என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • முதலில் ஆடிய இந்தியா திலக் வர்மா சதத்தால் 219 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் விரைவில் விக்கெட்களை இழந்தனர்.

    ரிகலடன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்கிரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசன் 41 ரன் எடுத்து வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ ஜேன்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 19வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 24 ரன்களை குவித்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 219 ரன்களைக் குவித்தது.
    • இந்திய அணியின் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

    2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்னிலும், ரிங்கு சிங் 8 ரன்னிலும் வெளியேறினர்.

    அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா முதல் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    • முதல் இரு போட்டிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசென் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள்.

    இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

    இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள். சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும்.

    நான் இப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை. கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லா.

    தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்.

    டி20 கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
    • இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.

    முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

    முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.

    இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.

    டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.

    மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 124 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்கா 19வது ஓவரில் வெற்றி பெற்றது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    அந்த அணியின் ஸ்டப்ஸ் போராடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
    • அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.

    சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 141 ரன்னில் ஆல் அவுட்டானது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 ரன்னும், சூர்யகுமார் 21 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    அதிகபட்சமாக கிளாசன் 25 ரன்னும், கோட்சி 23 ரன்னும், ரிக்கல்டன் 21 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோர் தலா 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 7 ரன்னில் வெளியேறினார்.

    சஞ்சு சாம்சனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி 66 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 21 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளான்.
    • பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.

    பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.

    பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.
    • அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் ஆகஸ்ட் மாதம் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருந்த இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.

    ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) உறுப்பினர்கள், மாலியை தளமாகக் கொண்ட அல்கொய்தாவின் துணை அமைப்பான மற்றும் புர்கினா பாசோவில் செயல்படுகிறார்கள், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பர்சலோகோவின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றபோது கிராம மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஒருவர் கூறுகையில், மூன்று நாட்களாக நாங்கள் உடல்களை சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.

    போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாக்க நகரத்தைச் சுற்றி பரந்த அகழி வலையமைப்பைத் தோண்டுமாறு உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    JNIM கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2015-ம் ஆண்டு இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்துள்ளனர்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 248 ரன்களில் டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து கடைசி நாளில் 251 ரன்கள் எடுத்து வென்றது.

    செஞ்சுரியன்:

    இங்கிலாந்து அணி கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் லான்ஸ் குளூஸ்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேரில் கலினன் 40 ரன்னும், ஷான் பொல்லாக், பீட்டர் ஸ்டிரைடோம் தலா 30 ரன்னும் எடுத்தனர்.

    மழை காரணமாக 2, 3, 4-ம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடைசி நாளில் போட்டி தொடர்ந்தது. டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் 3வது நடுவரின் ஒப்புதலுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடாமலும், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடாமலும் இருந்தனர்.

    5வது நாளில் இங்கிலாந்து வெற்றிபெற 249 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அலெக் ஸ்டூவர்ட், மைக்கேல் வாகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்டூவர்ட் 73 ரன்னும், வாகன் 69 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 75.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் ஒரே இன்னிங்ஸ் மட்டும் ஆடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியா லு ரூக்ஸ்-க்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.
    • சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார்.

    ஜோகன்னஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் (வயது 28) என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்' என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார். ஆனால் பெற்றோர் நைஜீரியா, மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது தாயகம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.

    இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே தற்போது மாற்றுத்திறனாளியான மியா லு ரூக்ஸ் தென் ஆப்பிரிக்க அழகியாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×