search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரிய வழிபாடு
    X
    சூரிய வழிபாடு

    அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கான பலன் தரும் பரிகாரம்

    அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம், மற்றும் பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்..
    சிலர் அரசு வேலை தான் வேண்டும் என்ற லட்சியத்தில் அதற்கான தேர்வை எழுதி வெற்றி பெற அதற்காக கடுமையாக படித்தும், முயன்றும் வருகின்றனர். அப்படி அரசு வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய நபர்கள் அவர்கள் தேர்வுக்காக படிப்பது அல்லது உடல் கட்டுமானமோ மேற்கொள்ளுவது வழக்கம்.

    அவர்கள் அனைவரும் அரசு வேலைக்கான முயற்சி ஒரு புறம் செய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் கீழே குறிப்பிட்ட எளிய பரிகாரத்தை செய்து வர அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை பெறுவதை பார்க்கலாம்.

    சூரிய பகவானுக்குரிய நாள் ஞாயிறு. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டு மாடியில் ஒரு தீபத்தை ஏற்றி சூரியனை பார்த்தபடி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியில் கூட செய்யலாம்.

    தீபம் ஏற்றும் போது ஏதேனும் நைவேத்தியம் வைத்து வணங்கவும். (கல்கண்டு, பொரிகடலை சர்க்கரை). நாம் இறைவனுக்கு படைக்கக் கூடிய நைவேத்தியம் எப்போதும் வீணாக்கக் கூடாது.

    சூரிய பகவானை வணங்கி விட்டு அவருக்குரிய காயத்திரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கலாம். இந்த வழிபாட்டை 20 நிமிடம் செய்வது உகந்தது. ஒவ்வொரு வாரமும் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வர விரைவில் நல்ல பலனை காணலாம்.

    உங்கள் ஜனன கால ஜாதகத்தில் சூரிய தசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் அல்லது நீச கிரகத்துடன் சேர்ந்து இருப்பினும், அல்லது பகை நிலையில் இருந்தாலோ, மறைந்து இருந்தாலோ செய்யலாம்.

    மேலும் அரசு பதவியில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவிக்கு முயல்பவர்களும், ஆளுமை திறன் கூடுவதற்கும், தந்தை மகன் உறவு நிலை சீராகவும், அதிகாரம் பெறவும், அரசு சார்ண்ட வேலைக்கு முயற்சி செய்பவர்கள் மட்டுமல்லாமல், அரசு சார்ந்த ஏதேனும் வேலை நமக்கு நடக்க வேண்டுமென்றால் சாதகமாக முடியவும், கண் கோளாறு தீர என பல்வேறு பிரச்சினைகளுக்குச் சூரிய வழிபாடு நல்ல தீர்வைத் தரும்.

    காயத்ரி மந்திரம் 

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சூரிய பகவான் மந்திரம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
    Next Story
    ×