search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மழை"

    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று முதல் வானம் மேகமூட்டத்துடனும், சில நேரங்களில் லேசான மழையும் பெய்தது.

    இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனால் சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.

    • 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
    • சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

    மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.

    சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

    சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

    இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
    • நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் சராசரியாக 5 செ.மீ. வரை மழை பதிவாகியது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 17-ந்தேதி நள்ளிரவில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை வெளுத்து வாங்கியதை பார்க்க முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. பகலில் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்ட நிலையிலும், மாலையில் அப்படியே சீதோஷ்ண நிலை மாறியது. இரவு 8 மணிக்கு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததை பார்க்க முடிந்தது.

    அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதுதவிர, கோடம்பாக்கம், அயனாவரம், கொளத்தூர், ஐஸ்அவுஸ், டி ஜி பி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், குன்றத்தூர், மேற்கு தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் சராசரியாக 5 செ.மீ. வரை மழை பதிவாகியது.

    கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 19 நாட்களில் கிட்டத்தட்ட 10 நாட்கள் சென்னையில் மழை பெய்திருக்கிறது. இந்த காலகட்டங்களில் 3 அல்லது 4 முறை தான் மழை இருந்திருக்கும் என்றும், இதன் மூலம் கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி பெய்ய வேண்டிய மழை அளவான 4 சென்டி மீட்டரை விட 339 சதவீதம் அதிகமாக அதாவது, 17 செ.மீ. மழை கொட்டியுள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் பகலில் வெயில், மாலையில் மழை என்ற நிலை நேற்றும் அரங்கேறியது. இனி வரக்கூடிய நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு அவ்வப்போது இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் சென்னையில் இதுவரை இல்லாத மழைப்பொழிவாக இது உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • 12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம்,

    திருவொற்றியூர், தாம்பரம், சேலையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

    நேற்று காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, நள்ளிரவில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதைப்போல், 14 புறப்பாடு விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. கோழிக்கோடு மற்றும் டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் முறையே திருச்சி, பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    • 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.
    • வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.

    • அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன.
    • மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியுமாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங்களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த ஆண்டின் மதிப்பீட்டின் படி சென்னையில் 320 இடங்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்ட பணிகள் என்று கூறப்படுகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு உள்ளது. 4 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் போது தான் சவால்கள் ஏற்படும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    சேறாக மாறும் சாலை பகுதிகளில் மெட்ரோ வாட்டர், குடிநீர் வாரிய பணிகள் நடந்தால் மணல் அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

    அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன. எனவே நிறுவனங்களிடம் பணிகளின் தற்போதைய நிலை எப்போது முடிவடையும் என்பது பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை.
    • சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, எழும்பூர், பெரம்பூர், கெளத்தூர், வியாசர்பாடி, மாதவரம், புழல், அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சென்னை திருவொற்றியூர், எண்ணூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், கரூர், திருச்சி,நாகர்கோவில், திருப்பத்தூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கரூரில், குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளான ராஜேந்திரம், மருதூர், வதியம், அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கேட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் தயார் நிலையில் பேரிடமர் மீட்பு குழு.

    தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.
    • சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகளவில் பதிவானது. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.

    அந்த வகையில், தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறக்கும் விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    இதையடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன், பொது மக்களுக்கு குளிர்பானம், பழ வகைகளுடன் சுடச்சுட உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைத்தோம், என்றாலும் மழை பெய்து வானமே தண்ணீரை கொடுத்துவிட்டது. ஆனாலும், நாங்கள் சூடான சாப்பாடு கொடுக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தோம்."

    "நாம தண்ணீர் கொடுக்கும் முன், வானமே தண்ணீர் கொடுத்ததில் மகிழ்ச்சி. சூடு தணிப்பதில் அக்கறையுடன் இருக்கிறோம். சூரியன் மறைந்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. மழை பொழிகிறது. மழை பொழிந்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்," என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை.
    • தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழை.

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலா திடீர் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலையில் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை.
    • இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு நேர்மாறாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இருப்பினும், சென்னையை பொறுத்தவரையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    இதனால், மக்கள் வெகு நாட்களுக்கு பிறகு குளுமையான வானிலையை உணர்ந்தனர்.

    மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×