என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
    • தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

    * திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.

    * திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.

    * கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

    * திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

    * திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.

    * கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.

    * தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.

    • திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-32 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 12.46 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: பூரம் காலை 6.23 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-பெருமை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-பரிவு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-உண்மை

    மீனம்-கடமை

    • இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

    கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

    இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-31 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி இரவு 10.44 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் கோவில்களில் விழா தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஊஞ்சல் உற்சவ விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஆசை

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-பொறுப்பு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பெருமை

    மகரம்-ஆதரவு

    கும்பம்-பரிசு

    மீனம்-பணிவு

    • முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 15-ந்தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளன.

    19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 8.56 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: மகம் பின்னிரவு 3.51 மணி வரை. பிறகு பூரம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுப முகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி. திருக்கோளக்குடி கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர் முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-சிரமம்

    மிதுனம்-நன்மை

    கடகம்- சுகம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-கடமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- உறுதி

    மகரம்-ஆதரவு

    கும்பம்-லாபம்

    மீனம்-தெளிவு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு.
    • எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    `அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன்பு அவன் சொன்ன பொய்களின் எண்ணிக்கை ஏராளம்.

    மன்னனான அவன் சந்திரமதி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்து நர மேதயாகம் செய்வதாக வருண பகவானிடம் வேண்டிக் கொண்டான் அரிச்சந்திரன். (இது சாஸ்திரப்படி குற்றமாகும்).

    இதன் பின் வருண பகவான் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, வருண பகவான் வந்து அரிச்சந்திர மகாராஜாவிடம், 'நீ சொன்னபடி உன் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்' என்றார்.

    அதற்கு அரிச்சந்திரன், ''வருண பகவானே.. குழந்தைக்கு நாமகரணம் ஆகட்டும். பின் நான் அந்த யாகத்தை செய்கிறேன்'' என்றான். சில நாட்களில் குழந்தைக்கு `லோகிதாசன்' என பெயர் வைத்தான்.

    அதன்பின் வருண பகவான் வந்து, ''குழந்தைக்கு பெயர் வைத்தாகி விட்டது. இப்பொழுது யாகத்தை செய்'' என்றார். ''குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோம். ஆனால் குழந்தை நடக்கட்டும். பின் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன்.

    குழந்தை நடக்க ஆரம்பித்ததும் அங்கு வந்த வருணனிடம், ''சத்திரிய தர்மப்படி குழந்தைக்கு பூணல் அணிவித்து வித்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வித்தையை ஆரம்பித்ததும் நான் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன். பின் குழந்தைக்கு பூணல் போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வித்தை ஆரம்பமானது. அதேநேரம் லோகிதாசனும் வளர்ந்துவிட்டான்.

    இதற்கு மேலும் வருண பகவானிடம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்பதை உணர்ந்த அரிச்சந்திரன், இதுவரை நடந்த அனைத்தும் லோகிதாசன் காதில் விழும்படி தன் மனைவியிடம் பேசினான். தன்னை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த லோகிதாசன் காட்டிற்குள் ஓடி விடுகிறான். அதைத்தான் அரிச்சந்திரனும் எதிர்பார்த்தான்.

    வருண பகவான் அரிச்சந்திர மகாராஜாவிடம் வந்து, ''நீ அனேக பொய்களை கூறி சாக்குப் போக்கு சொல்லி என்னை ஏமாற்றி விட்டாய். உனக்கு வயிறு வலிவரட்டும்'' என சாபம் விட்டார். இதனால் வயிற்று வலியால் மிகவும் சிரமப்பட்ட அரிச்சந்திரன் வசிஷ்டரிடம், ''என்ன செய்யலாம்?'' என ஆலோசனை கேட்டான்.

    அதற்கு வசிஷ்டர், ''பிறந்த குழந்தைகளை தவிர, சுவீகார புத்திரர்கள், விலை கொடுத்து வாங்கிய புத்திரர்கள் என புத்திரர்கள் என பலவகை உண்டு. எனவே யாராவது ஒரு குழந்தையை விலை கொடுத்து வாங்கி, நீ பலி கொடுத்து யாகம் செய்'' என்றார். அதன்படி பிள்ளையை விலைக்கு தருபவர்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருவதாக தண்டோரா போடப்பட்டது.

    யாரும் மகன்களை விற்க முன் வரவில்லை. அஜிகர்த்தன் என்ற அந்தணருக்கு சுனபுச்சன், சுனச்சேபன், சுனோலாங்கூலன் என்ற மூன்று மகன்கள். தன் ஒரு மகனை விற்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. மிக வறுமையில் பசியில் வாடிக் கொண்டிருந்தது அந்த குடும்பம்.

    தன் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க, அவள், 'கடைசி மகன் எனக்கு வேண்டும்' என்றாள். அந்தணன் 'எனக்கு தலைமகன் வேண்டும்' என்றான். இதை வெளியில் இருந்து கேட்ட நடு மகன், ''என்னை நீங்கள் விற்கப் போகிறீர்கள். சரி.. என்னை கொடுத்து விடுங்கள். உங்கள் பிரச்சினை தீரட்டும்'' என்றான்.

    அதன்படி அரிச்சந்திர மகாராஜாவுக்கு அவன் விற்கப்பட்டான். யாக ஸ்தம்பத்தில் சிறுவனை கட்டி வைத்துவிட்டு பலி கொடுப்பதற்கான யாகத்தை ஆரம்பித்தான் அரிச்சந்திரன். சிறுவன் அழ ஆரம்பித்தான்.

    அப்போது விசுவாமித்திரர் அங்கு வந்தார். அவர் அந்த சிறுவனிடம், ''வருத்தப்படாதே.. வருண பகவான் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். நீ இந்த ஜெபத்தை தொடர்ந்து செய். வருண பகவான் அருள் கிடைக்கும். உனக்கு மரணம் நேராது'' என்றார்.

    யாகம் ஆரம்பித்தவுடன் 'யார் பலி கொடுப்பது?' என கேள்வி வந்தது. அப்போது ஆடு, மாடுகளை வெட்டும் சாமித்திரன் என்பவன் அங்கு வந்தான். அவனிடம் ஆயிரம் பொன் தருவதாகக் கூறி, சிறுவனை வெட்டும்படி கூறினர். அவன் அழுது கொண்டிருந்த சிறுவனை கண்டு, ''நீங்கள் கொடுக்கும் ஆயிரம் பொன் எனக்கு வேண்டாம். இந்த சிறுவனை வெட்டும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்'' எனக் கூறி கத்தியை கீழே போட்டு விட்டான்.

    அப்பொழுது யார் வெட்டுகிறீர்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் கொடுக்கப்படும் என அரிச்சந்திர மகாராஜா கூறினார். அதை கேட்ட சிறுவனின் தந்தை, ''நானே வெட்டு கிறேன்'' எனக்கூறி கத்தியை எடுத்துக்கொண்டு வந்தார்.

    அப்பொழுது வருண பகவான் விரைந்து வந்து, ''யாகத்தை நிறுத்துங்கள். இந்த சிறுவன் என்னை துதித்ததால் நான் மகிழ்ந்தேன். யாகம் பூர்த்தியாகி விட்டது. உன் வயிற்று வலியும் தீர்ந்து விடும்'' என்றார். வசிஷ்டர், நாரதர், விசுவாமித்திரர் போன்றவரும் அங்கிருந்தனர். சிறுவன் ஸ்தம்பத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.

    இப்போது சிறுவன் யாரிடம் செல்வது என்ற கேள்வி எழுந்தது. தந்தையிடம் செல்வதா? அரசனிடம் செல்வதா? அல்லது வருண பகவானிடம் செல்வதா? என்று கேள்வி எழுந்தது. அதற்கு நாரதர், ''அந்தணர் இவனைப் பெற்று எடுத்தாலும், தன் மகனை வெட்டப்போகிறார்கள் என்று தெரிந்தே விலைக்கு கொடுத்து விட்டார். எனவே அவர் இவனுக்கு தந்தையாக மாட்டார். வெட்டுவதற்காகவே சிறுவனை விலைக்கு வாங்கினார் அரசன். எனவே அரிச்சந்திர மகாராஜாவும் தந்தைக்கு சமம் அல்ல.

    சாமித்திரன் சிறுவனை வெட்டாமல் விட்டான். ஜாதியில் தாழ்ந்திருத்தாலும் குணத்தால் அவனே உயர்ந்தவன். இருந்தாலும் அவனும் தகப்பனாக மாட்டான். (இந்த இடத்தில் அந்தணன் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்த வனாகி விட்டான் என நாரதர் கூறுகிறார்).

    வருண பகவான் சிறுவன் துதி செய்ததால் அருள் புரிந்தார். அவரும் தகப்பன் ஆக மாட்டார். ஆனால் எந்த பலனும் கருதாமல் இவன் உயிர் பிழைக்க வேண்டும் என கருதி மந்திரத்தை உபதேசம் செய்த விசுவாமித்திரரே இந்த சிறுவனுக்கு தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவராவார். எனவே விசுவாமித்திரருடன் இவன் செல்லலாம்'' என நாரதர் கூறினார்.

    தனக்கு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் உயிர்பலி கொடுக்கலாம் என்று நினைத்ததால், பிற்காலத்தில் அரிச்சந்திரன் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, நாட்டை இழந்து சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உருவாகிறது. அந்தணர் குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்தவனாகி அவமானப்பட்ட நிகழ்வும் இங்கு நடக்கிறது. எனவே எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதே உண்மை.

    • 13-ந்தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
    • 16-ந்தேதி திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    11-ந்தேதி (செவ்வாய்)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு.

    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (சனி)

    * கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசபெருமாள் திருவீதி உலா.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா,

    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பக்ரீத் பண்டிகை.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத் தில் பவனி,

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    • திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • கோமாசிமாற நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 7.26 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.38 மணி வரை. பிறகு மகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கபூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கோமாசிமாற நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பரிசு

    கடகம்- லாபம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-இன்பம்

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம் -இனிமை

    தனுசு- ஆசை

    மகரம்-வரவு

    கும்பம்-பண்பு

    மீனம்-பரிவு

    • பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.
    • வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் அத்தி வரதர் கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

    தீர்த்தவாரி உற்சவத்தை யொட்டி வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

    வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வரதராஜ பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சன்னதி வீதி, நான்கு மாடவீதியில் வீதி உலா வந்தனர். தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் வழியெங்கும் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இதைதொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
    • நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-28 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 6.17 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: பூசம் இரவு 11.37 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விழா தொடக்கம். திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-ஆசை

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-உவகை

    கன்னி-ஈகை

    துலாம்- கீர்த்தி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- திறமை

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பயணம்

    மீனம்-மேன்மை

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-27 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை மாலை 5.37 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.19 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைநாயகி சிறப்பு அலங்கார வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. நம்பியாண்டார் நம்பி நாயனார் குருபூஜை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு வழிபாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வரவு

    கடகம்-உவகை

    சிம்மம்-தனம்

    கன்னி-உதவி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- மேன்மை

    மகரம்-உயர்வு

    கும்பம்-இனிமை

    மீனம்-செலவு

    ×