என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் மழை நீடிக்குமா..? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
    X

    சென்னையில் மழை நீடிக்குமா..? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

    • சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நாளை கிருஷ்ணகிரி, திருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றுடன் சென்னையில் மழை ஓயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×