என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கடஹர சதுர்த்தி"

    • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

    விநாயகப் பெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்காக மேற்கொள்ளும் விரதம் தான் சங்கடஹர சதுர்த்தி. நாம் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர சதுர்த்தியைத் தான் மஹா சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுவோம். ஆனால் மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை அப்படியே விட்டுவிடுவோம்.

    மஹாசங்கடஹர சதுர்த்தியைப் போலவே மாதம்தோறும் வரும் சதுர்த்தியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்து விநாயகரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

    குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அந்த வகையில், நாளை வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்...

    * சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.

    * வீடு வாசல் துடைத்து மாக்கோளமிட்டு பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

    * விநாயகரின் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து விளக்கேற்றி அவரது முகம் பார்த்து மனமுறுகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

    * பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால் காலை எழுந்தவுடன் விநாயகரின் முகம் பார்த்து தரிசித்து       மாலையில் சந்திரனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    * வேண்டுதலின் போது விநாயகருக்கு அருகம்புல் படைக்கலாம். விரதம் இருக்க முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம்.

    * விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம், முதலானவற்றை சாப்பிடலாம். இப்படியும் விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத பண்டம் முதலான எளிமையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

    * விரதத்தை முடிக்க மாலைப்பொழுதில் விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் சார்த்தி விநாயகருக்கு பிடித்த சுண்டல், கொழுக்கட்டை அல்லது மோதகம் முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம் .



    * பூஜையின் நிறைவில் உங்களால் முடிந்த பிரசாதத்தை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம்.

    * மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    * நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

    மேலும் சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், திருமணத் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும்.
    • திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

    மூல முழு முதற் கடவுளான கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சிவ பெருமானுக்கு உரிய விரதங்களில் பிரதோஷ விரதம் எப்படி உயர்வானதாக கருதப்படுகிறதோ, அதே போல் விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். 'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும். பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 1008 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.

    மேலும் இன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும். கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

    சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.

    • பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
    • திருமண தடை அகலும்.

    விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

    ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

    ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

    மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

    அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

    சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

    • சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    பல்லடம்:

    சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில், விநாயகப் பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இதே போல், பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 10-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.
    • 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும்.
    • இன்று விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதி.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மகம் நட்சத்திரம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவிற்கு உரிய தெய்வம் விநாயகர். இன்று விநாயகருக்கு உரிய திதி (சதுர்த்தி திதி). எனவே சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும். அதாவது நீங்கும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி தினம்.

    இன்று அதிகாலை நீராட வேண்டும். விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்த வேண்டும். கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, வெல்லம் முதலியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்து வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து நிலவை பார்த்த பின்னர் இரவு உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்.

    • புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்திதான் வழிபடுவார்கள்.
    • 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்திதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள்.
    • இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • 9 சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும்.

    மாசிமாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணியகாலத்தில் வரும் இந்த மாசி மாதத்தில் செய்யும் நோன்புகள், வழிபாடுகள் எல்லாம் பலமடங்கு பலன்களை அருளும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரதங்களைக் கடைப்பிடித்தால, ஆண்டுமுழுவதும் விரதங்களை கடைப்பிடித்த நற்பலன் கிடைக்கும். அப்படி இந்த மாதத்தின் இறுதியில் நமக்கு வாய்த்திருக்கிறது, சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

    சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.

    இன்று அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.

    வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

    ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

    • கணக்கபிள்ளைவலசையில் சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை கணக்கபிள்ளைவலசையில் சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டி ருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    இதே போன்று வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட சிவ பிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர் முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.செங்கோட்டை பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    பல்லடம்

    பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில்,சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×