என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்
- இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
- அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. அப்படியான நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
புனித விழாவாக கருதப்படும் நவராத்திரி முழுவதும், மக்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்கின்றனர். இன்று, வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க உதவும் ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.
தேங்காய் பரிகாரத்தின் முக்கிய அம்சங்கள்...
இந்த எளிய பரிகாரத்தின் நோக்கமும் செயல்முறையும் பின்வருமாறு:
தேவையான பொருள்: ஒரு முழுமையான தேங்காய்.
செய்யும் முறை:
* பூஜை அறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து தேங்காயை மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* முழுமையான நம்பிக்கையுடன் 'ஓம் தும் துர்காயை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
* மந்திரத்துடன் சேர்ந்து, உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் மற்றும் தடைகளை நீக்குமாறு துர்கா தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* பிரார்த்தனை முடிந்ததும், அந்தத் தேங்காயை எடுத்துச் சென்று அருகில் உள்ள அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நம்பிக்கை:
* தேங்காய் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் (Negative Energy) மற்றும் தடைகளையும் தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
இந்த பரிகாரத்தால் கிடைக்கும் பலன்கள்:
* இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பின்வரும் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காரியத் தடைகள் நீங்கும்:
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் தடைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
கடன் பிரச்சனைகள் தீரும்:
பணப்புழக்கம் சீராகி, கடன் சுமை குறைய வழிவகுக்கும்.
உறவுகள் மேம்படும்:
குடும்ப உறவுகள், நண்பர்கள் மற்றும் பிறருடனான உறவுகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நல்லிணக்கம் உண்டாகும்.
திருமணத் தடை விலகும்:
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தைச் செய்தால், விரைவிலேயே நல்லபடியாகத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஆறாம் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஆறாம் நாள் போற்றி
ஓம் பொன்னரசியே போற்றி
ஓம் நவமணி நாயகியே போற்றி
ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி
ஓம் சிங்கார நாயகியே போற்றி
ஓம் செம்பொன் மேனியளே போற்றி
ஓம் மங்காத ஒளியவளே போற்றி
ஓம் சித்திகள் தருவாய் போற்றி
ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி
ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
ஓம் மகாமந்திர உருவே போற்றி
ஓம் மாமறையுள் பொருளே போற்றி
ஓம் ஆநந்த முதலே போற்றி
ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகா சண்டிகையே போற்றி
- காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார்.
- கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 6-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காத்யாயனி தேவி'. காத்யாயனி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார். காத்யாயனரின் தவப் பலனாக தேவி காத்யாயனியின் வடிவம் பெற்றதால், அவளுக்கு 'காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறார்.
மகிஷாசுரன் என்ற அசுரன் தேவகோட்டங்கள் அனைத்தையும் துன்புறுத்தியபோது, விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சக்திகள் இணைந்து உருவானவள் துர்கை. அந்த சக்தியே காத்யாயனி. இவர் கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார். காத்யாயனி தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பார்.
நவராத்திரி வழிபாடு:
துர்கா வழிபாட்டில் நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபாடு செய்யப்படுகிறாள். மகாசுரனை வதம் செய்ய துர்கா தேவி எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று.
பாகவத புராணத்தில், யமுனையின் கரையில் கோபிகைகள் 'காத்யாயனி விரதம்' இருந்து, "கிருஷ்ணனை எங்கள் வாழ்க்கைத்துணையாக வேண்டும்" என வேண்டினார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அதனால் இவர் திருமண ஆசீர்வாதம் வழங்குபவள் என்றும் கருதப்படுகிறார்.
திருமண வரம் அருளும் தேவியாக குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் கொண்டுள்ளாள்.
மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் இளம்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணையை வேண்டி "காத்யாயனி விரதம்" அனுசரிக்கின்றனர்.
காத்யாயனி தேவியை வழிபடுவதால் துணிவு, திருமண சௌபாக்கியம், அசுர சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பக்தர்களை பாபங்களிலிருந்து காப்பாற்றி, சௌபாக்கியமும் துணிவும் அருள்பவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காத்யாயன்யை நமஹ' என்று ஜபிக்க வேண்டும்.
- மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
- சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!
அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும். இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.
நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.
முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,
மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,
ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,
எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,
பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்
-என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.
மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனி தேவிக்கு விருப்பமான சாம்பல் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சமநிலை மற்றும் நிலத்தன்மையை குறிக்கிறது. சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!
- திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
- வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.
வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"
என பாடி துதித்தால் வரம் தருவாள்.
வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 5வது நாளான இன்று பச்சை பட்டாணி சுண்டல், தேங்காய் சாதம் மற்றும் கீர் செய்து ஸ்கந்தமாதா தேவிக்கு படைக்கலாம்.
முதலில், பச்சை பட்டாணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பட்டாணி சுண்டல்
தேவையான பொருட்கள்:
உலர்ந்த பச்சை பட்டாணி - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4-5 இலைகள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* உலர்ந்த பச்சை பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
* பின்னர், குக்கரில் பட்டாணியை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
* பட்டாணி குழைந்துவிடாமல் மென்மையாக இருக்க வேண்டும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும்.
* பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வதக்கிய தாளிப்புடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, தேங்காய் துருவலை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
சுவையான நவராத்திரி பச்சை பட்டாணி சுண்டல் தயார். இதை சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம்.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 முதல் 1/2 கப் (தேவைக்கேற்ப)
நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 (அல்லது பச்சை மிளகாய்)
முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு, பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
* சாதத்தை வேகவைத்து, ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும். ஆறின சாதத்தை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும், இதனால் சாதம் உதிரியாக இருக்கும்.
* ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் (பயன்படுத்தினால்), கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* தீயைக் குறைத்து அல்லது அணைத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து, லேசாக வதக்கி மணம் வரும் வரை கிளறவும்.
* துருவிய தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் ஆற வைத்த சாதத்தை கடாயில் சேர்க்கவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
* சுவையான நவராத்திரி தேங்காய் சாதம் தயார்!
நவராத்திரி கீர்
நவராத்திரி கீர் என்பது, பொதுவாக நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பவர்கள் உண்ணும் ஒரு இனிப்புப் பண்டமாகும். இவை பால், சர்க்கரை, பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.
பிரபலமான நவராத்திரி கீர் வகைகள்:
ஜவ்வரிசி கீர் : ஜவ்வரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பு, நவராத்திரி காலத்தில் பொதுவாக உண்ணப்படும் கீர்களில் ஒன்றாகும்.
மக்கானா கீர் : இந்த கீர் மக்கானாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நவராத்திரியின் போது உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இனிப்பு வகையாகும்.
குட்டு கீர்: குட்டு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த கீர், நவராத்திரி காலத்தில் விரதத்தின் போது உண்ணப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
இன்று நாம், நவராத்திரிக்கு மிகவும் பிரபலமான மக்கானா கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்
மக்கானா (தாமரை விதைகள்) - 1 கப்
பால் - 2½ கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - தலா 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 10 கோடுகள்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் மக்கானாவை சேர்த்து மிருதுவாக வறுக்கவும்.
* மக்கானாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
* ஒரு கடாயில் பாலை சூடாக்கி, அதில் வறுத்த மக்கானாவையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கரைய விடவும்.
* சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, நறுக்கிய உலர் பழங்கள் சேர்த்து, 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* சுவையான மக்கானா கீரை தயார்! இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, துர்கா தேவியின் ஸ்கந்தமாதா வடிவத்தை வழிபடும் நாளாகும்.
சிறப்பு மந்திரங்கள்:
ஓம் ஸ்கந்தமாதாயை நமஹ.
ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியை நம.
இந்த மந்திரம், தாமரை மலர் ஏந்திய, சிம்மாசனத்தில் அமர்ந்த, மங்களகரமான ஸ்கந்த மாதா தேவியை போற்றி வணங்குவதாகும். இவரது பூஜை சக்தி, பாதுகாப்பு மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஐந்தாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஐந்தாம் நாள் போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் தாளிசினியே போற்றி
ஓம் கவுரி தேவியே போற்றி
ஓம் உத்தமத் தாயே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி
ஓம் மெய்ஞான விதியே போற்றி
ஓம் தாண்டவத் தாரகையே போற்றி
ஓம் போற்றுவோர் துணையே போற்றி
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவள நிறத்தினாய் போற்றி
ஓம் ஆகாய ஒளியே போற்றி
ஓம் பூதங்கள் உடையோய் போற்றி
ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி
- குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம். 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
எனவே வேடம் அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.
அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷா சுரசம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.
காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- "ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர்.
- சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 5-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்கந்தமாதா. ஸ்கந்தமாதா என்பவர் நவதுர்கைகளில் ஐந்தாவது வடிவம். இவர் முருகனின் தாயார், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர். இவர் நான்கு கரங்களைக் கொண்டவர்.
"ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர். தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் 'ஸ்கந்தன்' ஆகும். 'ஸ்கந்த மாதா என்றால் 'முருகனின் அன்னை' என்று பொருள்.
நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் 'ஸ்கந்தமாதா' ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
ஸ்கந்தமாதா
ஒருகாலத்தில் தாரகாசுரன் என்னும் அசுரன், கடுமையான தவம் செய்து "சிவபெருமான் மகன் தவிர வேறு யாராலும் என்னை வதம் செய்ய முடியாது" என்ற வரத்தைப் பெற்றான். இந்த வரத்தால் அவன் தேவர்களையே துன்புறுத்த ஆரம்பித்தான்.
ஆனால் அப்போது சிவபெருமான் யாருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
சிவனைத் திருமணம் செய்ய பார்வதி (சதீயின் மறுபிறப்பு) கடுமையான தவம் செய்தார். அவருடைய தவத்தால் சிவபெருமான் சம்மதித்து திருமணம் நடந்தது.
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன் (கார்த்திகேயன், முருகன், சுப்பிரமணியன்). இவர் பிறந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இவர் தான் தாரகாசுரனை அழிக்கக் கூடியவன்.
தன் தாயின் அருளும், சக்தியையும் பெற்று ஸ்கந்தன் (முருகன்) தாரகாசுரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.
பார்வதி, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அந்த நிலையிலேயே இவர் ஸ்கந்தமாதா எனப் போற்றப்பட்டார்.
பின்னர் ஸ்கந்தன் (முருகன்) தனது வீரத்தால் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு அமைதி கொண்டுவந்தார். இதன் மூலம் தாய் ஸ்கந்தமாதா மகிமை உலகம் முழுவதும் பரவியது.
ஸ்கந்தமாதாவை 5-வது நாளில் வழிபடுவதால் தனது அருள் மற்றும் நலத்தை வேண்டுபவர்களுக்கு வழங்குகிறார்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ" என்று ஜபித்தால் ஸ்கந்தமாதாவின் அருள் கிடைக்கும்.
- நவராத்திரி விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.
- விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது.
நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.
ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரியின் ஐந்தாவது நாளில் தாய்மை, கருணையின் வடிவமான ஸ்கந்தமாதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பச்சை நிற ஆடையை அணிய வேண்டும். இதனால் அவள் தனது பக்தர்களுக்கு அனைத்து விதமான செழிப்பை வழங்குவாள். பூஜை அறையை மா இலைகள் மற்றும் சாமந்தி தோரணங்களை கொண்டு அலங்கரியுங்கள்.
- மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும்.
- மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரி நான்காம் நாளன்று அன்னை பராசக்தி, மகாலட்சுமியாக வழிபாடு செய்யப்படுகிறாள். மகாலட்சுமி தாமரை மலரில் வீற்றிருப்பவள். திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள். சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி.
மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு 16 தீபங்கள் ஏற்ற வேண்டும். கதம்ப சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். ஜாதிமல்லி பூக்கள் மற்றும் கதிர்பச்சை இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்
மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்
மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்
வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்"
என பாடி துதித்தால் வரம் தருவாள்.
மகாலட்சுமி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சூரியன். எனவே மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும். பணம் பெருகும் வாய்ப்புகள் உண்டாகி, செல்வ வளம் கூடும். நீண்ட நாட்களாக இருக்கும் கடன் சுமைகள் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை அமையும். குடும்ப ஒற்றுமை, நல்ல எதிர்காலம், வாழ்வில் செழுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகி, நன்மைகள் உண்டாகும்.






