என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
    • பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்

    பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.

    தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.

    இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.

    பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.

    இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.

    வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    • தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.
    • தேர்தல் முடிவு காலதாமதம் ஆனதால் இம்ரான் கான் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேதம் அடைந்த வாக்குசாவடிகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறது தேர்தல் ஆணையம். மேலும், தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

    அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி தெரிவித்திருந்தது. இன்று காலை வரை சுமார் 10 தொதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் அறிவித்தபடி அக்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    265 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதாக தெரிவித்தனர். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று உள்ளதாக அந்த கட்சியினர் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் தேர்தலில் தனது கட்சி தான் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 27 இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

    ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் அவரது கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் அவர்களுக்கு 6 இடங்கள் தேவைப்படுகிறது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சியுடன் அதிகாரப்பூர்வ மாக இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த வில்லை என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. 3 சுயேட்சை வேட்பா ளர்கள் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நவாஸ் ஷெரீப் புக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
    • இம்ரான் கான் கட்சி 93, நவாஸ் ஷெரீப் கட்சி 73, பிலாவல் பூட்டோ கட்சி 54.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.

    இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது.

    ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது.

     இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 37 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவாஸ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    வாக்கி எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இம்ரான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், முடிவுகள் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

    அதன்பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு லட்சத்து 71 அயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளல் வெற்றி பெற்றுள்ளது.

    265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே முடிவுகள் தாமதம் ஆவதற்கு தகவல்தொடர்பு குறைபாடுதான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்ரான கான் கட்சியின் கோஹர் அலி கான் என்.ஏ.10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    நவாஸ் ஷெரீப் கட்சியின் ஹம்சா ஷெபாஸ் லாகூரில் உள்ள என்.எ.118 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

    • தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
    • தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

    இதனால் இம்ரான் கான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செயலாளர் ஜபர இப்பால் முதல் முடிவை வெளியிட்டார்.

    அதன்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் அளவிற்கு போதுமான இடங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

    இம்ரான் கான் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தம்
    • நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெற்றது.வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
    • மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகி யவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுத்தேர்தலின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என அச்சம்.
    • மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகம் கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என மந்திரி அறிவித்திருந்தார்.

    பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது நடைபெற்று வரும் காபந்து அரசு நினைக்கிறது.

    இதனால் உள்துறை மந்திரி கோஹர் இஜாஸ், அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய அளவில் செல்போன் சேவையை தடைசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு அச்சுறத்தல் தொடர்பாக வேண்டுகோள் வந்தால், அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

    ஆனால், அரசு சாரா பல்வேறு அமைப்புகள் தேர்தலின்போது தடையில்லா இணைய சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், பொதுத்தேர்தலில் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தொடர்ந்து இணைய தள சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்து வைக்க வேண்டும் என அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

    நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் கட்சி, பெனாசீர் பூட்டோ மகன் கட்சி ஆகியவை பொதுத்தேர்தலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • முதல் குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர்
    • இரண்டாவது குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்

    பாகிஸ்தானில் நாளை அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 1.5 வருட காலமாக அங்கு பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் (Balochistan) பிராந்தியத்தில், பிஷின் (Pishin) மாவட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் கான் ககர் என்பவரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    "பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதை தடுக்கும் வகையில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு, அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு ஒரு "ரிமோட்" கருவியினால் இயக்கப்பட்டுள்ளது" என பலூசிஸ்தான் காவல் அதிகாரி அப்துல்லா ஜெஹ்ரி தெரிவித்தார்.

    இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக, அங்கிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்லா சாயிஃப் உல்லா பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது.

    இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

    "தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) தெரிவித்துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள், பல காவல் அலுவலகங்கள், தேர்தல் பிரச்சார அலுவலகங்கள், பேரணிகள் என பலூசிஸ்தானின் பல பகுதிகளில் நிகழ்ந்தன.

    குண்டு வெடிப்புகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக சம்பவத்தை நேரில்  கண்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களுக்கு பின்னணியில் பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் உள்ளதாக உள்துறை தெரிவித்தது.

    • அதிகாலை 3 மணிக்கு கையெறி குண்டுகள், துப்பாக்கியால் தாக்குதல்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

    போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் அலுவலக கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு: 6 பேர் படுகாயம்

    பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.

    இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

    தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்தது.
    • குரேஷி, அவரது மகன் ஜெய்ன் குரேஷியின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது.

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    முல்தான் உள்ளிட்ட 2 சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்தஇடத்தில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

    ×