search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசை முத்தாரம்மன்
    X
    குலசை முத்தாரம்மன்

    குருதோஷம் விலகி கல்யாண வரம் அருளும் குலசை முத்தாரம்மன்

    நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.
    குரு நல்ல பாடங்களை கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன், குழந்தையின்மை, குழந்தைகளின் ஆரோக்கியம் சீர்கெடுதல், குழந்தைகளிடம் அடிக்கடி பிரச்சினைகள், ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பை கோளாறுகள், வயிறு உபாதை, தலை சுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மன அழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பு ஆகலாம். அதை பாதுகாப்பது எப்படி என்பதை கீழே காண்போம்.

    வியாழக்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு மூவுலக நாயகி, முப்பெருந்தேவி, முத்தாரம்மனை மஞ்சள் நிற மாலை சூட்டி வணங்கி வாருங்கள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள். நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள்.
    Next Story
    ×