Navratri Special: நவராத்திரி 5-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்

"ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர்.சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன்.
Navratri Special: நவராத்திரி 5-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்
Published on

நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

நவராத்திரியின் 5-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்கந்தமாதா. ஸ்கந்தமாதா என்பவர் நவதுர்கைகளில் ஐந்தாவது வடிவம். இவர் முருகனின் தாயார், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர். இவர் நான்கு கரங்களைக் கொண்டவர்.

"ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர். தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் 'ஸ்கந்தன்' ஆகும். 'ஸ்கந்த மாதா என்றால் 'முருகனின் அன்னை' என்று பொருள்.

நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் 'ஸ்கந்தமாதா' ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

 ஸ்கந்தமாதா

ஒருகாலத்தில் தாரகாசுரன் என்னும் அசுரன், கடுமையான தவம் செய்து "சிவபெருமான் மகன் தவிர வேறு யாராலும் என்னை வதம் செய்ய முடியாது" என்ற வரத்தைப் பெற்றான். இந்த வரத்தால் அவன் தேவர்களையே துன்புறுத்த ஆரம்பித்தான்.

ஆனால் அப்போது சிவபெருமான் யாருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

சிவனைத் திருமணம் செய்ய பார்வதி (சதீயின் மறுபிறப்பு) கடுமையான தவம் செய்தார். அவருடைய தவத்தால் சிவபெருமான் சம்மதித்து திருமணம் நடந்தது.

சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன் (கார்த்திகேயன், முருகன், சுப்பிரமணியன்). இவர் பிறந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இவர் தான் தாரகாசுரனை அழிக்கக் கூடியவன்.

தன் தாயின் அருளும், சக்தியையும் பெற்று ஸ்கந்தன் (முருகன்) தாரகாசுரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.

பார்வதி, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அந்த நிலையிலேயே இவர் ஸ்கந்தமாதா எனப் போற்றப்பட்டார்.

பின்னர் ஸ்கந்தன் (முருகன்) தனது வீரத்தால் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு அமைதி கொண்டுவந்தார். இதன் மூலம் தாய் ஸ்கந்தமாதா மகிமை உலகம் முழுவதும் பரவியது.

ஸ்கந்தமாதாவை 5-வது நாளில் வழிபடுவதால் தனது அருள் மற்றும் நலத்தை வேண்டுபவர்களுக்கு வழங்குகிறார்.

ஸ்லோகம்:

"ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ" என்று ஜபித்தால் ஸ்கந்தமாதாவின் அருள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com