என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்ம நாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
திருக்கோவிலின் அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும்.
தேய்பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.
தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக்கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கருவறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாத வனத்தை அடையலாம்.
ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சில எளிய பரிகாரங்களை நாம் செய்து வந்தால் நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்க்கலாம்...
ஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், திய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம் சில எளிய பரிகாரங்கள் நாம் செய்து வர நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்...
மேஷ ராசியினர் கஷ்டமான நேரத்தில் கூட வாழ்வில் நல்ல பலனைப் பெற, தங்களுடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தான் மிகச் சிறந்த பரிகாரமாகும். ராசி அதிபதி செவ்வாய் பகவானின் அருள் பெற உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வது தான் மிகச் சிறந்த பரிகாரம்.
ரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதி சுக்கிர பகவான். அதனால் வெள்ளிக்கிழமை தோறும் அவருக்கு விருப்பமான வெள்ளை நிற பூக்களை கொண்டு கையில் ஏந்தியவாறு, ஓடும் ஆற்று நீர், ஓடையில் நின்று “ஓம் சுக்ராயே நமஹ்” என்ற மந்திரத்தை 6 முறை துதித்துவிட்டு அந்த பூக்களை நீரில் விட வேண்டும். வெள்ளை நிற உணவு பொருள், தானியங்களைத் தானமாக அளிக்கலாம்.
மிதுன ராசியினர் தினமும் மகாலட்சுமியை வணங்குவது அவசியம். பழனி முருகனை வணங்குவதும், ஒரு நாள் அங்கு சென்று தங்கி முருகனை வணங்கி யாசகர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் நாம் செய்த பாவ தோஷங்கள் நீங்கி வாழ்வில் பல்வேறு வகையில் நன்மைகள் ஏற்படும்.
கடக ராசியினர் சந்திர தரிசனம் செய்வது சிறப்பானது. இந்த ராசியினர் பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடைகள், கைக்குட்டைகள் பயன்படுத்தி வருவதால் பல்வேறு வகையில் பாதங்கள் நீங்கி அதிர்ஷ்ட வாய்ப்புகள், நன்மைகள் உண்டாகும்.
சிம்ம ராசி அதிபதி சூரியன். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையின் 7ம் நாள் குளித்து சுத்தமாக சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுவதும், சூரிய நாராயணரை வணங்குதல், மகா விஷ்ணுவை வழிபடுவது மிக அவசியமாகும்.
கன்னி ராசியினர் நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவது அவசியம். இவர்கள் வசிக்குமிடம் நெரிசலான பகுதியாக இல்லாமல், சற்று காற்றோட்டமும், நெருக்கமில்லாத பகுதியில் வசிப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
துலாம் ராசி நாதன் சுக்கிர பகவான் (வெள்ளி கிரகம்). உங்கள் வாழ்நாளில் எப்போதும் நல்ல பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்றுக் குட்டியை ஈன்ற பசுமாட்டிற்கு அகத்திக் கீரை, பழங்களை வழங்குவதால் நல்ல பலன்கள் பெறலாம்.
விருச்சிக ராசியினர் எப்போதும் சுப பலன்களைப் பெற வேண்டுமென்றால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசிய உங்களின் குல தெய்வ கோயிலுக்கு சென்று படையலிட்டு வழிபாடு செய்து வருவது அவசியம்.
தனுசு ராசி அதிபதி குரு பகவான். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வதும், மஞ்சள் நிற பூக்களால் குரு பகவானை வழிபடுதல், இனிப்பு பதார்த்தங்களைப் பக்தர்களுக்கு நைவேத்தியமாக வழங்குவதும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிக நல்ல பலனைத் தரும்.
மகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமை தோறும் முருகப் பெருமானையும், சனிக் கிழமைகளில் ராமர், அனுமன் வழிபாடு செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். அதனால் சனிக்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்து, நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், காலை உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிறந்தது.
மீன ராசிக்கு அதிபதி குரு பகவான். நீங்கள் குருவின் அருள் பெற சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களில் வழிபடுவதும், குரு பகவானுக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைப் பெறலாம்.
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம், மற்றும் பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்..
சிலர் அரசு வேலை தான் வேண்டும் என்ற லட்சியத்தில் அதற்கான தேர்வை எழுதி வெற்றி பெற அதற்காக கடுமையாக படித்தும், முயன்றும் வருகின்றனர். அப்படி அரசு வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய நபர்கள் அவர்கள் தேர்வுக்காக படிப்பது அல்லது உடல் கட்டுமானமோ மேற்கொள்ளுவது வழக்கம்.
அவர்கள் அனைவரும் அரசு வேலைக்கான முயற்சி ஒரு புறம் செய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் கீழே குறிப்பிட்ட எளிய பரிகாரத்தை செய்து வர அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை பெறுவதை பார்க்கலாம்.
சூரிய பகவானுக்குரிய நாள் ஞாயிறு. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டு மாடியில் ஒரு தீபத்தை ஏற்றி சூரியனை பார்த்தபடி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியில் கூட செய்யலாம்.
தீபம் ஏற்றும் போது ஏதேனும் நைவேத்தியம் வைத்து வணங்கவும். (கல்கண்டு, பொரிகடலை சர்க்கரை). நாம் இறைவனுக்கு படைக்கக் கூடிய நைவேத்தியம் எப்போதும் வீணாக்கக் கூடாது.
சூரிய பகவானை வணங்கி விட்டு அவருக்குரிய காயத்திரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கலாம். இந்த வழிபாட்டை 20 நிமிடம் செய்வது உகந்தது. ஒவ்வொரு வாரமும் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வர விரைவில் நல்ல பலனை காணலாம்.
உங்கள் ஜனன கால ஜாதகத்தில் சூரிய தசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் அல்லது நீச கிரகத்துடன் சேர்ந்து இருப்பினும், அல்லது பகை நிலையில் இருந்தாலோ, மறைந்து இருந்தாலோ செய்யலாம்.
மேலும் அரசு பதவியில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவிக்கு முயல்பவர்களும், ஆளுமை திறன் கூடுவதற்கும், தந்தை மகன் உறவு நிலை சீராகவும், அதிகாரம் பெறவும், அரசு சார்ண்ட வேலைக்கு முயற்சி செய்பவர்கள் மட்டுமல்லாமல், அரசு சார்ந்த ஏதேனும் வேலை நமக்கு நடக்க வேண்டுமென்றால் சாதகமாக முடியவும், கண் கோளாறு தீர என பல்வேறு பிரச்சினைகளுக்குச் சூரிய வழிபாடு நல்ல தீர்வைத் தரும்.
காயத்ரி மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
ஜனவரி மாதத்தில் உள்ள மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு அளவேனும் திருப்பிக் கொடுங்கள். இந்த மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மூன்று மைத்ர முகூர்த்த நாட்கள் வருகின்றன. வருகிற 20ம் தேதி மதியம் 2 மணி முதல் 2.55 வரை மைத்ர முகூர்த்தம். 21ம் தேதி மதியம் 1.10 முதல் 3.10 மணி வரை மைத்ர முகூர்த்தம்.
மைத்ர முகூர்த்த நாளில், கடன் வாங்கியவரை சந்தித்து அந்தத் தொகையைக் கொடுக்க இயலாத நிலை இருந்தால், நாம் கொடுக்க திட்டமிட்டிருந்த தொகையை சுவாமிப் படத்துக்கு முன்னே வைத்துவிடுங்கள். மைத்ர முகூர்த்த நேரத்தில் சுவாமி படத்துக்கு முன்னே வைத்துவிட்டு, அன்றைய நாளிலோ அதையடுத்த நாளிலோ வழங்குங்கள். சீக்கிரமே கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ்வீர்கள்!
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர்.சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார். இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார் சிவன். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால், அனுமனின் வாலாக பார்வதியும் உடன் வந்தாள். மேலும் அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
வாலில் நுனியில் இருந்து, இந்த 'பொட்டு வைக்கும் பிரார்த்தனையை' தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து, ஒரு மண்டலத்திற்குள் (48 நாள்) பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறும். அவல், தேன், பானகம், கடலை, இளநீர் படைத்து வழிபடலாம்.
ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.
ஒருவருடைய ஜாதகத்தில் யோகம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், உயர்ந்த செல்வம், பட்டம், பதவி மற்றும் அனைத்து வகையான செல்வமும் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதே போல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரரோ ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர் உலக உயிர்களுக்கு ஞானம் அருள்பவர். இங்கே அம்பாளின் ஆற்றலை பெற்று சக்தி மயமாக சுவாமியும், சுவாமி ஆற்றலைப் பெற்று சக்தி சிவமயமாகவும் அமர்ந்து இருப்பதால் பரிவர்த்தனை யோகத்தில் நவகிரக நாயகி அருள்பாலிக்கிறாள்.
சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தை வழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடியவர். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாம் தந்தை வழி உறவுகளான ஒற்றுமை பாதிக்கப்பட்டு இருந்தாலும், பூர்வீக சொத்தில் வில்லங்கம், உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு. தலை, கண்கள், வயிற்று வலி, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள், சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசு வழி அனுமதி கிடைப்பதில் தாமதம், சிலருக்கு திருமண தாமதம் உள்ளவர்கள் சூரிய தோஷத்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் வரும்.
இந்த வகை பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.
சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.
சுக்கிரன் களத்திரகாரகன் அதாவது கணவன்-மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். கணவன்-மனைவியிடம் மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால் புது வாகன யோகமோ அல்லது வாகன யோக தடையோ ஏற்படும்.
உடலில் முதுகு தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக் கல், பிரசவ காலப்பிரச்சினை மனைவி வழி உறவுகளிடம் அடிக்கடி பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் குலசேகரப்பட்டினம் கடலில் நீராடிவிட்டு வரும் வழியில் இருக்கும் சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு வெள்ளை கலர் மாலை, வெள்ளை அரளி, மல்லிகை, பிச்சி போன்ற மாலைகளை சாத்தி குலசை அம்மனை வழிபட்டு வந்தால் நவகிரக நாயகி உங்களுக்கு உள்ள எல்லாவித தோஷத்தையும் நீக்கி தருவாள்.
நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.
குரு நல்ல பாடங்களை கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன், குழந்தையின்மை, குழந்தைகளின் ஆரோக்கியம் சீர்கெடுதல், குழந்தைகளிடம் அடிக்கடி பிரச்சினைகள், ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பை கோளாறுகள், வயிறு உபாதை, தலை சுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மன அழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பு ஆகலாம். அதை பாதுகாப்பது எப்படி என்பதை கீழே காண்போம்.
வியாழக்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு மூவுலக நாயகி, முப்பெருந்தேவி, முத்தாரம்மனை மஞ்சள் நிற மாலை சூட்டி வணங்கி வாருங்கள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள். நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள்.
உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா?அப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்
புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்கு காரணமானவன். புதன் அமைப்பு தோஷமாக இருந்தால் படிப்பு தடை படுதல், பாட்டு இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடை படுதல், அடிக்கடி உடல் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், புதன் தோஷத்தால் ஏற்படும். புதன் அமைதியான கிரகம். எனவே அமைதியாக இருக்க பாருங்கள்.
உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா? புதன்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு, அன்னை முத்தாரம்மனுக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி, உங்கள் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்தால் பட்டம், பதவி பெற முப்பெருந்தேவியாக விளங்கும் முத்தாரம்மன் மங்களகரமாய் உதவுவாள். உயர் பதவிக்கு உயர்த்துவாள்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
கடன் அதிகரித்து கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு ரத்த தொற்று நோய், அடிக்கடி காயம் ஏற்படுதல், தலை சுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளின் சிரமம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சிரமப்படும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் காலையில் நன்றாக குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அதன் பின்பு முத்தாரம்மன் கோவிலில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.
அதன்பின் நவக்கிரக நாயகி முத்தாரம்மனை தரிசித்து சர்க்கரை பாயாசம் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள். உங்கள் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் தனி சன்னதி உடன் அருள்பாலிக்கிறார், சனீஸ்வர பகவான். இத்தலத்தில் சூரியனின் மனைவிகளான உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரும் திருமியச்சூரில் உள்ள மேகநாதரை நோக்கி புத்திர பாக்கியம் வேண்டி தவம் செய்தனர்.
அப்போது இறைவன், நீங்கள் இருவரும் கணவரோடு இருந்து மேற்கே உள்ள ஈசனை வழிபட்டால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று வரம் அளித்தார். அதன்படி சூரியன், உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் மேகநாதசுவாமி கூறிய இடத்திற்கு சென்று சிவபூஜை செய்து வழிபாடு செய்தனர்.
சிறப்பு வாய்ந்த இந்த மங்கல சனீஸ்வர பகவான் ஆலயம், மற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தையும் விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






