என் மலர்tooltip icon

    இலங்கை

    • ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
    • 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் தேவை என்பதால் பாராளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலை நடத்த அனுரா குமர திசநாயகா முடிவு செய்தார். அதன்படி அதிபராக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்தார். அதனை தொடர்ந்து நவம்பர் 14-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் களம் காண்கின்றன.

    அதே சமயம் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் அதிபர் தேர்தலில் திசநாயாகவிடம் தோல்வியடைந்த ரணில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1977-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும்.

    அதேபோல ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் இருந்த ஏராளமான மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றிப் பெற வேண்டும். அதேநேரத்தில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் 'சிறப்பு பெரும்பான்மை' கிடைக்கும்.

    சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தல் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    தேர்தலை பாதுகாப்பாக நடத்த நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 324 ரன்களைக் குவித்தது.
    • இலங்கையின் குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ சதமடித்து அசத்தினர்.

    தம்புல்லா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட் ஆனார்.

    குசால் மெண்டிசுடன் அவிஷ்கா பெர்ணாண்டோ இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்ணாண்டோ 100 ரன்னில் அவுட்டானார். சமர விகர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் அசலங்கா அதிரடியாக ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 49.2 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு இலங்கை இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது.

    இதையடுத்து, டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவரில் 221 ரன்கள் எடுக்கவேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    அடுத்து இறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

    அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 48 ரன்னில் வெளியேறினார். டிம் ராபின்சன் 35 ரன்னும், பிரேஸ்வெல் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், நியூசிலாந்து 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
    • பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.

    கொழும்பு:

    இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற மறுநாளே இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்து பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    அனுர குமார திசா நாயக்காவின் அனுர குமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்க, சஜித பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதேபோல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதே வேளையில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். சிறப்பு மெஜாரிட்டி கிடைத்தால் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் அனுர குமரா திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • ராமாயணத்தில் ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.

    இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் ராமர் பாலம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்திய மக்களை கவர்ந்துள்ளது.

    5 நிமிட விளம்பர வீடியோவில் ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.

    அந்த வீடியோவில், சீதையை கடத்திச் சென்ற அசுர மன்னன் ராவணன் அவளை எங்கே அழைத்துச் சென்றான் என்று அந்த குழந்தை கேட்க, ராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அந்த பாட்டி தனது பேரனிடம் விவரிக்கிறாள்.

    ராவணன் குகை, சீதா அம்மன் கோவில், ராமர் பாலம் உள்ளிட்ட இடங்களை பற்றி தனது பேரனிடம் பாட்டி விவரிக்க, "ராமர் பாலம் இப்போதும் இருக்கிறதா?" என ஒரு குழந்தை கேட்கிறார். அதற்கு "ஆமாம் அதை இன்றும் பார்க்கலாம்" என பாட்டி பதிலளிப்பதும்.

    இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த விளம்பர வீடியோ உருவாகியுள்ளது. வடஇந்தியாவில் உள்ள இந்து மக்களிடையே இந்த விளம்பர வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.

    • இலங்கை அரசால் தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் வழங்கப்படும்.
    • சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக தீர்க்கமான நிலை எடுக்கப்படும்.

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின் தமிழர்கள் வாழும் ஜாஃப்னாவிற்கு முதன்முறையாக சென்றார். அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது இலங்கை அரசால் தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் வழங்கப்படும். இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக தீர்க்கமான நிலை எடுக்கப்படும் என்றார்.

    அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஏராளமானோர் நீதி கேட்கும் முக்கியமான பிரச்சனையான காணாமல் போனவர்கள் குறித்த ஆலோசனையில் விலகியிருப்பதாக தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய இலங்கை 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தம்புலா:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வில் யங் 30 ரன்னும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 3 விக்கெட்டும், துஷாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரை 1-1 சமன் செய்தது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வென்றது.

    தம்புலா:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரேஸ்வெல், சகாரி போக்ஸ் ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் வெல்லலகே 3 விக்கெட்டும், துஷாரா, ஹசரங்கா, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    பதும் நிசங்கா 19 ரன்னும், குசால் பெராரா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 23 ரன்னும், பானுகா ராஜபக்ச 4 ரன்னும், ஹசரங்கா 22 ரன்னும் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

    இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம்.
    • தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல்.

    தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

    இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

    நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    • முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டிஎல்எஸ் விதிப்படி 196 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் இரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 23 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் அரை சதம் கடந்து தலா 56 ரன்கள் எடுத்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 36 ரன்கள் எடுத்தார்.

    மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 23 ஓவரில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரண்டன் கிங் 16 ரன்னும், ஷாய் ஹோப் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்து ஆறுதல் வெற்றி பெற்றது. லெவிஸ் 102 ரன்னும், ரூதர்போர்டு 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கும், தொடர் நாயகன் விருது சரித் அசலங்காவுக்கும் வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 44 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 80 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 50 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இலங்கை 38.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

    ஆட்ட நாயகன் விருது மகேஷ் தீக்ஷனாவுக்கு அளிக்கப்பட்டது.

    • பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
    • மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பினர்.

    இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை தொடர்ந்து நடவடிக்கையாக இலங்கை கடற்படையினர் எடுத்து வருகின்றனர்.

    கடந்த மாதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத.

    இந்நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

    • முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்தார். கீஸ் கார்டி 37 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, மழை காரணமாக இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 69 ரன் குவித்தார். கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இலங்கை 31.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×