என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். இதில்,"சைலபுத்ரி" என்பது துர்க்கையின் முதல் வடிவம் ஆகும்.

    நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்:

    ஷைல் புத்ரி மந்திரம் என்பது துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல் புத்ரியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

    சிறப்பு மந்திரங்கள்:

    * ஓம் தேவி ஷைலபுத்ரியை நமஹ

    விளக்கம்: தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    * வந்தே வாஞ்சிதலாபாய சந்திரார்த கிருதஷேக்ராம்। விருஷாரூடாம் ஷூலதாரிணீம் ஷைலபுத்ரீம் யஷஸ்விநீம்

    விளக்கம்: என் ஆசைகளை நிறைவேற்றும், சந்திரனை கிரீடமாக அணிந்த, காளையின் மீது அமர்ந்திருக்கும், திரிசூலத்தை ஏந்திய, புகழ்மிக்க தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    இந்த மந்திரங்கள் நவராத்திரியின் முதல் நாளில் உச்சரிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களையும் ஆன்மீக பலத்தையும் பெற உதவுகிறது.

    • எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும். 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    அதன்படி, 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் முதல் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    -இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
    • ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார்.

    "நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்கள் பெண் தன்மையை வழிபடுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான ஒரு மிகச் சிறப்பான காலமாகும்.

    இந்த வருடம் நவராத்திரி 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தி துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைலபுத்ரியை வழிபட வேண்டும். ஷைலபுத்ரியை இமயமலையின் மகள் என்றும், இயற்கையின் முதன்மையான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் துர்கா தேவியின் முதல் வடிவமாக வணங்கப்படுகிறார். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் இவரை வழிபட வேண்டும்.

    துர்காதேவி, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக போர் புரிந்தார். இந்தப் போரின் தொடக்கமே நவராத்திரி. இந்த முதல் நாள் வழிபாடு துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

    நவராத்திரி முதல் நாளில் வழிபடும் தெய்வம் ஷைலபுத்ரி தேவி

    ஷைலபுத்ரி தேவி முன் பிறவியில் சதி தேவியாக இருந்தார். சதி தேவி தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். அவருக்கு பரமசிவனுடன் திருமணம் ஆனது.

    ஆனால், தந்தை தட்சன் சிவனை அவமதித்து யாகத்திற்க அவரை அழைக்கவில்லை. அதை சகிக்க முடியாமல் சதி யாகக் குண்டத்தில் தன்னைத் தானே அர்ப்பணித்தார்.

    இதன் பின் சதி மறுபிறவியாக மலைராஜன் இமவானின் மகளாக பிறந்தார். அதனால் தான் அவர் ஷைலபுத்ரி (மலைமகள்) என்று அழைக்கப்படுகிறார்.

    வழிபாட்டின் சிறப்பு: முதல் நாளில் ஷைலபுத்ரியின் தெய்வீக சக்தியை வழிபடுவது, வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவதற்கு உகந்ததாகும்.

    ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார். ஷைலபுத்ரி தேவி இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் மற்றும் சிவபெருமானின் துணை என்று குறிப்பிடப்படுகிறார்.

    நவராத்திரியின் முதல் நாளில், புனிதமான கலசம் நிறுவப்படுகிறது.

    ஷைலபுத்ரி தேவி காளையின் (நந்தி) மீது அமர்ந்து ஒரு கையில் திரிசூலத்தையும் மறுகையில் தாமரையையும் ஏந்தியிருக்கிறாள். இந்த வடிவம் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் புதிதாகத் தொடங்குவதற்கான தைரியத்தில் வேரூன்றிய வலிமையைக் குறிக்கிறது.

    ஸ்லோகம்

    'ஓம் தேவி சைலபுத்த்ரியை நமஹ' என்ற மந்திரம், துர்கா தேவியின் முதல் அம்சமான ஷைலபுத்ரி தேவியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது. 

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.

    அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். 

    கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    • அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார்.
    • ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

    எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

    இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

    வரம் பெற்ற பிறகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரனின் ஒழுக்கமற்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர்.

    அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிசாசுரவர்த்தினி" (அல்லது மகிஷாசுரமர்த்தினி) என்று சக்தியைப் போற்றினார்கள்.

    இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவி மகிசாசூரனை எதிர்த்து போராடிய நாட்களே 'நவராத்திரி'யாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

    • முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
    • ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

    கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

     

    மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

     

    ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

     

    எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’.

    புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

    சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

    அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.

    எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

    தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

    இந்த சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா மட்டுமின்றி, பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாகவும் புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    விநாயகர் விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம்' என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    மகாலட்சுமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

    அமுக்தாபரண விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

    ஜேஷ்டா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.

    சஷ்டி - லலிதா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்

    புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.

    • ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்.
    • அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வ அலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

    ×