என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதத்தை தவறவிட்ட சயீம் அயூப்: தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    சதத்தை தவறவிட்ட சயீம் அயூப்: தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களைக் குவித்தது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமாக முகமது ரிஸ்வான் 11 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பாபர் அசாம் சயீம் அயூபுடன் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 31 ரன்னில் அவுட்டானார். இர்பான் கான் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய சயீம் அயூப் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 குவித்தது. சயீம் அயூப் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    Next Story
    ×