என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.
    • 16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும். இதை வைத்தே கண்ணன் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம். இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும். செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணெயினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள். குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராச லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப்பாடினார். இந்த காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக்குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • கருணையுடன் இருக்க வேண்டும்.
    • சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.

    நேர்மை, நல்லொழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுதல், அடக்கமாய் இருத்தல் போன்றவை ஆத்ம குணங்கள் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த ஆத்ம குணங்கள் அநேகம். அவற்றில் சில:-

    1. எல்லோரிடமும் பகையில்லாமல் (விரோதம்) இருக்க வேண்டும்.

    2. தனக்குத் தீங்கு செய்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.

    3. கருணையுடன் இருக்க வேண்டும்.

    4. அகங்கார, மமகாரம் (நான், என்னுடையது) இல்லா மல் இருக்க வேண்டும்.

    5. உடல் மீது ஆசை வைக்கக் கூடாது.

    6. சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.

    7. சோதனைகள் வரும்போது சகித்துக் கொள்ள வேண்டும்.

    8. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

    9. ஆத்மாவைத் தவிர மற்றவற்றில் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.

    10. சுத்தமான, சாத்விகமான ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும்.

    11. புகழ்தல், இகழ்தல் இரண்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்.

    12. பயப்படாமல் இருக்க வேண்டும். (அச்சம் கூடாது)

    13. மனம் தூய்மையாக இருக்க வேண்டும். நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

    14. பிறர் மனம் துன்புறுத்தாது பேச வேண்டும்.

    15. தெளிந்த உள்ளம் வேண்டும்.

    16. அடக்கமாய் இருக்க வேண்டும்.

    17. ஆடம்பரம் கூடாது.

    18. அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    19. பொறுமையுடன் இருக்க வேண்டும்.

    20. மனம், சரீரம், ஆத்மா, ஆடை, ஆகாரம் எல்லாம் சுத்தமாய் இருக்க வேண்டும்.

    21. எந்த காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்.

    • ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
    • நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
    • விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • பெருவயல் முருகப்பெருமான் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-20 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி இரவு 9.13 மணி வரை பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 3.24 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கோகுலாஷ்டமி. வைகாசன ஜெயந்தி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. பெருவயல் முருகப்பெருமான் பவனி. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-முயற்சி

    கடகம்-சுபம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-நட்பு

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- உவகை

    மகரம்-தெளிவு

    கும்பம்-விருத்தி

    மீனம்-பக்தி

    • அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான்.
    • சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள்.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது மார்க்கண்டேய முனிவர் திரவுபதிக்கு இந்த கதையை எடுத்துக்கூறுகிறார். அந்த கதையை நாம் இன்று தெரிந்துகொள்ளலாம்.

    ஒரு ஊரில் மத்திரநாடு என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லை. எனவே சாவித்ரி என்ற பெண் தெய்வத்தை வழிபட்டார். அந்த சாவித்திரி என்ற பெண் தெய்வத்தின் ஆசியாலும், சூரியபகவானின் அருளாளும், அசுபபதி மன்னனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தைக்கு சாவித்ரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள். அதேநேரத்தில் சாய்பு நாட்டை துய்மத்சேனன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னனுக்கு ஒரு மனைவியும், சத்தியவான் என்ற மகனும் இருந்தனர்.

    சத்தியவான் சிறுவதில் இருந்தே மிகுந்த பேரழகுடனும், வீரமுடனும் இருந்தார். ஒரு நாள் சாய்பு நாட்டு மன்னன் துய்மத்சேனனை எதிரிநாட்டு மன்னர்கள் போர்தொடுத்து வந்தனர். அந்த போரில் தோல்வி அடைந்த துய்மத்சேனன் எதிரிகளிடம் தன்னுடைய நாட்டை பறிகொடுத்ததோடு வாழவே வழி இல்லாமல் தன்னுடைய மனைவியையும், மகன் சத்தியாவானையும் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர்.

    சத்தியாவனும், அவருடைய அப்பா, அம்மாவும் காட்டில் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சத்தியவானின் அப்பாவிற்கும், அம்மாவிற்கு கண்பார்வை பறிபோனது. தினமும் சத்தியவான் காட்டில் கிடைக்கக்கூடிய விறகுகளை எடுத்து அதனை விற்று பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்.

    இப்போது சத்தியவானும், சாவித்திரியும் பருவ வயதை அடைந்து இருந்தனர். ஒரு நாள் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதிக்கவே உடனே தனது தோழிகளுடன் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க சென்றார்.

    தோழிகளுடன் காட்டை சுற்றிவரும்போது காட்டில் விறகுவெட்டிக்கொண்டிருந்த சத்தியவானை பார்த்தார். அதுமட்டுமல்லாமல் சத்தியவான் தனது தாய்-தந்தைக்கு ஆற்றிய தொண்டை கண்டு அவருடைய மனதை பறிகொடுத்தார். சாவித்ரிக்கு, சத்தியவான் மீது காதல் வந்தது.

    உடனே சாவித்ரி அரண்மணைக்கு சென்றதும் காட்டில் நடந்ததை தனது தந்தையிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல் சத்தியவானை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினார். அப்போது அங்கு நாரதமகரிஷி வந்தார். நாரதர் நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு சாவித்ரியின் தந்தையிடம், அரசே சத்தியவான் அர்ப்ப ஆயுள் உள்ளவன் என்று சொன்னதோட மட்டுமில்லாமல் இன்றில் இருந்து 12 மாதங்களில் அவன் இறந்துவிடுவான் என்றும் கூறினார் நாரதர்.

    இதைகேட்டதும் மன்னன் மிகுந்த அதிர்ச்சியுடன் சாவித்திரியை பார்த்தார். ஆனால் சாவித்ரி மனதால் நினைத்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாவித்ரி அப்பாவை பார்த்து அப்பா... நான் சத்தியவானை பார்த்ததுமே எனது மனதில் கணவனாக நினைத்துவிட்டேன். மணந்தால் சத்தியவானை தான் மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

    மகளின் உறுதியை கண்ட அசுபபதி அரசனும் திருமணத்திற்கு சம்மதித்தார். சத்தியவானுக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நடந்தது. அப்போது நாரத மகரிஷி சாவித்ரியிடம் சில நோன்பு முறைகளை சொல்லிக்கொடுத்தார். சாவித்ரி நீ உள் அன்புடன் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று கூறினார் நாரதர்.

    இப்போது திருமணம் முடிந்ததும் அரண்மணையை விட்டுவிட்டு சாவித்ரி, சத்யவான் கூட காட்டில் சென்று வாழ கிளம்பினாங்க. சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று தெரிந்தும் சாவித்ரி அதனை தனது கணவனிடம் தெரிவிக்கவே இல்லை. இப்படி நாட்கள் சென்றுகொண்டிருந்தன. இன்னும் சத்தியவான் இறப்பதற்கு 3 நாட்களே இருந்தன.

    3 நாட்களும் சாவித்ரி உணவும், உறக்கமும் இன்றி கடுமையாக விரதம் இருந்தார். 3-வது தனது கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சத்தியவான் இறக்கும் நாளும் வந்தது. சத்தியவான் இறக்கும் நாள் அன்று விறகு வெட்ட காட்டிற்கு சென்றுகொண்டிருந்த சத்தியவானிடம், சாவித்ரி இன்றைக்கு நானும் உங்களுடன் விறகு வெட்ட வருகிறேன் என்று கூறினார்.

    சத்தியவானும், சாவித்ரியை தன்னுடன் காட்டிற்கு அழைத்துச்சென்றார். சாவித்ரியை ஒரு மரத்தின் நிழலில் உட்கார வைத்துவிட்டு சத்தியவான் மட்டும் விறகுவெட்ட கிளம்பினார். கொஞ்சநேரத்திலேயே விறகுவெட்டிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு பயங்கரமான தலைவழி வந்தது. உடனே சத்தியவான், சாவித்ரி அருகில் வந்து அவரது மடியில் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சத்தியவானின் உயிர் பிரிந்தது.

    அங்குவந்த எமதர்மராஜா அவரை கவர்ந்து செல்ல வந்தார். பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எமதர்மன் கண்ணுக்கு தெரிந்தார். எமதர்மனை வணங்கிய சாவித்ரி தாங்கள் யார்? என்று கேட்டார். நான் எமதர்மராஜா என்று கூறினார். உடனே எமன் பெண்ணே உயிரிழந்த உன் கணவனின் உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்று கூறினார் எமன். உடனே சாவித்ரி அங்கிருந்து விலகி நின்றார்.

    சாவித்ரி, எமதர்மராஜாவை பார்த்து ஒரு அன்பு கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்களின் மாறாத விதி பிரிக்கவே கூடாது என்று எமதர்மராஜாவிடம் வேண்டினார். உடனே எமதர்மராஜாவும் சாவித்ரியை பார்த்து உத்தமியே உனது கணவன் சத்தியவானின் உயிரை தவிர்த்து 3 வரங்களை கேள் தருகிறேன் என்று கூறினார் எமதர்மன்.

    அதற்கு சாவித்ரி எமர்தர்மனிடம் தனது மாமனார்-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைக்க வேண்டும் என்றும், தனது தந்தைக்கு பிறகு அரசாள்வதற்கு ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்றும், போரில் பின்வாங்காத வீரமுடைய புதல்வர்கள் எனக்கு மகனாக வரவேண்டும் என்றும் கேட்டார்.

    சாவித்ரியின் சாமர்த்தியமான பேச்சைக்கேட்ட எமதர்மன் சிறிது யொசிக்காமல் அப்படியே ஆகட்டும். தந்தேன்.... என்று கூறிவிட்டு சத்தியவானின் உடலை எடுத்துக்கொண்டு எமலோகத்திற்கு சென்றார். சாவித்ரியும், எமதர்மராஜாவை தொடர்ந்து பின்னாடியே போனார்.

    எமதர்மராஜா, சாவித்ரியின் பொறுமையை கண்டு மீண்டும் மனம், இழகி சாவித்ரியை பார்த்து இன்னும் உனக்கு வரம் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு சாவித்ரி, எமதர்மராஜா... ஏற்கனவே நீங்கள் தந்த வரத்தில் புத்திரபாக்கியம் எனக்கு என் கணவன் இல்லாமல் எப்படி கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு எமதர்மராஜா தந்தேன்... என்று கூறிவிட்டு மறைந்தார்.

    அதன்பிறகு சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தார். சாவித்ரி பெற்ற வரத்தின்படி சாவித்ரிக்கும் அவரது மாமா-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைத்தது. சாவித்ரியின் தந்தைக்கு ஆண் வாரிசும் கிடைத்தது. சத்தியவானும், சாவித்ரியும் வீரமிக்க புதல்வர்களை பெற்று பல்லாண்டுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

    இந்த கதையில் நாம் புரிந்து கொண்டது என்ன என்றால் சத்தியவான், சாவித்ரியின் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் எமதர்மன் கூட ஆற்றல் அற்றவனாக மாறிவிடுவான் என்பதற்கு சத்தியவான், சாவித்ரி கதை சான்றாக உள்ளது.

    • ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
    • சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு.

    பூஜை அறையிலோ அல்லது தனிமையான இடத்திலோ அமர்ந்து, மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதுபற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்தி, மந்திர ஜெபம் செய்வதே சிறந்தது.

    * 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையையே ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கை மணி பயன்படுத்தப்படுகிறது.

    * ஜெபிப்பதற்காக மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.

    * தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான், மின்கடத்தா பொருட்களான தர்ப்பையும், கம்பளி துணியும் பயன்படுத்தப்படுகிறது.

    * ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாதபடி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

    * ஏதாவது ஒரு குருவிடம் தீட்சை பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்பார்கள்.

    * குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும், மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

    * எந்த ஒரு செயலையும் அதற்குரிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அதுபோல மந்திர ஜெபத்தை, அமைதியான இடத்தில் அமைதியாக சூழ்நிலையில் செய்ய வேண்டும்.

    * சந்தியா கால வேளை எனும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    • 6-ந்தேதி கோகுலாஷ்டமி
    • திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    5-ந்தேதி (செவ்வாய்)

    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    6-ந் தேதி (புதன்)

    * கோகுலாஷ்டமி.

    * திருப்பதி ஏழுமலையான் கலசாபிஷேகம்.

    * அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனை.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வியாழன்)

    * பாஞ்சராத்திர ஜெயந்தி,

    * வரகூர் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (வெள்ளி)

    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி சேவை.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்க பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (சனி)

    • மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்கார சேவை.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உற்சவம் ஆரம்பம்

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளித்தேரிலும் சுவாமி வீதிஉலா.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார், சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி சேவை

    * பிள்ளையார்பட்டி விநாயகர் பூத வாகனத்தில் வீதிஉலா.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-19 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி இரவு 9.41 மணி வரை பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.20 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மயிலாடுதுறை உத்திரமாயூரம் வள்ளலார் கோவில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆராய்ச்சி

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-திடம்

    கடகம்-புகழ்

    சிம்மம்-நன்மை

    கன்னி-உதவி

    துலாம்- வரவு

    விருச்சிகம்-பிரீதி

    தனுசு- வெற்றி

    மகரம்-மாற்றம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-செலவு

    • தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறப்பேன்.
    • 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான்.

    திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார்.

    அதன்படி போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை சந்தோசப்படுத்த 400 யானைகள், 15 ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள் என்று தேவகிக்கு சேசகம் செய்ய 200 பணிப்பெண்கள் என்று பிரம்மாண்டமாக திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வரும்போது கம்சனுக்கு ஒரு அசரிரீ ஒலிக்கிறது.

    அதில் கம்சா நீ உன் சகோதரிக்கு தேரோட்டி செல்கிறாய். ஆனால் இவளுடைய 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான் என்ற சத்தத்தை கேட்ட கம்சன் தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயற்சி செய்கிறான். உடனே தேவகியின் கணவரான வாசுதேவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு கம்சனே உனக்கு கேட்ட அந்த அசரிரீ உண்மை என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையை உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறோம். நீ என்னவேண்டுமோ செய்துகொள் என்று சொல்லி கம்சனிடம் இருந்து தேவகியின் உயிரை காப்பாற்றினார்.

    அதன்பிறகு தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. வாக்கு தவறாத வாசுதேவர் சொன்ன சொல்லை தவறாமல் குழந்தையை கம்சனிடம் கொடுத்தார். அதற்கு கம்சன் உன்னுடைய 8-வது குழந்தையால் தான் எனக்கு மரணம். இந்த குழந்தை தேவை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார். கிருஷ்ணரின் வருகைக்காக காத்திருக்க முடியாத நாரதர் வசுதேவர் உன்னை ஏமாற்றலாம் 7 வது குழந்தையை காட்டி இதுதான் 8-வது குழந்தை என்று கூறலாம். எனவே இருவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு. எந்த குழந்தையால் கூட உனக்கு ஆபத்து வரலாம் என்று கூறினார் நாரதர்.

    நாரதர் பேச்சை கேட்டு பயந்த நாரதர் எந்த குழந்தையையும் நம்ப முடியாது வரிசையாய் எல்லா குழந்தையையும் கொன்றுவிட எண்ணினார். அதற்கு முதலில் தன்னுடைய தந்தையான உக்கிரசேனனை சிறையில் அடைத்து அரசனாக முடிசூடிக்கொண்டார். அதன்பிறகு வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறந்த 6 ஆண்குழந்தைகளையும் வரிசையாக வதம் செய்தார்.

    தேவகி 7-வது முறையாக கர்பம் அடைந்தார். கிருஷ்ணருக்கு உதவியாக அனந்தனாகிய ஆதிசேஷன் தோன்றினார். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று எண்ணிய விஷ்ணுபகவான் தன்னுடைய யோக சக்தியால் தேவகியோட 7-வது கர்ப்பம் கோகுலத்தில் வாழும் வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினியின் வயிற்றுக்கு மாற்றப்படுகிறது.

    8-வது முறையாக ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர வம்சத்தில் விஷ்ணு பகவானே பூமாதேவிக்கு வாக்களித்தபடி பூலோகத்தில் பிறக்கிறார். அவர் பிறந்ததும் நான்கு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் வசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி கொடுத்தார்.

    வசுதேவரும், தேவகியும், கம்சனை பற்றிய பயம் துளியுமின்றி முழுமுதற்கடவுளான விஷ்ணுவை வணங்கினர். விஷ்ணு பகவான் கோகுலத்தில் உன் நண்பனான நந்தனுக்கும், அவனது மனைவி யசோதைக்கும் பிறந்த பெண்குழந்தையை எடுத்துவா நான் யசோதையின் மகனாய் கோகுலத்தில் வளர்கிறேன். உரிய காலம் வரும்போது கம்சனை வதம் செய்து உங்களையும் மீட்கிறேன் என்று கூறினார் விஷ்ணு.

    விஷ்ணுவும் சிறைகாவலர்களை மயக்கமடைய செய்து வசுதேவரின் மூலம் கோகுலத்தில் யசோதையின் மகனாக கிருஷ்ணர் வளர்கிறார். வசுதேவர் நந்தனின் மகளை மதுராவிற்கும் எடுத்து வந்துவிடுகிறார். சிறையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போகிறார்.

    என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று அந்த பெண்குழந்தையை எடுத்து சுவற்றில் அடிக்கும் போது விஷ்ணுவின் இளைய சகோதரி துர்க்கையின் வடிவத்தில் காட்சி தந்து உன்னை கொல்லப்போகும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று கூறிவிட்டு அந்த பெண்குழந்தை மாயமாக மறைந்தது.

    கிருஷ்ணர் கோகுலத்தில் மாயோண் கண்ணனாய் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த வெண்ணெய் திருடனாய், கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்து, ஆடிப்பாடி குழலூதி, நண்பர்களுடன் விளையாடி குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்து கோகுலத்திலேயே செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தார்.

    ராதையுடன் காதல்கொண்டு சிறுவயதிலேயே பிரம்மதேவர் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. 13 வயதில் தன்னுடைய தாய்மாமனான கம்சனை கிருஷ்ணர் வதம் செய்தார். ராதைக்கும் அயன்கூட திருமணம் நடக்கிறது. கிருஷ்ணர் மதுராவிற்கு சென்றபின்னர் கோகுலத்திற்கு திரும்பிவரவில்லை, ராதையையும் சந்திக்கவில்லை.

    கம்சனை வதம் செய்தபிறகு மதுராவில் அரசனாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்து வந்தார் கிருஷ்ணர். மாபெரும் பலசாலியான கம்சன் தன்னோட மருமகனால் கொல்லப்பட்டான் என்ற செய்து அறிந்த கம்சனின் மாமன் ஜராசந்தன் தன்னுடைய இரண்டு பெண்களும் விதவையானதற்கு காரணம் கிருஷ்ணர் தான் காரணம் அவரை கொன்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார்.

    குதிரைப்படை, யானைப்படை என்று பல படைகளை உடைய மாவீரன் ஜராசந்தன். 17 முறை மதுரா மீது போர்தொடுத்து வருகிறார். ஆனால் கிருஷ்ணர் பிறந்ததற்கான காரணமே பூமாதேவியின் பாரத்தை குறைப்பது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தரின் படைகளை கிருஷ்ணரும், பலராமரும் சேர்ந்து தோற்கடித்தனர்.

    அப்படியும் ஜராசந்தன் மற்ற நாட்டு படைகளை கூட்டிக்கொண்டு மதுரா மீது தொடர்ந்து போர்தொடுத்து சென்றார். ஜராசந்தனின் வெறி அடங்கவில்லை. கிருஷ்ணரின் வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று முடிசெய்கிறார். ஆனால் கிருஷ்ணர் நினைத்திருந்தால் ஜராசந்தனின் வம்சத்தையே அழித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நாட்டை பாதுகாக்க மனிதர்களும், அரக்கர்களும் போக முடியாதபடி. ஒரு கோட்டையை உருவாக்க முடிவு செய்கிறார்.

    பாகவத நூலில் கிருஷ்ணர் கடலுக்கு மத்தியில் எவ்வாறு கம்பீரமான துவாரகையை உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே வியந்துபோகிற அளவுக்கு யாருமே படை எடுத்து கிட்ட கூட நெருங்காதபடி ஒரு நகரத்தை உருவாக்க முடிவெடுக்கிறார்.

    சாதாரன கட்டிடக்கலை நிபுணர்கள் வேண்டாம் என்று தேவசிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து ஆலோசனை கேட்டார். அதற்கு விஷ்வகர்மா நிலத்தில் வேண்டாம். கடலுக்கு நடுவில் அப்படி ஒரு நகரத்தை உருக்கலாம் என்று கிருஷ்ணரிம் சொல்கிறார். அதற்கு கிருஷ்ணர் கடல் அரசனிடம் கேட்டு குஜராத் கடலுக்கு நடுவில் ஒரு தீவை ஆக்கிரமித்து மிகப்பெரிய மாளிகையை விஷ்வகர்மாவால் கட்ட வைக்கிறார்.

    நாம் பாகுபலி படத்தில் எவ்வாறு மிகப்பிரமாண்ட மாளிகைகளை பார்த்திருக்கிறோமே, அதேபோல் பிரமாண்டமான மாளிகையை கட்டினார்கள். கிட்டத்தட்ட 9 லட்சம் மாளிகைகள் கொண்ட அப்படி ஒரு கோட்டையை விஷவகர்மா இதுவரை கட்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மாளிகை மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்தது.

    எலாமே தங்கத்தாலும், வைரத்தாலும் செதுக்கி அரண்மணைகளை உருவாகினார்கள். எல்லா வகை வசதிகளுடனும் துவாரகை நகரம் உருவாக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் எந்த தேவைக்காகவும் வெளியே செல்லாத அளவுக்கு அங்கு விவசாயம்,, வணிகம் ஆகிய துறைகள் சிறந்து விளங்கியது. ஒரு வளர்ச்சி அடைந்த செல்வசெழிப்பான கோட்டையை விஷ்வகர்மா, கிருஷ்ண்ருக்காக உருவாக்கி கொடுத்தார்.

    கிருஷ்ணர் அந்த கிராமத்திற்கு துவாரகை என பெயரிட்டு யாதவ குல மக்களை மதுராவில் இருந்து துவாரகைக்கு குடியேற்றுகிறார். யாதவ குலமக்கள் அனைவரும் செல்வச்செழிப்புடனும், சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

    • இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
    • மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில், அத்திக்குளம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை பக்தர்கள் புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை புண்யாவசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேச பலி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை காலை அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம், முதல் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை இரண்டாம் கால பூஜை, சுவாமி கரிக்கோலம், சயனவாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.

    இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மூன்றாம் கால பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதன் பின்னர், மகா அலங்காரம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
    • சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.

    * குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.

    * குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.

    *ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

    * கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.

    'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.

    * ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.

    அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.

    * ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.

    சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.

    ×