின் மீது தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ’ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸ்களும் இந்திய அணிக்கு சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் அதில் இருந்து மீள இந்திய அணி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடாமல் ஆட்டம் மூன்று நாட்களிலேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி போராடி கடைசி நாள் வரை ஆட்டத்தை நகர்த்தி இருக்க வேண்டும் அதன் பிறகு முடிவு எப்படி அமைந்திருந்தாலும் பரவாயில்லை. இந்திய அணி தோல்வி அடைந்த விதம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இனி இந்தியாவால் தொடரை கைப்பற்றுவது கடினம் தான், எனினும் வரும் ஆட்டங்களில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி பேட்ஸ்மேன்களும் ரன் குவித்தால் இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியும். ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் நிலையில் களமிறக்குகிறோம் ஆனாலும் 193 எனும் இலக்கை நம்மால் துரத்த முடியவில்லை, எனவே இந்த இடத்தில் கண்டிப்பாக மாற்றம் செய்வது அவசியம் என நினைக்கிறேன்.

    அடுத்து வரும் ஆட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு போட்டியில் டிரா செய்தாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும்’ என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #GautamGambhir
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா படுதோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டத்துடன் வானிலையும் முக்கிய காரணம் என்பதை அலச வேண்டியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. ஆண்டர்சன், பிராட் ஆகியோரது பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்த போதிலும் சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இந்தியாவின் வெற்றியை பறிகொடுத்துவிட்டனர்.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி சில போட்டிகளில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கக் கூடிய மைதானம் ஆகும். இதனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு அணிகளும் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்ற பேச்சுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருப்பதுதான்.



    இந்நிலையில்தான் போட்டி நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. 2-வது நாளும் மழையால் ஆட்டம் தடைபெற்றது. இந்தியா ஆல்அவுட் ஆன 35.2 ஓவருடன் 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்கேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.



    இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரும் களம் இறங்கியதும், பேட்ஸ்மேன் சொதப்பலும்தான் தோல்விக்கு காரணம் என்று கடும் விமர்சனம் எழும்பியுள்ளது. உச்சக்கட்டமாக தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் பிசிசிஐ மோசமான ஆட்டம் குறித்து விளக்கம் கேட்க உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து யாரும் விமர்சனம் எழுப்பாத நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மீது பழிபோடுகிறார்கள். ஆனால், தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும்தானா? காரணம் என பார்க்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டில் வானிமை மையம் இந்தியாவிற்கு எதிராக தாண்டவம் ஆடியது. 2-வது நாள் மழை விட்டபிறகு ஆட்டம் தொடங்கியது. இந்தியா டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



    6 ஓவர்கள் போடுவதற்குள் மழை மீண்டும் குறுக்கீட்டது. இங்கிலாந்து ஆடுகளத்தில் மேகமூட்டமாக இருந்தாலோ, மழை விட்டுவிட்டு பெய்து ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தாலோ பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இந்தியா 107 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா ஆல்அவுட் ஆன பிறகு ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இதுபோன்ற வானிலை இருக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல எந்தவொரு நாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் இதே கதிதான், குறிப்பாக எங்கள் நாட்டு பேட்ஸ்மேன்கள் கூட நாங்கள் பந்து வீசினால் திணறிப் போவர்கள்’’ என்றார்.

    அதுபோகட்டும் 3-வது நாள் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது வெயில் சுல்லென்று அடித்தது. இதனால் 15 ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங் ஆகவில்லை. பந்து வேலை செய்யும்போது இந்தியா 131 ரன்னுக்கள் ஐந்துவிக்கெட்டுக்களை சாய்த்துவிட்டது. ரிவர்ஸ் ஸ்விங், சுழற்பந்து வீச்சுக்கு டர்ன் என எதுவுமே இல்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எளிதாக ரன் சேர்த்தனர். 24 டெஸ்டில் 863 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவரால் முதல் சதத்தை பதிவு செய்ய முடிந்தது.

    3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும். 39 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது.



    4-வது நாள் காலையில் வானிலை மேகமூட்டமாக இருந்ததால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டிக்ளேர் செய்தார். இந்தியா பேட்டிங் செய்யும்போது அவ்வப்போது சிறுசிறு மழைத்துளிகள் விழுந்த வண்ணம் இருந்தது. உணவு இடைவேளையின்போது மழை பெய்தது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து இந்தியாவை 130 ரன்களில் சுருட்டிவிட்டனர்.

    இதனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்கியது இந்தியா தோல்விக்கு காரணம் என்ற சொல்லிவிட இயலாது. வானிலை முக்கிய பங்கு வகித்தது. ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருந்திருக்கும்.

    இதனால் லார்ட்ஸ் டெஸ்டை வைத்து மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியை எடைபோடுவது சரியாகுமா.....
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்சிஸ் படுதோல்வியடைந்ததால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.

    அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.



    7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அணியின் ஸ்கோர் 117-ஆக இருந்த போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டியா 26 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் ஆண்டர்சன் தாக்குதலில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

    இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 மட்டுமே அடித்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 

    இறுதிவரை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

    இன்ங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4  விக்கெட்டுக்களை கைப்பற்றினர். வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 66 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.



    அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னும் 56 ஓவர்கள் உள்ளது. கடைசி நாளான நாளையும் மீதமுள்ளது. இங்கிலாந்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் மழை அனுமதி அளித்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 137 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    கிறிஸ் வோக்ஸ் 137 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது வரை இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து தடுமாறி வருகிறது. #ENGvIND
    லண்டன் : 

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சொதப்ப தொடங்கியது. விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8, புஜாரா ஒரு ரன் என பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அதிகபட்சமாக அஷ்வின் 29 ரன்களும், கோலி 23 ரன்களும் அடித்தனர். இதனால், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில், ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தில் 7-வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜென்னிங்ஸ் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே குக், இஷாந்த் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.

    அடுத்து களமிறங்கிய போப் மற்றும் ரூட் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலந்து அணி 77 ரன்கள் குவித்திருந்த நிலையில் பாண்டியா வீசிய பந்தில் போப் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.


    தொடர்ந்து, ஷமி பந்து வீச்சில் 19 ரன் அடித்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, ஆட்டத்தின் உணவு இடைவேலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்திருந்தது.

    உணவு இடைவேலைக்கு பிறகு களமிறங்கிய பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் 22 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்த அவர் ஷமி பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

    இதனால், 31 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது, பெய்ஸ்டோவ் 20 ரன்களுடனும், வோக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுக்களையும், பாண்ட்யா மற்றும் இஷாந்த் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் லார்ட்ஸ் திருப்பி வழங்குகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாததால் முதல் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.



    இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்டின்போது மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது. அதன்பின் தற்போதுதான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையினால் தடைபட்டு வருகிறது.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

    2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை). 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் லார்ட்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் மோர்கன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் மைதானம் மிகவும் அற்புதமானது. ஈரப்பதம் மட்டுமல்ல, ஆடுகளம் சதுர வடிவில் இருக்கும். இது எப்போதுமே கடினமான விஷயம். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் போன்றுதான் லார்ட்ஸ் செயலாற்றும் என நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மிகப்பெரிய பங்காற்றும்.

    இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க ஆலோசனைகள் செய்யும். இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்காவிடில், அது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.



    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×