என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம்.
    • கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது.

    ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'க்ரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு "ப்ளூ டங்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

    ஜெர்மனியில் செயல்பட்டு வரும் "க்ரேட்டர் (Greator)" எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

    இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.

    மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் "ப்ளூ டங்" (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. 

    இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன. நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.

    அதனால்தான் இந்த ஆண்டின் "ப்ளூ டங்" விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், " உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
    • இதில் அமெரிக்காவின்ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்தது.

    இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் எம்மா நவாரோ காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவாரோவை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4 என முதல் செட்டை வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக நவாரோ 6-1 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெகுலா 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-3 என வென்றார். 2வது செட்டை மரியா சக்காரி 7-6 (7-2) என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-3 என் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய நவோரா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கனடாவின் லைலா பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 7-6 (10-8), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை வாங் ஜின் யு , செக் நாட்டின் மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 7-6 (12-10) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை வாங் ஜின் யு 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.

    இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் கரன் கச்சனாவ் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என கச்சனாவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பப்ளிக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், மெத்வதேவை சந்திக்கிறார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-6 (7-3) என மெத்வதேவ் வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வரேவ் 2வது செட்டை 7-6 (7-1) என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×