என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.
    • அரையர் என்றால் தலைவன் என்று பொருள்.

    வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ நாத முனிகள். அவர் 1200 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் காட்டுமன்னார்குடி என்னும் ஊரில் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

    வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை அளப்பரியது. இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் அரையர் சேவை. அரையர் என்றால் தலைவன் என்று பொருள்.

    திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. ''அன்றாயர் குல மக்களுக்கு அரையன் தன்னை'' என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

    முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை உண்டாக்கினார் நாதமுனிகள் தன் காலத்தில் உருவாக்கினார்.

    திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையும் தனித்துவமாக அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும்.

    குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம்பரையாக வந்த கைத்தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில்களில் மட்டும் காணப்படும். நாதமுனிகளின் அவதார உற்சவம் ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி முதலிய எல்லா கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பஜனை மடங்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் அனுசரிக்கப்படும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-6 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 7.40 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 6.25 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமர் கோவில்களில் சுவாமி புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்க கைலாச வாகனத்திலும், அன்னை ஸ்ரீ காந்திமதியம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைதாழி சேவை. திருக்கோளக்குடி கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-திறமை

    சிம்மம்-தேர்ச்சி

    கன்னி-பொறுமை

    துலாம்- கடமை

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- பொறுப்பு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-தாமதம்

    மீனம்-முயற்சி

    • விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
    • மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.

    சிவனுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. திரியோதசியும் சதுர்த்தசியும் இணையும் நாளை பிரதோஷம் என்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வீதம் வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் வருகிறது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உள்ள 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தினமும் வருவதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.

    அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்குச் சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    இன்று ஆனி ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
    • பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    யுகங்கள் ஆரம்பிக்கும் முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா படைக்கப்பட்டார், லகங்களையும், உயிர்களையும் தோற்றுவிக்கவே இவர் படைக்கப்பட்டார்.

    அதன்படி வேதங்களின் உதவியுடன் தன் படைப்பு வேலையைச் செய்த வந்தார்.

    பிரம்மா நல்லவர்களையும், தீயவர்களையும் தோற்றுவித்தார், நல்ல குணம் உடைய தேவர்கள், தீய குண்ட கொண்ட அசுரர்களுக்குத் தொல்லையாகத் தோன்றினர்.

    எனவே பிரம்மா இனி தேவர்களைப் படைக்கக் கூடாது என்பதற்காக மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்று விட்டனர்.

    வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.

    பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    பகவான் விஷ்ணு, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரிவராக அவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்து படைப்பு தொழிலை தொடரச் செய்தார்.

    சகலவல்லியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எல்லா வேதங்களையும், வித்தைகளையும், கல்விச் செல்வங்களையும் ஸ்ரீ ஹயக்ரிவரே அளித்து அருளினார்.

    கல்வியில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் ஸ்ரீ ஹயக்ரிவ பகவானை தினமும் வேண்டிக் கொண்டு சுவாமி தேசிகனின் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வர வேண்டும்.

    "ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்

    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே"

    • நரசிம்ம அவதாரம்- செவ்வாய்
    • வாமன அவதாரம்- குரு

    1. ராமாவதாரம்-சூரியன்

    2. கிருஷ்ணாவதாரம்-சந்திரன்

    3. மச்சஅவதாரம்-கேது

    4. கூர்ம அவதாரம்-சனி

    5 வராக அவதாரம்-ராகு

    6. நரசிம்ம அவதாரம்-செவ்வாய்

    7. வாமன அவதாரம்-குரு

    8. பரசுராம அவதாரம்-சுக்கிரன்

    9. பலராம அவதாரம்-குளிகன்

    10. கல்கி அவதாரம்-புதன்

    • மதுரகவியாழ்வார் - குமுதம்
    • குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் திருமாலின் அம்சங்கள்.

    திருமாலின் அம்சமாக பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் தோன்றினார்கள்.

    அதன் விபரம்:

    1. பொய்கையாழ்வார்-சங்கு (பாஞ்சசன்யம்)

    2. பூதத்தாழ்வார்-கதை (கவுமோதகி)

    3. பேயாழ்வார்-வாள் (நந்தகம்)

    4. திருமழிசையாழ்வார்- சக்கரம் (சுதர்சனம்)

    5. நம்மாழ்வார்- விஷ்வக்சேனர்

    6. மதுரகவியாழ்வார்- குமுதம்

    7. குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    8. பெரியாழ்வார்- கருடன்

    9. ஆண்டாள்- பூமகள்

    10. தொண்டரடிப் பொடியாழ்வார் - வனமாலை

    11. திருப்பாணாழ்வார்- ஸ்ரீவத்ஸஜீம்

    12. திருமங்கையாழ்வார்- வில் (சார்ங்கம்)

    13. ராமானுஜர்- ஆதிசேஷன்

    • சிவம் என்ற சொல்லுக்கு “மங்களமானது” என்று பொருள்.
    • சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவம் என்ற சொல்லுக்கு "மங்களமானது" என்று பொருள்.

    சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவபெருமானை காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும். மாலையில் தரிசிக்க - பாவம் அகலும். அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

    அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோவில்கள் பல உண்டு.

    ஜோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சப்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோவில்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.

    மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

    • விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
    • அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

    பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

    முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.

    மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பவாகும்.

    தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.

    கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வரவேண்டும்.

    வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

    விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.

    அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.

    கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணைய் ஊற்ற வேண்டும்.

    இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

    • துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    • கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மேஷம் ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு படைத்து சிவபஞ்சாட்சர மந்திரத்தை சொல்ல வேண்டும்.

    ரிஷபம் ராசிக்காரர்கள் தயிரை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மிதுனம் ராசிக்காரர்கள் கறும்பு சாறு கொண்டு அபிஷகம் செய்ய வேண்டும்.

    கடகம் ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    சிம்மம் ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கன்னி ராசிக்காரர்கள் வெறும் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    விருச்சிகம் ராசிக்கார்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாராட்ர மந்திரத்தை படித்தால் இன்னல்கள் நீங்கும்.

    மகரம் ராசிக்காரர்கள் நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து வில்வ பழத்தை படைத்து வழிபட வேண்டும்.

    கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    1.         லிங்கோத்பவர்-மோட்சப்பிரதாயினி-மோட்சம் சித்திக்கும்

    2.            திரிமூர்த்தி-வம்ச விருத்தி பிரதாயினி   -குழந்தைப்பேறு கிட்டும்

    3.            கல்யாண சுந்தரர் -    சர்வ மங்களா தேவி        -           திருமணப் பேறு கிடைக்கும்

    4.            சுகாசனர்          -                    தர்மசம்வர்த்தினி         -               நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    5.            கங்காதரர்      -              சர்வ பாவஹரணி            -            பாவங்கள் விலகும்

    6.            நடேசர்           -                சம்பத்யோக காரணி              -   மகப்பேறு கிட்டும்

    7.            சண்டேச அனுக்ரகர்- மகாபாதக நாசினி          -            கெட்ட எண்ணம் நீங்கும்

    8.            ரிஷபாரூடர்           -     தர்மசித்திப் பிரதாயினி     -       நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

    9.             நீலகண்டர்              -    விஷதோஷ் நிவர்த்தினி       -      விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

    10.ஹரிஹர மூர்த்தி- தர்மார்த்தாயினி -வழக்குகளில் வெல்லலாம்

    11.ஏகபாத மூர்த்தி- மகாரோக விநாசினி -தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    12.உமாசகாயர் -பார்யா சவுபாக்யப் பிரதாயினி -மனைவியின் உடல்நலம் சீராகும்

    13.அர்த்தநாரீஸ்வரர்- சவுபாக்ய பிரதாயினி-  தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    14.தட்சிணாமூர்த்தி- மேதாப்ரக்ஞ பிரதாயினி- கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    15.சோமாதி நாயகர்- சர்வ சித்தி -காரணிசகலமும் சித்தியாகும்

    16.சோமாஸ்கந்தர்- புத்ர சவுபாக்யபிரதாயினி -குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

    17.சந்திர மவுலீஸ்வரர் -தனதான்ய பிரதாயினி -தனமும் தானியமும் சேரும்

    18.வீரபத்ரர்சத்ரு -வித்வேஷ் நாசினி -எதிரி பயம் நீங்கும்

    19.காலசம்ஹாரர்- சர்வாரிஷ்ட நாசினி-  மரண பயமும், அகால மரணமும் நேராது

    20.காமாந்தகர் -ரோக விக்ன நாசினி-  தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    21.கஜசம்ஹாரர்- பராபிசார சமநீ -பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

    22.திரிபுர சம்ஹாரர் -ஜன்ம ஜரா ம்ருத்யு விநாசினி -பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

    23.பிட்சாடனர்- யோசித் பந்தவி மோஹினி-  மோகமாயை விலகும்

    24.ஜலந்தர- சம்ஹாரர்துஷ்ட விநாசினி -விரோதிகள் விலகுவர்

    25.சரப மூர்த்தி- அரிப்ரணாசினி-             மாயை, கன்மம் விலகும்

    26.பைரவர்                       -  ரஷாகரி -இறையருள் எப்போதும் காக்கும்

    • மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.
    • அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.

    சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம்.

    இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும்.

    மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.

    அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.

    இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.

    உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா?

    சிவன் லிங்க வடிவமாக உள்ளார்.

    லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு.

    ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.

    சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது.

    ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

    ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது.

    நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதி அந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.

    • தெய்வீக லிங்கம்:- திருமால், இந்திரன், அயன் ஆகிய தேவர் பெருமக்களால் நிறுவப்பட்டது.
    • மானுடலிங்கம்:- மனுவம்ச மன்னர்கள் பரசுராமர், ராமர் முதலியோர்களால் நிறுவப்பட்டது.

    சிவலிங்கத் திருமேனிகள் அமையும் விதம் குறித்து சிவாகம நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    பார்த்த லிங்கம்:- ஈஸ்வரன் மகா சமசார காலம் வரை சந்நிதியில் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது பார்த்த லிங்கமாகும். இது ஸ்திரலிங்கம் என்றும் பெயர் பெறுகிறது.

    சுயம்பு லிங்கம்:- தானே தோன்றுவது. சிறப்புடைய லிங்க வகை. எங்கும் எதிலிருந்தும் வெளிப்படும் அருவுருவ வடிவானது. காணலிங்கம், விநாயகர், வைரவர், வீரபத்திரர் ஆகிய சிவகணாதிபர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

    தெய்வீக லிங்கம்:- திருமால், இந்திரன், அயன் ஆகிய தேவர் பெருமக்களால் நிறுவப்பட்டது.

    ஆரிட லிங்கம்:- அகத்தியர், புலஸ்தியர், நாதரதர், அத்திரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், காசிபர், வாமதேவர், பிருகு போன்ற மகரிஷிகள் முனிவர்களால் நிறுவப்பட்டது.

    மானுடலிங்கம்:- மனுவம்ச மன்னர்கள் பரசுராமர், ராமர் முதலியோர்களால் நிறுவப்பட்டது.

    கணிக லிங்கம்:- ஒரு தடவை மட்டுமே பூஜை செய்த உடன் கரைத்து விடப்படுகிற இவ்வகை சிவலிங்கங்கள் மண், அரிசி, கோமியம், ஆற்று மணல், அன்னம், வெண்னை, ருத்ராட்சம், சந்தனம், தர்ப்¬ப,

    புஷ்பமாலை, சர்க்கரை, அரிசி மாவு ஆகிய 12 பொருட்களுடன் மூன்றை சேர்த்து செய்வது.

    ×