search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

    கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம்

    உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா?அப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்
    புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்கு காரணமானவன். புதன் அமைப்பு தோஷமாக இருந்தால் படிப்பு தடை படுதல், பாட்டு இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடை படுதல், அடிக்கடி உடல் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், புதன் தோஷத்தால் ஏற்படும். புதன் அமைதியான கிரகம். எனவே அமைதியாக இருக்க பாருங்கள்.

    உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா? புதன்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு, அன்னை முத்தாரம்மனுக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி, உங்கள் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்தால் பட்டம், பதவி பெற முப்பெருந்தேவியாக விளங்கும் முத்தாரம்மன் மங்களகரமாய் உதவுவாள். உயர் பதவிக்கு உயர்த்துவாள்.
    Next Story
    ×