என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம்"

    • அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது.
    • அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த சாரல் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.

    இதனால் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது,

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களுடன் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.
    • பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குவிந்தனர்.

    குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
    • மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் சாரல் மழை எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இந்நிலையில் நேற்று மாலை குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து மிகவும் அதிகரிக்க தொடங்கியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து வனப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் நேற்று மாலை முதல் இன்று வரை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று மெயின் அருவி மற்றும் ஐந்தருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    நேற்று இரவு மற்றும் இன்று காலையில் வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

    • அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்த நிலையில் சாரல் மழையின் எதிரொலியாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த ஒரு வார காலமாக போதிய மழை இல்லாமல் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா ஏற்பாடுகளும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலம் பஸ் நிலையம், குற்றாலம் பேரூராட்சி, தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில் மற்றும் தென்காசியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    குற்றாலத்தில் இன்று காலையில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம், தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
    • கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் முழுமையாக இருக்கும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தற்போது கேரளாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது.

    தொடர் தடைக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதியில் அமைந்திருக்கும் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் அதனை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மேலும் சிற்றாற்று தண்ணீர் மூலம் பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் அதனை நம்பி விவசாய பணியிலும் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர். 

    • ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை தடை நீடித்தது.

    இந்நிலையில் மலைப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளில் நீர் வரத்து சீரானது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் மெயினருவியில் இன்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஏற்கனவே பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை முதலே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 

    • தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை முதல் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஆழியார் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கனடி அடி நீர் வந்து கொண்டிருந்தது. 200 கன அடி நீர் பாசத்திற்காக திறந்து விடப்படுகிறது. மழை வலுக்கும்பட்சத்தில் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 4,334 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 4 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ஆற்றுக்கு குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதேபோல கோவை குற்றாலம் மற்றும் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படகுகளுக்கு வண்ணம் தீட்டும் பணி, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படகு குழாமில் தண்ணீர் சற்று அதிகரித்ததும் படகு சவாரி தொடங்கி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வந்ததும் அங்கு பொதுமக்கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர்.

    பேரூர்:

    கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும்.

    எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்துக்கு வந்திருந்து, அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை கோவை குற்றாலம் அருவியின் நீர்வரத்து அம்சங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து கோவை குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்து கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வந்ததும் அங்கு பொதுமக்கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் சொற்ப அளவியிலேயே விழுந்து வந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    ×