என் மலர்
தென் ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 19 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா அணியும், 7 விக்கெட்களை வீழ்த்தினால் பாகிஸ்தானும் வெற்றி பெறும் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சயீம் அயூப் 27 ரன்னும், ஷான் மசூத் 28 ரன்னும், கம்ரான் குலாம் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கம்ரான் குலாம் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 47 ரன்னுடனும், பவுமா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 308 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் சயீம் அயூப் சதமடித்து அசத்தினார்.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னிலும், ஜோர்ஜி 26 ரன்னிலும், மார்கிரம் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹென்ரிச் கிளாசன் ஒரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்பின் போஸ்ச் 40 ரன் எடுத்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
பாகிஸ்தானின் சுபியான் மகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார்.
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அரை சதம் கடந்து அவுட்டாகினர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
- மழை காரணமாக 3வது டி20 போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்
மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர் .
போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களை எடுத்து வென்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெறறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப் 98 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாபர் அசாம் 31 ரன்னிலும், இர்பான் கான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்து அசத்தினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 117 ரன்னில் வெளியேறினார். 63 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 117 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களைக் குவித்தது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமாக முகமது ரிஸ்வான் 11 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய பாபர் அசாம் சயீம் அயூபுடன் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 31 ரன்னில் அவுட்டானார். இர்பான் கான் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய சயீம் அயூப் அரை சதம் கடந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 குவித்தது. சயீம் அயூப் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதிலும் நாகப்பாம்புகள் படமெடுத்து ஆடுவதை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கும். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் வசிக்கும் ஒருவரது வீட்டில் படுக்கை அறையில் இருந்து சத்தம் வந்தது. இதனால் குடும்பத்தினர் படுக்கை அறை முழுவதும் சோதனை நடத்திய போது, அங்கு தலையணைக்குள் இருந்து சத்தம் அதிகமாக கேட்டது. அப்போது தலையணைக்கு அடியில் விஷப்பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வன ஆர்வலருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் தலையணையை தூக்கி அதன் அடியில் மறைந்திருந்த விஷ நாகப்பாம்பை திறமையாக அகற்றினார். அந்த விஷப்பாம்பு அடர்கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்து காணப்பட்டது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த அந்த பாம்பை வன ஆர்வலர் அப்புறப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது.
- இலங்கையின் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நாடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன் சிறப்பாக ஆடி சதமடித்தனர். அரை சதமடித்த பவுமா 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 89 ரன்னில் வெளியேறினார்.






