என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
- கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்குச் சென்ற அவர் நேற்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து, அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார்.
இதற்கிடையே, துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்நிலையில், பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களைப் பார்வையிட்டு அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.
- அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பாரத் மார்ட் வணிக மையத்தை திறந்து வைத்தார். இதோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
- கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் அபுதாபியில் நடந்த அஹ்லன் மோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
இன்று பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.
அதன்பின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் கடந்த மாதம் முடிந்தது.
இரும்பு, கம்பிகள் இல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது. கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும். அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.700 கோடியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இதில் கோவில் கட்டிடம் மட்டும் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். அங்கு நடக்கும்பூஜைகளில் கலந்து கொள்கிறார்.
- பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்தார். சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இத்துடன் யு.பி.ஐ. ரூபே கார்டு சேவையை இருவரும் இணைந்து அறிமுகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. டெல்லி அபு தாபி வளாகத்தில் பயின்று வரும் முதல் பேட்ச் மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி "அஹ்லன் மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடியை காண ஏராளமான இந்திய சமூகத்தினர் இந்த மைதானத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். மைதானத்திற்குள் பிரதமர் மோடி நுழைந்த போது இந்திய சமூகத்தினர் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்று அபுதாபியில் நீங்கள் வரலாற்றை உருவாக்கி இருக்கின்றீர்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். ஆனாலும், அனைவரின் இதயமும் இணைந்தே இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில் ஒவ்வொருத்தரின் இதய துடிப்பும் மற்றும் சுவாசத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு நீடிக்கட்டும் என்றே சொல்கிறது."

"நான் எனது குடும்ப உறுப்பினர்களை காண இங்கு வந்துள்ளேன். நீங்கள் பிறந்த இடத்தின் மண்வாசனை மற்றும் 140 கோடி மக்களின் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அந்த தகவல் என்னவென்றால், 'பாரதம் உங்களால் பெருமை கொள்கிறது' என்பதே ஆகும்."
"2015-இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக வந்த நினைவு இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் ஐக்கிய அரபு அமீரகம் வருவது அப்போது தான் முதல் முறையாக இருந்தது. மேலும் தந்திர உலகமும் எனக்கு புதிதான ஒன்று. விமான நிலையத்தில் அன்றைய பட்டத்து இளவரசரும், இன்றைய அதிபருமான அவரது சகோதரர்கள் ஐந்து பேரும் என்னை வரவேற்றனர். அவர்களின் கண்களில் இருந்த பிரகாசத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த வரவேற்பு எனக்கானது மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கானது."

"கடந்த பத்து ஆண்டுகளில் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வருகிறேன். சகோதரர் ஷேக் முகமது பின் ஜாயத் என்னை வரவேற்க இன்று விமான நிலையம் வந்திருந்தார், இது அவரை சிறப்பான ஒருவராக மாற்றுகிறது. அவரை நான்கு முறை இந்தியாவுக்கு வரவேற்ற வாய்ப்பு நமக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் குஜராத் வந்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க லட்சக்கணக்கானோர் வீதிகளில் கூடியிருந்தனர்."
"ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு மிகப்பெரிய விருது- தி ஆர்டர் ஆஃப் ஜாயத் வழங்கி இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த கௌரவம் எனக்கானது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களான உங்களுக்குமானதும் கூட. 2015-ம் ஆண்டு அபுதாபியில் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் சார்பாக நான் அவரிடம் வைத்தேன், அவர் உடனே அதற்கு அனுமதி கொடுத்தார். தற்போது இந்த கோவிலை பிரமாண்டமாக திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.
- பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டுச் சென்றார்.
- யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இரு நாட்டு தலைவர்களும் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
அபுதாபி:
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மேலும் யுபிஐ ரூபே கார்டு திட்டத்தை இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
பிரதமர் மோடி துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை நாளை திறந்துவைக்கிறார்.
2015-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் 7-வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | PM Modi and UAE President Sheikh Mohammed Bin Zayed Al Nahyan introduce UPI RuPay card service in Abu Dhabi. pic.twitter.com/uvIY0o1kIy
— ANI (@ANI) February 13, 2024
- பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"அஹ்லன் மோடி" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் விருப்பம் தெரிவித்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து இருந்தனர்.

எனினும், நேற்றிரவு ஏற்பட்ட வானிலை இடர்பாடுகளால் அஹ்லன் மோடி நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.
அபுதாபியில் வசிப்பவரும், அஹ்லன் மோடி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வேத் பிரகாஷ் குப்தா இது குறித்து பேசும் போது, "இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள உறவில் இது மிகப்பெரிய மைல்கல் ஆகும். இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 1500 பேர் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறோம்."
"நேற்று கனமழை பெய்தது, ஆனால் இன்று வானிலை தெளிவாகவே உள்ளது. எல்லோரும் பிரதமர் மோடிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம்..," என்று தெரிவித்தார்.
- உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
- இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.
அபுதாபி:
உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி மதிப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர். இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன.
இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகுசாதன நிறுவனமான பென்டி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என பிரபல நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். இதன் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களை செய்துவருகிறது.
இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
- டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.
துபாய்:
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2வது போட்டியில் யு.ஏ.இ.யும் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 56 ரன்னும், மார்க் சாப்மன் 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ஆயன் அப்சல் கான் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். பசில் ஹமீது 24 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்தின் வில் யங் ஆட்ட நாயகன் விருதும், சாப்மன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
- ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஒரு நாள் பயணமாக இன்று அபுதாபி சென்றுள்ளார்.
அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோடிக்கு முழு சைவ உணவு விருந்து அளித்துள்ளார்.
கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதலில், கோதுமை மற்றும் பேரீச்சம்பழ சாலட் உடன் கரிம காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகளை ஸ்டார்டர்களாக பறிமாறப்பட்டது.
மேலும் உணவு பட்டியலில் கறுப்புப் பருப்பும், கோதுமை, காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகிய உணவு வகைகளை முக்கிய உணவாக வழங்கப்பட்டன.
இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள் மற்றும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பால் அல்லது முட்டை பொருட்கள் இல்லை என்றும் விருந்துக்கான மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
- பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. இது காண்போரை வியக்க வைத்தது.
இதைத்தவிர, பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் படத்தின் கீழ் மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு நல்வரவு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
- பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.
- அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் எலிசி அரண்மனையில் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆர் ஹானர் விருதை வழங்கினார்.
நேற்று பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பாரிஸ் நகரில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவருக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான், பாரம்பரிய அணிவகுப்பின் சிறப்புகளை விளக்கி கூறினார்.
இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் கொண்ட குழுவும் கலந்து கொண்டது. மேலும் பிரான்ஸ் ஜெட் விமானங்களுடன் சேர்ந்து இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்களும் சாகசம் நிகழ்த்தின.
பின்னர் மோடி-மெக்ரான் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விண்வெளி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சில் இருந்து 26 ரபேல் விமானங்களும் கூடுதலாக மூன்று ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:-
ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்து நட்பு நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு, புவி வெப்ப நிலையை கண்காணித்து இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். விண்வெளி சார்ந்த கடல்சார் பாதுகாப்பிலும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா விரும்புகிறது என்றார்.
அதன் பின்னர் பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் இந்த மகத்தான பயணத்தை விரைவுபடுத்தவும், வலுப்படுத்தவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.
இந்தியா வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இரவு விருந்து அளித்தார். பின்னர் மோடி பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு புறப்பட்டார். அவருக்கு விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரான்சில் இருந்து புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறும்போது, இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
அணிவகுப்பில் இந்திய குழு பெருமை சேர்த்ததை பார்த்தது அருமையாக இருந்தது. அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-பிரான்ஸ் நட்புறவு தொடரட்டும் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இன்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கூறும்போது, ' இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது. மேலும் பிரதமரின் வருகை, ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இதை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும்' என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்ப டுகிறார்.
- கடந்த 1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது.
- மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.
சார்ஜா:
சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர் சார்ஜாவின் மதாம் அருகில் நாங்கள் வாழ்ந்த குரைபா கிராமத்தை மறுசீரமைத்து கொடுக்க வேண்டும்.
அந்த கிராமம் மணல் புயல் தாக்கி புதையுண்ட பகுதியாக காட்சியளிக்கிறது. அதனை மறுசீரமைத்து கொடுத்தால் மீண்டும் அந்த பகுதியில் எங்களது வாழ்க்கை தொடர உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை தொடர்ந்து ஆட்சியாளர் அந்த புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கிராமப் பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜாவின் புதையுண்ட கிராமம் குறித்த விவரம் வருமாறு:-
சார்ஜாவில் கடந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி பழம்பெருமை வாய்ந்த பகுதியில் ஆச்சர்யங்களும், மர்மங்களும் இருப்பது இயல்பாகவே உள்ளது. துபாயில் இருந்து 60 கி.மீ மற்றும் சார்ஜாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது அல் மதாம் என்ற பாலைவன பகுதி. இங்கு இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளதுதான் குரபா கிராமம்.
ஒரு காலத்தில் அழகிய கிராமமாக விளங்கிய இந்த பகுதியில் தற்போது மனித நடமாட்டமே இல்லை என்பதுதான் மர்மமுடிச்சாக உள்ளது. ஏனென்றால் தற்போது இந்த முழு கிராமமே மணலில் புதையுண்டு கிடக்கிறது. மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.
கடந்த 1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே அந்த கிராம மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருந்துள்ளது. அதன் பிறகு அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது.
பிறகு வெள்ளம் வருவது போல் வீடுகளில், கட்டிடங்களில் மணல் புயல் தாக்கியது. இதனால் அந்த கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.
அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். இன்று அந்த பகுதிக்கு சென்றால் மணலில் மூழ்கிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்க்கலாம். மேலும் அன்று வாழ்ந்த மக்கள் விட்டு சென்ற பொருட்களும் அப்படியே சேதமடைந்து உள்ளது.
தற்போது இந்த பகுதி சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்க்கும் இடமாக மாறியுள்ளது. பகலில் இந்த பகுதிக்கு வாகனங்களில் செல்வோர் இரவில் செல்வதில்லை.
இப்படி மர்மம் நிறைந்த கிராமமாக இருந்த இந்த பகுதிக்கு தற்போது ஆட்சியாளரின் உத்தரவு மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது.






