என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
- இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
- மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில், அத்திக்குளம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை பக்தர்கள் புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை புண்யாவசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேச பலி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம், முதல் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை இரண்டாம் கால பூஜை, சுவாமி கரிக்கோலம், சயனவாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மூன்றாம் கால பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், மகா அலங்காரம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.






