என் மலர்
வழிபாடு
- 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
- அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது.
ஆலயங்கள் எப்போதும் அதிசயம் நிறைந்தவை. அப்படி ஆச்சரியமும், அதிசயமும் நிறைந்த ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்.
இந்த ஆலயம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் திரியம்பக் என்ற இடத்தில் உள்ளது. இந்தக்கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், 'திரியம்பகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்த இவ்வாலயத்தில், பல நூறு ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
இப்பகுதியில் வாழ்ந்த கவுதம முனிவர், கடுமையான தவத்தை மேற்கொண்டார். அவருக்காக சிவபெருமான் தன் ஜடாமுடியில் இருந்து கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு நீரூற்றாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டவை. ஆனால், இத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் அமைப்பில் இருப்பது தனித்துவமான சிறப்பு. திரியம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது.
இத்தல லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. அதன் நடுவே உரல் போன்று பள்ளம் மட்டுமே சிவலிங்கமாக பாவிக்கப்படுகிறது. இந்த பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் காணப்படுகிறது.
- பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆனி 14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி இரவு 6.24 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூரட்டாதி நண்பகல் 12.24 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப் பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-பெருமை
கடகம்- பொறுப்பு
சிம்மம்-பொறுமை
கன்னி-சந்தோஷம்
துலாம்- நேசம்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- உற்சாகம்
மகரம்-பாசம்
கும்பம்-பக்தி
மீனம்-பயணம்
- திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
- சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய் வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிக்கிழமை அன்று நாம் விசேஷமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வழிபடும் போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் என்ன என்று பார்க்கலாம்...
ஆன்மிகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பட்ட தெய்வங்களை விசேஷமாக வழிபடுவது வழக்கம். இருப்பினும் நாம் தினமும் அனைத்து தெய்வங்களுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட அன்றை நாள் கூடுதல் விசேஷமாகும்.
விநாயகர்
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
சிவன்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
அம்பாள்
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
அருள்வாய் அபிராமியே!

விஷ்ணு
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
முருகன்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

நவகிரகம் : வெள்ளி/சுக்ரன்
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
- அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான்.
- சிவபெருமான் ஜூரஹரமூர்த்தி அவதாரம் ஆகும்.
அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான். லிங்க வடிவிலே சிவபெருமான் பல ஆலயங்களில் காட்சி தருகிறார். சில கோயில்களில் நடராஜ ரூபத்தில் காட்சி தருகிறார். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவ பெருமான் காட்சி தரும் அரிதான கோயில் ஆந்திராவில் உள்ளது.

சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்:
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது சித்தூர். சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள கிராமம் சுருட்டப்பள்ளி. இந்த கிராமத்தில்தான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார். எங்குமே இல்லாத வகையில் இங்கு மட்டும் சிவ பெருமான் சயன கோலத்தில் காட்சி தருவது ஏன்? என்று கோயில் புராணம் சொல்கிறது.
புராணத்தின்படி, வாசுகி பாம்பை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக மாற்றி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அப்போது, வலி தாங்காத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. இதனால், ஆலகால விஷத்தில் இருந்து தங்களை காக்க வேண்டி தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர்.
தல வரலாறு:
மற்ற உயிர்களை காப்பதற்காக அந்த ஆலகால விஷத்தை சிவ பெருமானே விழுங்கினார். மிகக்கொடிய அந்த விஷம் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை (கழுத்தை புராணங்களில் கண்டம் என்றும் குறிப்பிடுவார்கள்) பிடிப்பார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்றுவிடும். இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டானது.
இந்த நிகழ்வுக்கு பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்திற்கு சென்றனர். அப்போது, சிவ பெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவி மடியில் தலை வைத்து படுத்து ( சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளியான இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவ பெருமான் இந்த கோயிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

பிரதோஷ வழிபாடு:
இந்த கோயிலில் பார்வதி தேவியை சர்வமங்களா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சயன கோலத்தில் காட்சி தரும் பள்ளிகொண்டீஸ்வரராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோயிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். இங்கு வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சிவபெருமான் ஜூரஹரமூர்த்தி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை ஒரே கல்லில் செதுக்கியிருப்பார்கள். இந்த கோயிலில் பிரதோஷ வழிலாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இங்கு நடை திறந்திருக்கும். சென்னையில் இருந்து சித்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். கோயிலின் வாசல்தான் பேருந்து நிறுத்தமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
- மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.
"இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன், நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி
வாயுரை தூது சென்று இயங்கும்
என்துணை எந்தை தந்தை தம்மானை''
திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம்.
என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.
நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.
அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-13 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 8.50 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சதயம் நண்பகல் 2 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குரு வார திருஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தன்னம்பிக்கை
ரிஷபம்-உதவி
மிதுனம்-மேன்மை
கடகம்-ஆக்கம்
சிம்மம்-உறுதி
கன்னி-பயணம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-நேர்மை
தனுசு- பரிவு
மகரம்-பாசம்
கும்பம்-ஊக்கம்
மீனம்-பரிசு
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆனி 12 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: பஞ்சமி இரவு 11.11 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.30 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீஜெனகைமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. விருஷப சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன அலங்கார சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-உயர்வு
கடகம்- கடமை
சிம்மம்-பயணம்
கன்னி-தெளிவு
துலாம்- உதவி
விருச்சிகம்-உறுதி
தனுசு- உண்மை
மகரம்-ஆர்வம்
கும்பம்-பரிவு
மீனம்-மகிழ்ச்சி
- சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
- ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே
'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.
ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.
சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.

ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:
சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.
25-ந்தேதி (செவ்வாய்)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி தீர்த்தவாரி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* குருவித்துறை குருபகவானுக்கு அபிஷேக ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை,
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (சனி)
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருச்சேறை சாரநாதர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்
* காஞ்சிபுரம் காமாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் தலங்களில் சிறப்பு பூஜை.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
- அங்காரகன் ‘பூமி காரகன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
- அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர்.
அங்காரகன் 'பூமி காரகன்' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதருக்கு வீடானது அரண்மனையைப் போல அமையும். அதுவே பூமி ஸ்தானாதிபதியுடன் அங்காரகன் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த நபர் கோட்டை கட்டி வாழ்வார்.
அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அங்காரகனும், 4-ம் பாவ அதிபதியும் பலவீனமாக இருந்தால், அந்த நபர் வீட்டை விற்க நேரிடும். மேலும் பூமி சம்பந்தமான வழக்குகளில் சிக்கி அவதிப்படுவார்.
அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர். எனவே ஒருவர் ஜாதகத்தில் அங்காரகன் நல்ல நிலையில் அமைந்தால், அவரது சகோதரர்களின் உதவியுடன் பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். அதுவே சரியான ஸ்தானத்தில் அங்காரகன் இல்லையென்றால், அல்லது நீச்சமோ, வக்ரமோ பெற்று இருந்தால், சகோதரர்களுடன் பகையை ஏற்படுத்தும். அதே நேரம் நீச்சபங்க ஸ்தானமாக இருப்பின், ராஜயோகம் வாய்க்கும்.
திருமணப் பொருத்தம் பார்க்கையில் அங்காரகனுக்கு முக்கிய பங்கு உண்டு. இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இவர் இருப்பதை 'அங்கார தோஷம்' என்பார்கள். இதனை 'செவ்வாய் தோஷம்' என்றும் அழைப்பார்கள்.
ஆனால் குரு பார்த்தாலோ, சனி பார்த்தாலோ அந்த தோஷம் நிவர்த்தியாகிவிடும். அதேபோன்று கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷத்தை செய்யமாட்டார்.
இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்து, மிதுனம் அல்லது கன்னி லக்னமாக இருந்தாலும் அது தோஷம் இல்லை. செவ்வாய் 4-ம் இடத்தில் இருந்து மேஷம் அல்லது விருச்சிகம் லக்னமாக அமைந்தாலும் தோஷம் கிடையாது.
செவ்வாய் 7-ம் இடத்தில் இருந்து, மகர லக்னம் என்றாலும் தோஷம் வராது. செவ்வாய் 8-ம் இடத்தில் இருந்து தனுசு அல்லது மீனம் லக்னமாக இருப்பினும் தோஷம் இல்லை. செவ்வாய் 12-ம் இடத்தில் இருந்து ரிஷபம் அல்லது துலாம் லக்னம் அமைந்தாலும் தோஷம் கிடையாது.
இதுபோன்று செவ்வாய் தோஷ நிவர்த்தியை பற்றிய பல தகவல்களை, 'ஜாதக பிரகாசிகா' என்ற நூல் விவரமாக கூறுகிறது.
செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில், விநாயகரையும் முருகரையும் பூஜித்தால் கட்டாயம் மேற்கண்ட தோஷங்கள் அனைத்தும் விலகும். மக்கள் செல்வமும் உண்டாகும்.

அங்காரகன் பிறப்பு
ஒரு முறை சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வியர்வை உண்டாகி, அது பூமியில் விழுந்தது. அந்த வியர்வை ஒரு குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தையை, பூமாதேவி எடுத்து வளர்த்தாள்.
குழந்தை வளர்ந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. அந்த தவத்தின் பயனாக, உடம்பில் யோக அக்னி உண்டாகி 'செவ்வாய்' (அங்காரகன்) என்ற பெயருடன் கிரக பதத்தைப் பெற்றது.
அங்காரகன் பிறப்பு குறித்த இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு முறை பரத்வாஜர் என்ற முனிவர் நீராடுவதற்காக நதிக்கு சென்றார். அங்கு ஒரு தேவப் பெண்ணைக் கண்டார். அவளுடன் சில காலம் வாழ்ந்தார்.
அந்த தேவப் பெண்ணிற்கும், பரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவர்தான், செவ்வாய். அவர் குழந்தை பருவத்தில் சகல கலைகளையும் கற்று, சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அங்காரக பதத்தை அடைந்ததாகவும் சொல்வார்கள்.
- செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாள் அங்காரக சதுர்த்தி.
- விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
உஜ்ஜைனி நகரை ஆட்சி செய்த அரசருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவரது அரசவையில் மருத்துவம், வான சாஸ்திரம், விவசாயம், உளவுத்துறை என்று ஒவ்வொரு துறைக்கும் சிறந்த மந்திரிகள் இருந்தனர். அதே போல் ஜோதிடத்தை எடுத்துச் சொல்லவும் மிகப்பெரிய ஜோதிடர் இருந்தார்.
ஒரு நாள் அந்த ஜோதிடரை அழைத்த அரசன், "எனக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதனைப் போக்க ஜோதிடத்தில் ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்" என்று ஆலோசனை கேட்டான். (ஜோதிடருக்கும் வெகு காலமாக குழந்தை பாக்கியம் இல்லை).

அரசனின் வருத்தத்தை உணர்ந்த ஜோதிடர், "மன்னா.. செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாளை 'அங்காரக சதுர்த்தி' என்பார்கள். அந்த நாளில் விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சரியாக அமையவில்லை. எனவேதான் செவ்வாயின் பார்வை தோஷத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அங்காரகனை திருப்தி செய்ய 'அங்காரக சதுர்த்தி' அன்று நீங்களும், உங்கள் மனைவியும் விரதம் இருங்கள்' என்றார்.
அன்றைய தினம் ஜோதிடர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி "இன்று அரசவையில் ஏதேனும் விசேஷம் உண்டா?" என்று வழக்கம் போல் விசாரித்தாள். ஜோதிடரும் தன் மனைவிடம், மன்னன் புத்திர பாக்கியம் இல்லை என்று வருத்தப்பட்டது பற்றியும், அவருக்கு அங்காரக சதுர்த்தி விரதம் இருக்கும்படி அறிவுறுத்தியது பற்றியும் கூறினார். உடனே ஜோதிடரின் மனைவி, "அங்காரக சதுர்த்தியின் விசேஷம் என்ன?" என்று கேட்டாள்.
மனைவிக்கு அந்த விரதம் இருக்கும் முறையைப் பற்றி கூறினார், ஜோதிடர். "பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு பின் வரும் நான்காம் நாள் திதியே 'சதுர்த்தி திதி'. இதில் தேய்பிறையில் (பவுர்ணமிக்குப் பிறகு) வரும் சதுர்த்தியை, 'சங்கடஹர சதுர்த்தி' என்பார்கள்.
சதுர்த்தி திதியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய தினத்தையே 'அங்காரக சதுர்த்தி' என்கிறோம். அன்று காலை குளித்துவிட்டு விநாயகப்பெருமானையும், முருகப்பெருமானையும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிப்பது விசேஷமானது.
விநாயகருக்கு கொழுக்கட்டையும், முருகப்பெருமானுக்கு தேன் கலந்த தினை மாவும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பவர்களுக்கு அங்காரகன் அருள்புரிவார்.
இந்த விரதத்தின் பலனாக மக்கட்செல்வம் உட்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும். செவ்வாய் சம்பந்தமான அனைத்து தோஷமும் நிவர்த்தியாகும்" என்றார்.
பின்னர் "அடுத்த வாரம் வரும் அங்காரக சதுர்த்தி அன்று, அரசரையும் அவரது மனைவியையும் விரதம் இருக்கச் சொல்லி உள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட ஜோதிடரின் மனைவி, தானும் அந்த விரதத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினாள். ஒரே நேரத்தில் மன்னனின் மனைவியும், ஜோதிடரின் மனைவியும் 'அங்காரக சதுர்த்தி' விரதம் இருந்தார்கள். விரதம் இருந்த ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு பலன் கிடைத்தது.
மன்னனுக்கும், ஜோதிடருக்கும் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செவ்வாயின் லக்னமான மேஷ லக்னத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தன.
மன்னன் மகிழ்ச்சியடைந்து, ஜோதிடரை அழைத்து ஆயிரம் பொன்னை பரிசாக அளித்தான். அதைத் தொடர்ந்து மன்னனின் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி, அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், "மன்னா.. உங்கள் பிள்ளை, தனது 21-வது வயதில் இந்த நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொள்வான். புகழ்பெற்று விளங்குவான். சகலவிதமான மரியாதையும் அவனுக்கு கிடைக்கும். இது ராஜயோக ஜாதகம்" என்று கூறினார்.
பின்னர் வீட்டிற்கு வந்த ஜோதிடரிடம் அவரது மனைவி, "நம் பிள்ளையின் ஜாதகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர், "அரசரின் குழந்தையும், நம் குழந்தையும் ஒரே நேரத்தில் பிறந்தது. இரண்டுமே ராஜ யோக ஜாதகம்" என்றார்.
ஜோதிடரின் பிள்ளை வளர்ந்தான். அவன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்படவில்லை. தந்தைக்கும், மகனுக்கும் கருத்து முரண்பாடு வளர்ந்தது. வாலிபனான ஜோதிடரின் மகன், 19-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
ஜோதிடர் தன் மகனை, இரண்டு ஆண்டுகள் தீவிரமாக பல இடங்களில் தேடியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. மகன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதைக் கூட அவரால் அறிய முடியவில்லை. வருத்தத்தில் துவண்டு போனார், ஜோதிடர்.
அதே நேரம் சிறப்பான முறையில் வளர்ந்து நின்றான், மன்னனின் மகன். அரசர் தனக்கு வயதான காரணத்தால், பிள்ளைக்கு முடி சூட்ட எண்ணினார். அதற்கான நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடரை அழைத்து கேட்டார். நாள் குறித்துக் கொடுத்தார், ஜோதிடர். மன்னனின் மகன் 21 வயதில் அந்த நாட்டின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான்.
அவன் பட்டம் ஏற்ற மறுதினம் இரவு, செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில், நதிக்கரை ஒன்றில் அமர்ந்திருந்த ஜோதிடர், தன்னிடம் இருந்த அற்புதமான ஜோதிட ஓலைச் சுவடிகளை நெருப்பில் போட்டு கொளுத்தினார்.
அப்போது உயர்ந்த தோற்றத்துடன், ஜொலிக்கும் சிவப்பு நிற ஆடை அணிந்து, தாடி, மீசையுடன் ஒரு பெரியவர் அங்கு வந்தார். அவர், "ஜோதிடரே.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ஜோதிடர், "நான் சொன்னபடி என் மகனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஒரே நேரத்தில் மன்னனின் மகனும், என் மகனும் பிறந்தனர். மன்னனின் மகன், இந்த நாட்டையே ஆள்கிறான். ஆனால் என் மகனோ, கண்காணாமல் போய்விட்டான். இந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் சொன்ன ஜோதிடம் பொய்த்து விட்டது" என்றார்.
அதற்கு அந்த பெரியவர், "நீங்கள் சொன்ன ஜோதிடம் பொய்க்கவில்லை" என்றார். அதைக் கேட்ட ஜோதிடர், "அதை உறுதிப்படுத்திச் சொல்வதற்கு, ஜோதிடர் நீங்களா? நானா?" ஆவேசமாக கேட்டார், ஜோதிடர்.
அப்போது அந்த பெரியவர், "மன்னனின் ஜாதகத்திலும், உங்கள் பிள்ளையின் ஜாதகத்திலும், எந்தக் கிரகம் யோகத்தை தந்தது" என்று கேட்க, 'அங்காரகன்' என்று பதிலளித்தார், ஜோதிடர்.
"அந்த அங்காரகனே நான்தான்" என்று பெரியவர் சொன்னதும், சர்வமும் ஒடுங்கி எழுந்து, அவரை கைகூப்பி நின்றார், ஜோதிடர்.

இப்போது அங்காரகன் மேலும் சொன்னார். "நன்றாகக் கேள்.. மன்னனுடைய ஜாதகத்தில், மகன் நாட்டை ஆள்வதை காணக்கூடிய யோகம் இருந்தது. ஆனால் உன் ஜாதகத்தில், நீ உன் பிள்ளை நாட்டை ஆள்வதை பார்க்கும் யோகம் இல்லை.
உனக்கு ஜாதகத்தில் புத்திர சோகம் உள்ளது. மன்னனின் ஜாதகத்திலோ புத்திர யோகம் உள்ளது. அதனால்தான் உன் மகனால் இப்போது நீ சோகத்தில் வருந்துகிறாய். ஆனால் நீ கணித்தபடியே உன் பிள்ளை இப்போது அரசனாகத்தான் இருக்கிறான்.
கடல் வழியாக ஆயிரம் மைல் கடந்து, ஒரு தீவை அடைந்தான் உன் மகன். அவன் சென்ற நேரத்தில் அந்த தீவை ஆட்சி செய்த மன்னன் இறந்து விட்டான். அவனுக்கு பிள்ளை இல்லாததால், அவர்களின் வழக்கப்படி யானை மாலையிடும் நபரை மன்னனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்திருந்தனர்.
அந்த யானை மாலையை அணிவித்தது உன் மகனின் கழுத்தில். அதனால் மன்னனாக முடிசூட்டிய உன் பிள்ளை, அங்கு சிறப்பான ஆட்சியை செலுத்தி வருகிறான். உன் ஜோதிடம் பொய்க்கவில்லை. நீ இருந்த அங்காரக சதுர்த்தி விரத பலன் உனக்கு முழுமையாக கிடைத்துள்ளது" என்று கூறிய அங்காரகன் மறைந்தார்.
தன் பிள்ளையின் ராஜ வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொண்ட ஜோதிடர், மன மகிழ்வோடு இல்லம் திரும்பினார்.
- அம்பாசமுத்திரம் அருகே மயில் ஏறி முருகன் கோவில் உள்ளது.
- ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்' என்பார்கள். அப்படி ஒரு குன்றின் மேல் அமைந்த ஆலயம்தான், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மயில் ஏறி முருகன் கோவில். இந்த குன்றின் மீதுள்ள முருகன் ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குன்றின் அடிவாரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. மலை ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியும், அகத்தியர் சன்னிதியும் உள்ளன

குன்றின் உச்சியில் சிறிய அளவிலான முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி-தெய் வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உற்சவ மூர்த்தங்களும் காணப்படுகின்றன. கருவறையின் முன்பாகவும் மயில் வாகனம் இருக்கிறது.

தல வரலாறு
தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றில் இருந்து வெட்டி எடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அயர்ச்சியையும் சோர்வையும் போக்குவதற்காக தங்களின் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வேண்டிக்கொண்டனர். அதற்காக அங்கிருந்த பாறை ஒன்றில், வேல், மயில், ஓம் என்ற எழுத்துக்களை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில், அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து, தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடிச் சென்றது.
தினம் தினம் இது நடக்கவே, என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறிச் சென்று பார்த்தனர். அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த அப்பகுதி மக்கள், இவ்விடத்தில் முருகன் கோவில் அமைத்து வழிபட நினைத்தனர்.
ஆனால் இங்கு கோவில் அமைப்பதில் இறைவனுக்கு விருப்பமா என்பதை அறிய, அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவனிடம் வேல் ஒன்றைக் கொடுத்து, "உனக்கு விருப்பமாக இடத்தில் இந்த வேலை ஊன்று" என்று கூறினர்.
உடனே அந்த சிறுவன், தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இருந்து மலைக் குன்றை நோக்கி ஓடினான். குன்றின் மீது ஏறிச் சென்று அங்கு புடைப்புச் சிற்பங்கள் இருந்த இடத்தில் வேலை ஊன்றினான். எனவே மக்கள் அனைவரும் ஒரு மனதாக அங்கே கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது இந்த ஆலயத்தின் வரலாறாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இத்தல முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இந்த முருகனை வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை, இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதன் அருகில் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையில் இருந்து கீழிறங்கி வர தனியாக படிகள் உள்ளன.
இங்கு பவுர்ணமி இரவில் அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடும் உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் அன்று சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
அமைவிடம்
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி நடந்து செல்லும் தொலைவில் என்.ஜி.ஓ. காலனியில் இருக்கிறது, மலையேறி முருகன் கோவில்.






