என் மலர்
முக்கிய விரதங்கள்
ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்துக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 2, அக்டோபர் 9, அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமை வருகிறது. இந்த 5 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட தவறாதீர்கள்.
ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.
புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் வரவே வராது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து பெருமாளை வழிபடவேண்டும்.
மாவிளக்கு என்பது திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும். அந்த மாவிளக்கில் ஏற்றப்படும் தீபம் ஏழுமலையானை குறிக்கும். எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழுமலையானே நம் வீட்டுக்கு வந்ததாக ஐதீகம் ஆகும்.
மாவிளக்கு ஏற்றுவதோடு, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் புட்டாசி சனிக்கிழமையன்று வழிபாடுகள் செய்து அன்னதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடி வரும்.
விருப்பம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மிகப்பெரிய படையல் போட்டு வழிபடலாம். பூஜை அறையில் குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.
சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு எம பயத்தில் இருந்து விடுபடலாம். துன்பங்களில் இருந்து மீண்டு கொள்ளலாம். தமிழ் மாதங்கள் 12-ல் 6-வது மாதமாக புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத் துக்கு பல்வேறு மகிமைகளும், சிறப்புகளும் உண்டு. புரட்டாசி மாதத்தை பொதுவாக தெய்வீக தன்மை நிறைந்த மாதமாக சொல்வார்கள்.
புரட்டாசி மாதம் என்பது காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். நவகிரகங்களில் புதனுக்குரியதாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். புதனின் வீடு கன்னி ராசியாகும். அதுவும் பெருமாளின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். எனவே புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி முதல் நாள், ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒரே நாளில் சங்கமிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. புரட்டாசி தொடக்கம் பெருமாளை விரதம் இருந்து மனம் உவந்து வழிபட வேண்டியதற்கான தொடக்க நாளாகும். புரட்டாசி மாதம் முழுவதும் மகா விஷ்ணுவை நினைவு கொள்வோம் என்பதற்கான தொடக்கம் ஆகும்.
அதே நாளில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி இருக்கிறது. ஏகாதசி திதி என்பது ஒரு புண்ணிய காலம் ஆகும். பரமாத்மாவுக்கு மிகவும் பிரியமான திதி இது. ஏகாதசி திதியை போற்றாத புராணமே இல்லை என்று சொல்லலாம். கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை. விஷ்ணுவை விட உயர்ந்த கடவுள் இல்லை. தாயை விட சிறந்த கோவில் இல்லை. காய்திரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அதுபோன்று ஏகாதசி திதி மிக மிக உயர்ந்தது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏகாதசி திதியில் முழு உபவாசம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இயலாதவர்கள் மகா விஷ்ணுவை தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏகாதசி திதி தினத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும். அந்த சமயத்தில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் உள்ள தண்ணீர் மீது பாதிப்பை உண்டாக்கும்.
நமது உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே ஏகாதசி தினத்தில் நமது உடலும், சந்திரனின் சக்தியால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிய லின் அடிப்படையில்தான் நமது முன்னோர்கள் ஏகாதசி திதி தினத்தன்று முழு விரதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஜோதிட ரீதியாகவும் சந்திரனுக்குரிய முக்கிய தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. ஏகாதசி தினத்தில் ஜெபம், தியானம் செய்யும் போது மனம் மிக விரைவில் ஒருநிலைப்படும். இதன்மூலம் நமது அறிவுத்திறன் செயல் அதிகரிக்கும். எனவேதான் ஏகாதசி தினத்தில் தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏகாதசி திதி ஆண்டுக்கு 25 முறை வருகிறது. புரட்டாசி மாதம் வரும் ஏகாதசி தினங்கள் அஜா ஏகாதசி என்றும், பத்மநாப ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாத ஏகாதசியில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் முன்வினை பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம் ஆகும். அதுமட்டுமின்றி வீட்டில் துன்பங்கள் நீங்கி திருமண யோகங்கள் கை கூடி வரும் என்பதும் ஐதீகம் ஆகும்.
எனவே ஏகாதசி திதி தினத்தன்று பகலில் தூங்காமல் மகா விஷ்ணுவை போற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
அதேபோன்று திருவோணம் நட்சத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. திருவோண நட்சத்திரம் என்பது திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர தினத்தன்று அவரை வழிபட்டால் மகா விஷ்ணுவின் கருணை பார்வை மிக எளிதாக கிடைக்கும்.
ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். நாளை காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
புரட்டாசி மாதம் என்பது காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். நவகிரகங்களில் புதனுக்குரியதாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். புதனின் வீடு கன்னி ராசியாகும். அதுவும் பெருமாளின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். எனவே புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி முதல் நாள், ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒரே நாளில் சங்கமிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. புரட்டாசி தொடக்கம் பெருமாளை விரதம் இருந்து மனம் உவந்து வழிபட வேண்டியதற்கான தொடக்க நாளாகும். புரட்டாசி மாதம் முழுவதும் மகா விஷ்ணுவை நினைவு கொள்வோம் என்பதற்கான தொடக்கம் ஆகும்.
அதே நாளில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி இருக்கிறது. ஏகாதசி திதி என்பது ஒரு புண்ணிய காலம் ஆகும். பரமாத்மாவுக்கு மிகவும் பிரியமான திதி இது. ஏகாதசி திதியை போற்றாத புராணமே இல்லை என்று சொல்லலாம். கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை. விஷ்ணுவை விட உயர்ந்த கடவுள் இல்லை. தாயை விட சிறந்த கோவில் இல்லை. காய்திரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அதுபோன்று ஏகாதசி திதி மிக மிக உயர்ந்தது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏகாதசி திதியில் முழு உபவாசம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இயலாதவர்கள் மகா விஷ்ணுவை தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏகாதசி திதி தினத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும். அந்த சமயத்தில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் உள்ள தண்ணீர் மீது பாதிப்பை உண்டாக்கும்.
நமது உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே ஏகாதசி தினத்தில் நமது உடலும், சந்திரனின் சக்தியால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிய லின் அடிப்படையில்தான் நமது முன்னோர்கள் ஏகாதசி திதி தினத்தன்று முழு விரதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஜோதிட ரீதியாகவும் சந்திரனுக்குரிய முக்கிய தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. ஏகாதசி தினத்தில் ஜெபம், தியானம் செய்யும் போது மனம் மிக விரைவில் ஒருநிலைப்படும். இதன்மூலம் நமது அறிவுத்திறன் செயல் அதிகரிக்கும். எனவேதான் ஏகாதசி தினத்தில் தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏகாதசி திதி ஆண்டுக்கு 25 முறை வருகிறது. புரட்டாசி மாதம் வரும் ஏகாதசி தினங்கள் அஜா ஏகாதசி என்றும், பத்மநாப ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாத ஏகாதசியில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் முன்வினை பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம் ஆகும். அதுமட்டுமின்றி வீட்டில் துன்பங்கள் நீங்கி திருமண யோகங்கள் கை கூடி வரும் என்பதும் ஐதீகம் ஆகும்.
எனவே ஏகாதசி திதி தினத்தன்று பகலில் தூங்காமல் மகா விஷ்ணுவை போற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
அதேபோன்று திருவோணம் நட்சத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. திருவோண நட்சத்திரம் என்பது திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர தினத்தன்று அவரை வழிபட்டால் மகா விஷ்ணுவின் கருணை பார்வை மிக எளிதாக கிடைக்கும்.
ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். நாளை காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.
திருமணத் தடை உள்ள பலரும் பல வகையான விரதங்களையும், பலவகையான கோயில்களுக்குச் சென்று வருவதையும், திருமணம் கைகூட பரிகாரங்கள் செய்வதையும் பார்த்திருக்கிறோம். நிச்சயம் திருமண வயது வந்தோருக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கும்.
ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் விரதமானது திருமணம் முடிவாகாமல் தாமதம் ஆகி வரும் இளைஞர்களுக்கானது. அதாவது குரு பகவானின் ஆசி கிடைத்தால் நிச்சயம் திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.
அதாவது குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக் கிழமை அன்று அரைப் பொழுது அல்லது முழுப் பொழுது விரதமும் இருக்கலாம். மேலும் கோயிலுக்குச் சென்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
வீட்டிலும் குரு பகவானுக்கு படையலிட்டு, நம்முடைய விரதத்தினை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் என திருமண வரம் கூடும்வரை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடல் வேண்டும்.
மேலும் திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.
மேலும் குரு பகவானின் சிறப்புமிக்க தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் விரதமானது திருமணம் முடிவாகாமல் தாமதம் ஆகி வரும் இளைஞர்களுக்கானது. அதாவது குரு பகவானின் ஆசி கிடைத்தால் நிச்சயம் திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.
அதாவது குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக் கிழமை அன்று அரைப் பொழுது அல்லது முழுப் பொழுது விரதமும் இருக்கலாம். மேலும் கோயிலுக்குச் சென்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
வீட்டிலும் குரு பகவானுக்கு படையலிட்டு, நம்முடைய விரதத்தினை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் என திருமண வரம் கூடும்வரை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடல் வேண்டும்.
மேலும் திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.
மேலும் குரு பகவானின் சிறப்புமிக்க தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
அருகம்புல்லை தூர்வை என்று சொல்வார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் தூர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தூர்வாஷ்டமி அன்று அருகம்புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.
ஒருவர் எத்தகைய நிலையில் கடன் வாங்கியிருந்தாலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு பத்தாமிடத்தில் கர்ம/ஜீவன ஸ்தானத்தில் கேது நின்றுவிட்டாலும், கர்ம காரகன் சனியுடன் சேர்க்கை பெற்று நின்றாலும் அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ஒரு போராட்டமாகவே அமைந்துவிடும். மேலும் கோசாரத்தில் சனி ஜெனன கேதுவை தொடர்பு கொண்டாலும் கோசாரக கேது ஜெனன சனியை தொடர்பு கொண்டாலும் இது போன்ற நிலை நீடிக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகருக்கு சனிக்கிழமைகளில் அருகம்புல் சாற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வரத் தொழில் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும்.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
காலையில் நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். பூஜை அறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர், அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத் தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம்.
இப்படி வழிபடும் போது சவுபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்“ (நிர்ணய ஸிந்து) என்று சொல்லி பூஜிக்க வேண்டும்
இவ்விரதத்தைக் கடைபிடிப்பதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.
அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள். என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள். என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த லட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள். நம்முடைய பெண் தெய்வங்கள்தான் கல்விக்கும், செல்வத்திற்கும் வீரத்திற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லட்சுமிதேவி வீரத்திற்கு அதிபதி பார்வதிதேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.
எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்தலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்தலட்சுமி என்று பல லட்சுமிகள் இருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.
அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.
அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
பதவியைத் தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றைத் தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி. வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியைத தருபவள் விஜயலட்சுமி.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
பலவகைகளிலும் லட்சுமி பூஜையை செய்தாலும் மகாலட்சுமி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்ய சில முறைகள் இருக்கின்றன.
திருமணமான பெண்கள்தான் மகாலட்சுமி பூஜையை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இந்த பூஜையை செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், சாதம் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.
எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்தலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்தலட்சுமி என்று பல லட்சுமிகள் இருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.
அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.
அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
பதவியைத் தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றைத் தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி. வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியைத தருபவள் விஜயலட்சுமி.
லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
பலவகைகளிலும் லட்சுமி பூஜையை செய்தாலும் மகாலட்சுமி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்ய சில முறைகள் இருக்கின்றன.
திருமணமான பெண்கள்தான் மகாலட்சுமி பூஜையை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இந்த பூஜையை செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், சாதம் இவைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.
விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம். சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது.
‘சீரடி சாய்பாபா யாருக்கும் எதுவும் தனிப்பட்ட முறையில் போதித்தது கிடையாது. அதே சமயத்தில் நிறைய பக்தர்களை கூட்டி வைத்து பிரசங்கம் செய்ததும் கிடையாது. மற்ற ஞானிகள் போல கட்டுரைகளையும் அவர் எழுதவில்லை. எப்போதாவது அவர் பரிபாஷையில் ஏதாவது சொல்வார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் அவர் காட்டிய தனித்துவ பாதைகளாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
அவர் ஒருபோதும் எந்த ஒரு விஷயத்திலும் பாகுபாடு பார்த்ததே கிடையாது. ஏழை - பணக்காரன், நல்லவன் - கெட்டவன், ஆண் - பெண் என்றெல்லாம் அவர் எந்த காலத்திலும் பிரித்து பார்த்ததே கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் குருவாக இருந்ததே கிடையாது.
ஆனால் 1918 - ம் ஆண்டு அவர் பரிபூரணம் அடைந்த பிறகு இந்த கொள்கையில் மட்டும் எப்படியோ மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதாவது பாபா காட்டிய பாதையில் சற்று கிளைப்பாதையை சில பக்தர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பாபா மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாக அந்த கிளைப்பாதைகள் உருவாகி விட்டன.
அதில் ஒன்று தான் பாபாவை குருவாக நினைத்து வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் பழக்கமாகும். இந்த பழக்கத்தை பாபா ஒருபோதும் அனுமதித்ததே கிடையாது. எந்த ஒரு காரணத்திற்காகவும் யாரும் பட்டினி கிடக்க கூடாது என்பதில் சீரடி சாய்பாபா மிகவும் தீவிரமாக இருந்தார். பசி இல்லாத உயிரினமே இந்த உலகில் இல்லை. பசி கொடுமையானது. வாயில்லா ஜீவன்களுக்கு பசியை சொல்லத்தெரியாது. எனவே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து பசியாற்ற வேண்டும் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வார்.
ஆனால் அதை மறந்துவிட்ட பாபா பக்தர்கள் தங்கள் நலனுக்காக 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு என்பதையே முன்னிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 9 வியாழக்கிழமை பாபா படத்திற்கு அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்று சொல்கிறார்கள்.
சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் - கோகிலா என்ற தம்பதியிடம் இருந்து இந்த 9 வார வழிபாடு தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.
மகேஷ் - கோகிலா தம்பதியிடம் சாது வடிவில் இருந்த முதியவர் ஒருவர் இந்த விரத முறைகளை சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் பாபாவே நேரடியாக இப்படி விரதம் இருங்கள் என்று ஒரு தடவைகூட சொன்னது கிடையாது. நன்றாக சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தான் ஆன்மிகத்தை பற்றி முழுமையாக நினைக்க முடியும் என்று தான் சொல்லியிருக்கிறார்.
இன்னொரு வகையில் சொல்வது என்றால் பாபாவும் பட்டினி கிடந்தது இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களையும் பட்டினி கிடக்க அவர் அனுமதிப்பதில்லை. சில தடவை அவரது பக்தர்களில் சிலர் விரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் முன்பு அமர்ந்தது உண்டு. அவர்களையெல்லாம் பாபா கண்டித்து விரட்டி விட்டதாக வரலாறு உள்ளன.
இது பற்றி ஒருதடவை பாபாவிடம் பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களை கண்கண்ட தெய்வமாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டு தானே விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஏன் நீங்கள் அனுமதிப்பது இல்லை என்று அந்த பக்தர் கேள்வி எழுப்பினார். அதற்கு சாய்பாபா பட்டினி கிடப்பவரின் மனம் அமைதியாக இருக்காது. அமைதி இல்லாத மனதிலும், உடலிலும் எப்படி ஆன்மிக மேம்பாட்டை எட்ட முடியும். எனவே தான் நான் யாரையும் வெறும் வயிற்றுடன் இருந்து இறைவழிபாடு செய்யுங்கள் என்று சொன்னது கிடையாது. முதலில் உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள். அதன் பிறகு மற்ற தேடல்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.
விரதம் காரணமாக நாக்கு வறண்டு விட்டால் எப்படி இறைவன் புகழை பாட முடியும்? பசி காரணமாக காதுகள் அடைத்துக்கொண்டால் இறைவன் புகழை எப்படி கேட்க முடியும்? எனவே உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் முழுமையாக சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாத உடல் சீர்குலைந்து போகும்போது ஆன்மிக பாதையில் எப்படி நடைபோட முடியும்? எனவே விரதம் தேவை இல்லை’ என்றார்.
ஒருதடவை ஒரு பெண்மணி நீண்ட தொலைவில் இருந்து சீரடிக்கு வந்திருந்தார். அவரது மனதில் சாய்பாபா முன்பு 3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து இருந்தார். திட்டமிட்ட படி அவர் துவாரகமயியில் உள்ள பாபா அருகில் சென்றார். அந்த பெண் பற்றிய எல்லா தகவல்களையும் பாபா ஏற்கனவே அறிந்து இருந்தார்.
அந்த பெண் பேசுவதற்கு முன்பு பாபாவே பேசத் தொடங்கினார். ‘உணவு என்பது மகா விஷ்ணுவின் வடிவம். அந்த உணவை சாப்பிடுபவரும் மகா விஷ்ணுவின் வடிவம் தான். அப்படி இருக்கும் போது எதற்காக பட்டினி கிடக்க வேண்டும்? எதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் நாக்கு வறண்டு அவஸ்தைப்பட வேண்டும்? எதற்காக இப்படி எல்லாம் வீணாக சிரமப்பட வேண்டும்? என்றார்.
பாபா சொன்னதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். நம் மனத்தில் இருப்பது பாபா அறிந்து இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார். அந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்குள் பாபாவே முந்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘பெண்ணே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள தாதாகேல்கர் வீட்டுக்கு செல். அங்கு உனக்கு தேவையான போளிகளை தயார் செய். அந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் கொடு. பிறகு நீ திருப்தியாக சாப்பிடு. உன் வயிறு நிரம்பியபிறகு திருப்தியும், ஆனந்தமும் உண்டாகும். அதன்பிறகு நீ இங்கே வா போதும்’ என்றார்.
பாபாவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அந்த பெண்ணுக்கு வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அன்றைய தினம் ஹோலி பண்டிகை தினமாகும். சீரடி கிராமமே உற்சாகத்துடன் இருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பாபா தனக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.
உடனடியாக அவர் தாதாகேல்கர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவி சமையல் செய்ய இயலாத நிலையில் பெண்களுக்குரிய பிரச்சினையுடன் காணப்பட்டார். இதனால் அந்த பெண் தாதாகேல்கர் வீட்டில் தானாக சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. விரதம் இருக்க வேண்டும் என்ற மனவைராக்கியத்துடன் வந்த அந்த பெண் சமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். பாபாவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அன்று அவர் சமைக்க ஆரம்பித்தார்.
பாபா சொன்னபடி சுவையான போளிகளை செய்தார். அதைபார்த்து தாதாகேல்கர் பிரமித்து போய் இருந்தார். அந்த சுவையான போளிகளை அவர்கள் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் விநியோகம் செய்தனர். பிறகு அந்த பெண் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். அந்த பெண்மணியின் விரத வைராக்கியம் அந்த நிமிடமே கரைந்து போனது.
உடனே பாபாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் நாசனேயை பார்த்து, ‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா’’ என்றார். அதிர்ச்சி அடைந்த நாசனே, ‘‘இப்போது ஆரத்தி நடக்கும் நேரம். ஆரத்தி முடிந்ததும் சாப்பிடுகிறேன்’’ என்றார். ஆனால் பாபா விடவில்லை.
‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா. நீ வந்த பிறகுதான் எனக்கு இங்கு ஆரத்தி நடைபெறும். அதுவரை நான் ஆரத்தியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று உறுதியான குரலில் கூறிவிட்டார். இதனால்வேறு வழி தெரியாத நாசனே சாப்பிட்டு விட்டு வந்தார். அவரிடம் ஒரு பீடாவை கொடுத்து, ‘‘சாப்பிடு’’ என்று பாபா உத்தரவிட்டார்.
ஏகாதசி தினத்தன்று வெற்றிலை, பாக்கு போடுவது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று அந்த காலத்தில் மிக தீவிரமாக கருதப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. அந்த சம்பிரதாயத்தை ஒரே நொடியில் பாபா உடைத்துக் காட்டினார். இப்படி பல பக்தர்களை அவர் சாப்பிட வைத்துள்ளார். மற்றொரு தடவை பீமாஜி என்ற பக்தர் கடுமையான உடல்நலக்குறைவால் ரத்த வாந்தி எடுத்தபடி சீரடிக்கு வந்தார். துவாரகமயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த சில மணி நேரங்களில் அவரது ரத்த வாந்தி நின்றது. பல மாதங்களாக நீடித்துவந்த உடல்நலக்குறைவு சீராகி குணமானது.
சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்து பாபாவின் அருளைப் பெற்ற அவர், பின்னர் தனது வீட்டுக்கு புறப்பட்டார். பாபாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர், ‘ஸ்ரீசாய் சத்திய விரத பூஜை’ என்ற வழிபாட்டை தொடங்கினார். இந்த வழிபாடு ‘சத்திய நாராயணா பூஜை’ போன்றே இருந்தது. அது பக்தர்களிடம் ‘பாபா பூஜை’ என்று பரவியது.
இதேபோன்றுதான் பாபா பெயரில் விரத பூஜைகள் விதவிதமாக வந்துவிட்டன. இதுபற்றி சீரடி சாய்பாபா ஒரு தடவை கூறுகையில், ‘‘பக்தர்கள் தேவையில்லாத பழக்கத்தை உருவாக்குகிறார்கள். பட்டினி கிடந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மாயையில் இருந்து விடுபடுவது கடினம். இத்தகைய மக்களை பற்றி இரவு, பகலாக நான் சிந்திக்கிறேன். என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது. அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து செல்ல யாரும் இல்லை’’ என்று வருத்தத்துடன் கூறினார்.
ஆகையால் பாபா பக்தர்கள் பாபாவின் உண்மையான பாதையை புரிந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடந்து ஒரு போதும் அவரை வழிபடாதீர்கள். பாபா இதேபோன்று இன்னொரு பாதையையும் காட்டி உள்ளார்.
பாபா தினமும் தன் பக்தர்களிடம் வலியுறுத்தியது மற்றவர்களிடம் அன்பாக இருங்கள் என்பதை தான். எல்லா உயிரினங்களிலும் அன்பை காட்டுங்கள் என்றார். எல்லா உயிரினங்களிலும் தான் வாழ்வதாக சொன்னார். அந்த உயிரினங்களிடம் அன்பை காட்டினால் அது தன்னிடம் காட்டப்படும் அன்புக்கு சமமாகும் என்றார்.
ஆனால் 1918 - ம் ஆண்டு அவர் பரிபூரணம் அடைந்த பிறகு இந்த கொள்கையில் மட்டும் எப்படியோ மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதாவது பாபா காட்டிய பாதையில் சற்று கிளைப்பாதையை சில பக்தர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பாபா மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாக அந்த கிளைப்பாதைகள் உருவாகி விட்டன.
அதில் ஒன்று தான் பாபாவை குருவாக நினைத்து வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் பழக்கமாகும். இந்த பழக்கத்தை பாபா ஒருபோதும் அனுமதித்ததே கிடையாது. எந்த ஒரு காரணத்திற்காகவும் யாரும் பட்டினி கிடக்க கூடாது என்பதில் சீரடி சாய்பாபா மிகவும் தீவிரமாக இருந்தார். பசி இல்லாத உயிரினமே இந்த உலகில் இல்லை. பசி கொடுமையானது. வாயில்லா ஜீவன்களுக்கு பசியை சொல்லத்தெரியாது. எனவே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து பசியாற்ற வேண்டும் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வார்.
ஆனால் அதை மறந்துவிட்ட பாபா பக்தர்கள் தங்கள் நலனுக்காக 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு என்பதையே முன்னிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 9 வியாழக்கிழமை பாபா படத்திற்கு அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்று சொல்கிறார்கள்.
சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் - கோகிலா என்ற தம்பதியிடம் இருந்து இந்த 9 வார வழிபாடு தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.
மகேஷ் - கோகிலா தம்பதியிடம் சாது வடிவில் இருந்த முதியவர் ஒருவர் இந்த விரத முறைகளை சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் பாபாவே நேரடியாக இப்படி விரதம் இருங்கள் என்று ஒரு தடவைகூட சொன்னது கிடையாது. நன்றாக சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தான் ஆன்மிகத்தை பற்றி முழுமையாக நினைக்க முடியும் என்று தான் சொல்லியிருக்கிறார்.
இன்னொரு வகையில் சொல்வது என்றால் பாபாவும் பட்டினி கிடந்தது இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களையும் பட்டினி கிடக்க அவர் அனுமதிப்பதில்லை. சில தடவை அவரது பக்தர்களில் சிலர் விரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் முன்பு அமர்ந்தது உண்டு. அவர்களையெல்லாம் பாபா கண்டித்து விரட்டி விட்டதாக வரலாறு உள்ளன.
இது பற்றி ஒருதடவை பாபாவிடம் பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களை கண்கண்ட தெய்வமாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டு தானே விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஏன் நீங்கள் அனுமதிப்பது இல்லை என்று அந்த பக்தர் கேள்வி எழுப்பினார். அதற்கு சாய்பாபா பட்டினி கிடப்பவரின் மனம் அமைதியாக இருக்காது. அமைதி இல்லாத மனதிலும், உடலிலும் எப்படி ஆன்மிக மேம்பாட்டை எட்ட முடியும். எனவே தான் நான் யாரையும் வெறும் வயிற்றுடன் இருந்து இறைவழிபாடு செய்யுங்கள் என்று சொன்னது கிடையாது. முதலில் உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள். அதன் பிறகு மற்ற தேடல்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.
சாய்பாபா மேலும் கூறுகையில், ‘ஒருவர் குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய முறையில் உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் அவரது உடல் உறுப்புகள் பலமிழந்து போய்விடும். உடலில் பலம் இல்லாவிட்டால் மனம் ஒத்துழைக்காது. உடலும், மனமும் சரியாக இல்லாத பட்சத்தில் இறைவனை எப்படி காணமுடியும்?
ஒருதடவை ஒரு பெண்மணி நீண்ட தொலைவில் இருந்து சீரடிக்கு வந்திருந்தார். அவரது மனதில் சாய்பாபா முன்பு 3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து இருந்தார். திட்டமிட்ட படி அவர் துவாரகமயியில் உள்ள பாபா அருகில் சென்றார். அந்த பெண் பற்றிய எல்லா தகவல்களையும் பாபா ஏற்கனவே அறிந்து இருந்தார்.
அந்த பெண் பேசுவதற்கு முன்பு பாபாவே பேசத் தொடங்கினார். ‘உணவு என்பது மகா விஷ்ணுவின் வடிவம். அந்த உணவை சாப்பிடுபவரும் மகா விஷ்ணுவின் வடிவம் தான். அப்படி இருக்கும் போது எதற்காக பட்டினி கிடக்க வேண்டும்? எதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் நாக்கு வறண்டு அவஸ்தைப்பட வேண்டும்? எதற்காக இப்படி எல்லாம் வீணாக சிரமப்பட வேண்டும்? என்றார்.
பாபா சொன்னதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். நம் மனத்தில் இருப்பது பாபா அறிந்து இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார். அந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்குள் பாபாவே முந்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘பெண்ணே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள தாதாகேல்கர் வீட்டுக்கு செல். அங்கு உனக்கு தேவையான போளிகளை தயார் செய். அந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் கொடு. பிறகு நீ திருப்தியாக சாப்பிடு. உன் வயிறு நிரம்பியபிறகு திருப்தியும், ஆனந்தமும் உண்டாகும். அதன்பிறகு நீ இங்கே வா போதும்’ என்றார்.
பாபாவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அந்த பெண்ணுக்கு வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அன்றைய தினம் ஹோலி பண்டிகை தினமாகும். சீரடி கிராமமே உற்சாகத்துடன் இருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பாபா தனக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.
உடனடியாக அவர் தாதாகேல்கர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவி சமையல் செய்ய இயலாத நிலையில் பெண்களுக்குரிய பிரச்சினையுடன் காணப்பட்டார். இதனால் அந்த பெண் தாதாகேல்கர் வீட்டில் தானாக சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. விரதம் இருக்க வேண்டும் என்ற மனவைராக்கியத்துடன் வந்த அந்த பெண் சமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். பாபாவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அன்று அவர் சமைக்க ஆரம்பித்தார்.
பாபா சொன்னபடி சுவையான போளிகளை செய்தார். அதைபார்த்து தாதாகேல்கர் பிரமித்து போய் இருந்தார். அந்த சுவையான போளிகளை அவர்கள் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் விநியோகம் செய்தனர். பிறகு அந்த பெண் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். அந்த பெண்மணியின் விரத வைராக்கியம் அந்த நிமிடமே கரைந்து போனது.
இப்படி தன்னை தேடி வந்த பலரையும் பாபா பக்குவப்படுத்தி சாப்பிட வைத்துள்ளார். ஒரு தடவை பாபாவை பார்ப்பதற்கு நாசனே என்ற பக்தர் வந்தார். அவரிடம், ‘‘சாப்பிட்டு விட்டீர்களா?’’ என்று பாபா கேட்டார். அதற்கு நாசனே, ‘‘இன்று ஏகாதசி தினம். விரதம் இருப்பேன். சாப்பிடமாட்டேன்’’ என்றார்.
‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா. நீ வந்த பிறகுதான் எனக்கு இங்கு ஆரத்தி நடைபெறும். அதுவரை நான் ஆரத்தியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று உறுதியான குரலில் கூறிவிட்டார். இதனால்வேறு வழி தெரியாத நாசனே சாப்பிட்டு விட்டு வந்தார். அவரிடம் ஒரு பீடாவை கொடுத்து, ‘‘சாப்பிடு’’ என்று பாபா உத்தரவிட்டார்.
ஏகாதசி தினத்தன்று வெற்றிலை, பாக்கு போடுவது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று அந்த காலத்தில் மிக தீவிரமாக கருதப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. அந்த சம்பிரதாயத்தை ஒரே நொடியில் பாபா உடைத்துக் காட்டினார். இப்படி பல பக்தர்களை அவர் சாப்பிட வைத்துள்ளார். மற்றொரு தடவை பீமாஜி என்ற பக்தர் கடுமையான உடல்நலக்குறைவால் ரத்த வாந்தி எடுத்தபடி சீரடிக்கு வந்தார். துவாரகமயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த சில மணி நேரங்களில் அவரது ரத்த வாந்தி நின்றது. பல மாதங்களாக நீடித்துவந்த உடல்நலக்குறைவு சீராகி குணமானது.
சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்து பாபாவின் அருளைப் பெற்ற அவர், பின்னர் தனது வீட்டுக்கு புறப்பட்டார். பாபாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர், ‘ஸ்ரீசாய் சத்திய விரத பூஜை’ என்ற வழிபாட்டை தொடங்கினார். இந்த வழிபாடு ‘சத்திய நாராயணா பூஜை’ போன்றே இருந்தது. அது பக்தர்களிடம் ‘பாபா பூஜை’ என்று பரவியது.
இதேபோன்றுதான் பாபா பெயரில் விரத பூஜைகள் விதவிதமாக வந்துவிட்டன. இதுபற்றி சீரடி சாய்பாபா ஒரு தடவை கூறுகையில், ‘‘பக்தர்கள் தேவையில்லாத பழக்கத்தை உருவாக்குகிறார்கள். பட்டினி கிடந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மாயையில் இருந்து விடுபடுவது கடினம். இத்தகைய மக்களை பற்றி இரவு, பகலாக நான் சிந்திக்கிறேன். என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது. அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து செல்ல யாரும் இல்லை’’ என்று வருத்தத்துடன் கூறினார்.
ஆகையால் பாபா பக்தர்கள் பாபாவின் உண்மையான பாதையை புரிந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடந்து ஒரு போதும் அவரை வழிபடாதீர்கள். பாபா இதேபோன்று இன்னொரு பாதையையும் காட்டி உள்ளார்.
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. அக்டோபர் 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களது சொந்த ஊரிலேயே தசரா குழு அமைத்து, வேடமணிந்து வீதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அன்னை முத்தாரம்மன் பெயரில் தர்மம் எடுத்து, சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு வந்து காணிக்கை சேர்ப்பார்கள்.
தற்போது வேடம் அணியும் முன் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் வசதிக்கு ஏற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என கணக்கிட்டு விரதம் இருப்பார்கள்.
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூடப்பட்டிருந்த கோவிலுக்கு முன்பு வெளியே நின்று, தனக்குத்தானே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
தசரா திருவிழாவிற்கு அரசு தடை விதித்தாலும், தசரா விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாட பக்தர்கள் தயாராகி விட்டனர்.
இந்த ஆண்டு திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. அக்டோபர் 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களது சொந்த ஊரிலேயே தசரா குழு அமைத்து, வேடமணிந்து வீதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அன்னை முத்தாரம்மன் பெயரில் தர்மம் எடுத்து, சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு வந்து காணிக்கை சேர்ப்பார்கள்.
தற்போது வேடம் அணியும் முன் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் வசதிக்கு ஏற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என கணக்கிட்டு விரதம் இருப்பார்கள்.
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூடப்பட்டிருந்த கோவிலுக்கு முன்பு வெளியே நின்று, தனக்குத்தானே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
தசரா திருவிழாவிற்கு அரசு தடை விதித்தாலும், தசரா விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாட பக்தர்கள் தயாராகி விட்டனர்.
அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத அமாவாசை தினமான இன்று குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். ஆவணி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
ஆவணி மாத அமாவாசை தினமான இன்று குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். ஆவணி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.
பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு. ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர்.
மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் புரிந்தார். நந்தி தேவர் மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். ஈசன் நடனம் புரிந்தது சனிக்கிழமை திரயோதசி தினத்தில். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.
சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சனிப் பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு. ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர்.
மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் புரிந்தார். நந்தி தேவர் மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். ஈசன் நடனம் புரிந்தது சனிக்கிழமை திரயோதசி தினத்தில். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.
சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சனிப் பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.






