என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் விவாதமாகியுள்ளது
    • அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்கணிப்பார்

    பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்று பாகிஸ்தான் கூறி வந்தது
    • ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லாக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 200 கிமீ வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 25 வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்றும் தங்களது ராணுவத்துக்கும் அந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடர்பை முதல் முறையாக பாகிஸ்தான் வெளிப்படையாக பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளது.

    பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனிர் [Asim Munir], 1965, 1971 மற்றும் கார்கிலில் 1999 என பல சமயத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பாகிஸ்தானுக்காகவும், இஸ்லாத்துக்காகவும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றது உறுதியாகி உள்ள நிலையில் ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் கைப்பற்றியது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.

    இதைத் தொடர்ந்து வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது.

    இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நம்மை எப்படி மேம்படுத்தலாம் என்றும், நமது டெஸ்ட் பக்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன்.

    சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

    இந்தத் தொடரை இழப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வீரர்கள் சிறப்பாகச் செயல்பட விரும்பினர் என்பதும் உண்மை.

    ஆனால் நாங்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. நாம் முன்னேற வேண்டுமானால் சில தோல்விகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

    அதில், முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க அணி முயற்சிக்க வேண்டும்.

    முக்கிய விஷயம் என்னவென்றால், வேகப்பந்துவீச்சில் நமது பங்குகளை உருவாக்க வேண்டும். தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடும் பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமளித்து நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    • 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்கள் எடுத்தது.
    • வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

     

    இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து வங்கதேசம் திணறியது. அடுத்து இறங்கிய லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 138 ரன்னிலும், மெஹிதி ஹசன் 78 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    12 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகா சல்மான் 47 ரன்னும், முகமது ரிஸ்வான் 43 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டும், நஹித் ரானா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன், ஷட்மன் இஸ்லாம் ஜோடி நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாகிர் ஹசன் 40 ரன்னில் வெளியேறினார். ஷட்மன் இஸ்லாம் 24 ரன்னிலும், கேப்டன் ஷண்டோ 38 ரன்னிலும், மொமினுல் ஹக் 34 ரன்னிலும் அவுட்டாகினர்.

    முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    • ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
    • கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.

    ஆனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார். கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் திணறியது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. விரைவில் வங்கதேசத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு திறமையாக ஆடி பதிலடி கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 165 ரன்கள் சேர்த்த நிலையில், மெஹிதி ஹசன் 78 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் கைவிடப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்தது. இதனால் கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஷான் மசூத், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப்புடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சயீம் அயூப் 57 ரன்னில் அவுட்டானார்.

    பாபர் அசாம் 31 ரன்னும், முகமது ரிஸ்வான் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் ஒரு வீட்டின் மேல் கூரை சரிந்தது. இந்தச் சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

    விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • கனமழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

    இதையடுத்து, கனமழை காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த போட்டி முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறுகையில், ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சில குறை இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக பயிற்சி செய்யப் போகிறார். மேலும், அவருக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய பாகிஸ்தான், 2-வது டெஸ்டில் அப்ரார் அகமத் என்ற லெக் ஸ்பின்னரையும், மிர் ஹம்ஸா என்ற வேகப்பந்துவீச்சாளரையும் சேர்த்துள்ளது.

    • ஒலிம்பிக்கின் ஹாக்கியில் பாகிஸ்தான் அணி 3 முறை தங்கம் வென்றுள்ளது.
    • தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அணியின் தேசிய விளையாட்டாக ஹாக்கி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ஆசிய சாம்பியன் கோப்பை அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட கடனில் வாங்கிய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்டி கூறுகையில், இந்த தேசிய விளையாட்டிற்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் ஹாக்கிக்கு வழங்கப்படவில்லை. இப்போது தேசிய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ந்து வரும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில், நாட்டின் ஹாக்கி திட்டத்தை புதுப்பிக்க சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தி உள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

    ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

    முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

    ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×