என் மலர்
பாலஸ்தீனம்
- ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன.
- இஸ்ரேல் மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது.
உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களும் செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் பேரழிவை ஏற்படுத்தும் பஞ்சத்தை காசா எதிர்கொள்வதாக சர்வதேச சமூகம் கவலை தெரிவித்தது.
இதைடுத்து கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து கூட்டாக அறிக்கை விட்டன. தொடர்ந்து வழங்கப்பட்ட அழுத்தத்தால் காசாவுக்குள் சொற்ப அளவிலான உதவிகளை அனுப்ப இஸ்ரேல் வழிவிட்டது.
பல நாட்களாக பட்டினியையும், அத்தியவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட காசா மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப அளவிலான உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ள சாரை சாரையாக உதவி மையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
இந்த சூழலில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை Gaza Humanitarian Foundation (GHF) காசா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய உதவி விநியோக மையத்தை ஆக்கிரமித்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். மேலும் 48 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுங்கை ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இந்த் துப்பாக்கிசூட்டால் 47 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க, இஸ்ரேல் பின்னணியில் இயங்கும் GHF அமைப்பு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மற்ற அமைப்புகளில் இருந்து கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹமாஸ் பொருட்களைத் பெறுவதை தடுக்க GHF வலையமைப்பை நிறுவ இஸ்ரேல் உதவியதாகக் கூறுகிறது, நான்கு மையங்களை நிறுவியுள்ளதாக GHF கூறுகிறது, அவற்றில் இரண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த உதவி மையங்களுக்கு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன. இது காசாவின் 2.3 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும், இஸ்ரேல், மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான குழுக்கள் GHF இன் அமைப்பில் பங்கேற்க மறுத்துவிட்டன. இந்த அமைப்பு மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகக் கூறின. சில விநியோக மையங்களுக்கு மக்களை நகர்த்துமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய இஸ்ரேலால் இது பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். இஸ்ரேல் தொடர்ந்து தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளைத் தாக்கி வருகிறது. காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு துறை அறிவித்தது. 21 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் பள்ளியின் பாதி பகுதி அழிக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முந்தைய நாள், இஸ்ரேலின் தாக்குதல் காசா பெண் மருத்துவரின் 9 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
- கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
- மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது. மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.
இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்துகிறது.
- கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது.
- உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்"
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் நேற்று கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
இந்நிலையில் பிபிசி ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பேசுகையில், திங்களன்று ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும்.
இஸ்ரேலிய முற்றுகையின் பல வாரங்களுக்குப் பிறகு, இந்த உதவி கடலில் ஒரு துளி போன்றது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல் உதவியைத் தடுத்ததையும், பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
இதை குறிப்பிட்டு பேசிய டாம் பிளெட்சர், சர்வதேச சமூகம் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
- ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது.
- சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர்.
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசா போரில் இரு பக்கங்களிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
இந்த பிரச்சனை இன்று தொட்டு சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி பயங்கரவாத கொடுமைகளில் இருந்து தப்பி வந்த்வ பல்லாயிரக்கணக்கான யூதர்களும் பாலஸ்தீனத்தில் தங்கள் புதிய வாழ்வை கட்டமைத்துக்கொண்ட காலகட்டம் அது.
பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தபோது அரபிக்களும், யூதர்களும் இருந்த பாலஸ்தீனம் இரண்டாகப் பிரியும் சூழல் உருவானது.
யூதர்களுக்கு இஸ்ரேல், அரபிக்களுக்கு பாலஸ்தீனம், புனித நகரான ஜெருசலேம் சர்வதேச நகரமாக இருக்கும் என்பதுதான் பிரிட்டன் பரிந்துரைத்த யோசனை. இந்த யோசனையை ஐ.நா.வும் அங்கீகரித்தது.
ஆனால், பாலஸ்தீன அரபிக்கள் இதனை ஏற்கவில்லை. ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்கள். அதன் நீட்சியாக போர் மூண்டது.
1947 மற்றும் 1949 க்கு இடையில், சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 530 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டன.
குறைந்தது 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக மாறினர். இதனை பாலஸ்தீனியர்கள் அல் நக்பா (பேரழிவு) எனக் கூறுகின்றனர். இந்த துயரத்தை நினைவு கூற வருடந்தோறும் மே 15 நக்பா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் 77வது நக்பா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்று வரை இந்த துயரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நக்பா தினத்தன்று ஒரே நாளில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது.
- இந்த வீடுகளில் இருந்த முழு குடும்பங்களும் தாக்குதலில் கொல்லப்பட்டன
- காசாவை 'சுதநதிர மண்டலம்' ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.
காசாவில் உள்ள கான் யூனிஸில் புதன்கிழமை இரவு மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
வடக்குப் பகுதியில், காசா நகரம் மற்றும் ஜபாலியாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இஸ்ரேலிய போர் விமானங்கள் கான் யூனிஸில் ஒன்பது வீடுகளைத் தாக்கின.
இந்த வீடுகளில் இருந்த முழு குடும்பங்களும் தாக்குதலில் கொல்லப்பட்டன. ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 13 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர் தாக்குதலால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. இஸ்ரேலின் கட்டாய வெளியற்றம் காரணமாக மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் முகாம்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுபோல நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் விடியற்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 107 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் உறுதிப்படுத்தினார். இதில் முழு குடும்பங்களும் அடங்கும்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவின் அல் ஃபகூரா பகுதியில் உள்ள அல் தவ்பா சுகாதார மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் மக்கள் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தெற்கு நகரமான கான் யூனிஸில், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கூடாரங்களை போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) கடந்த சில மணி நேரத்தில் வடக்கு காசா மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது. டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசாவை 'சுதநதிர மண்டலம்' ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்ற சமீபத்தில் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையில், காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை அக்டோபர் 2024 இல் அதன் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மக்கள் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் தீர்ந்து போயுள்ளன. சில இடங்களில், வரும் வாரங்களில் அது முடிந்துவிடும். அனைத்து மக்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். காசாவில் 50 லட்சம் மக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று IPC அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

காசாவில் உள்ள உதவிப் பணியாளர்கள், சமீபத்திய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கிடங்குகள் காலியாக இருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மனிதாபிமானக் குழுக்கள் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஒரு ரேஷனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காசாவில் உள்ள யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கிரிக்ஸ் பேசுகையில், 'போர் நிறுத்த காலத்தில் நாங்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்களின் அளவு மிகக் குறைவு. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 11,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினார்.

காசா பஞ்சத்தின் உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் எச்சரித்துள்ளது.
மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த முற்றுகையின் நோக்கம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியது. இதில் பத்திரிகையாளர் ஹசன் இஸ்லா உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர்.
- அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு அனுப்பப்பட்ட நல்லெண்ண சைகையாகும்.
- அலெக்சாண்டர் இஸ்ரேலிய இராணுவ முகாமில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டு ரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தார்.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 52,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது பல பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இந்நிலையில் ஹமாஸ் தங்களிடம் இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதி ஐடன் அலெக்சாண்டரை விடுவித்துள்ளது. அவர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிப்பாய் அலெக்சாண்டர் இஸ்ரேலிய இராணுவ முகாமில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டு ரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் விடுதலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு அனுப்பப்பட்ட நல்லெண்ண சைகையாகும்.
கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் பயணம் புறப்பட்டுள்ள சூழலில் இந்த விடுதலை நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி விமானத்தில் அமெரிக்காவில் இருந்து புறப்படும் டிரம்ப், இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி தலைநகர் ரியாத் சென்று, புதன்கிழமை நகரில் நடைபெறும் வளைகுடா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். பின் அங்கிருந்து கத்தாருக்குச் சென்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது பயணத்தை முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள்.
- மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் இயன்ற எல்லா வழிமுறைகளிலும் பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், பள்ளிகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே சூழலில் காசாவுக்குள் எந்த உணவும், உதவிப் பொருட்களும் செல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான புகாரில் சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிறுவனம் காசாவில் செயல்படுவதைத் தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறியிருக்கிறார்.
அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள்.

இதற்கிடையில் மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின் பட்டினியை போக்க காசா மக்கள் கரையொதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு இஸ்ரேலின் அடுத்த வான்வழித் தாக்குதல் எங்கு எப்போது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
அல் ஜசீரா செய்தியின்படி. மீனவர் அப்துல் ஹலீம் கூறுகையில், கடல் ஆமைகளை சாப்பிடுவது பற்றி தான் ஒருபோதும் யோசித்ததில்லை என்றும், வேறு வழியில்லை என்பதால் மட்டுமே அவற்றை சாப்பிடுவதாகவும் கூறுகிறார்.
"குழந்தைகள் ஆமையைப் பார்த்து பயந்தார்கள்... அதன் இறைச்சி சுவையாக இருப்பதாக நாங்கள் அவர்களிடம் சொன்னோம்," என்று காசாவைச் சேர்ந்த மஜிதா கானன் கூறினார்.
- கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
காசா:
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 1,17,600 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா.சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.
- பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
- தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டக்கு காசாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள், வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்தது. தற்போது காசாவில் மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன. தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.






