என் மலர்
கனடா
- இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
- புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஒட்டாவா:
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.
- 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
- டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.
டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.
- கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
- நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.
ஒட்டாவா:
கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்.
இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. நிஜார் கொலையில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இதன் மூலம் சீனா பலன் அடைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி இருக்கிறது.
நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சர்வ தேச அளவில் உள்ள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்தது. மேலும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு அவர் பலமுறை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சிகளும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை இந்த கொலை யில் பல்வேறு சந்தே கங்கள் நிலவி வரு கிறது.
இந்த சூழ்நிலையில் கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்சியை ரத்து செய்து விட்டதாக இந்திய பாடகர் குருதாஸ்மான் அறிவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான குருதாஸ்மான் இந்த மாதம் 22- ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.
தற்போது கனடா-இந்தியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் தனது இசை நிகழ்சியை ரத்து செய்து உள்ளார்.
இதையடுத்து இசை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
- இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது. இதற்கு வருகிற 10-ந் வரை காலக்கெடு விதித்தது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வருகிற 10-ந் தேதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
- விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது
- விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்தனர். விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
- கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம்.
- கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கனடாவின் ஒட்டாவா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். ஆனால் நிலைமையை மோசமடைய செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அந்த முக்கியமான பணியை நாங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம்" என்றார்.
- நவம்பர் 28 வரை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது
- எழுத்தாளர் கிரீன்வால்டின் கருத்தை ஆமோதித்தார் மஸ்க்
"இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்" எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28 வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ-வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
"உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என இதனை குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
"ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
- ஆக்கபூர்வமான உறவை வளர்க்க தீவிரமாக உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்
இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று கனடா நாட்டில் உள்ள வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த கொலையை தீவிரமாக கனடா விசாரித்து வந்த நிலையில், இம்மாதம் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இக்கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றும் அளவிற்கு உறவு சீர்கெட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு 'விசா' வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், கனடாவின் க்யூபெக் பிராந்தியத்தில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம். கடந்த வருடம் நாங்கள் வெளியிட்டிருந்த இந்தோ-பசிபிக் திட்டப்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவினை வளர்க்க நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதே சமயம், ஹர்திப் விவகாரத்தில் சட்டப்படி நடக்க விரும்பும் நாடான எங்களுடன் இணைந்து பணியாற்றி உண்மையை வெளிக்கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு ஜஸ்டின் தெரிவித்தார்.
ஹர்திப் சிங் கொலையில் இந்தியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து கனடாவிடம் இந்தியா ஆதாரங்களை கேட்டிருந்தது. இதுவரை தங்களின் குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசாங்கம் ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெலன்ஸ்கியுடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
- கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒட்டாவா:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22-ந்தேதி கனடா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.
இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.
அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
- கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.
கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.
கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர்.
மேலும் கனடா டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அங்குள்ள இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு பாதுகாப்பாக இருந்து வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.
- கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
- கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒட்டாவா:
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.
இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பகை அதிகரித்து வருவதால் சில மாணவர்கள் இனியும் கனடாவில் படிப்பை தொடரலாமா? என யோசித்து வருகின்றனர். இது இந்தியாவில் வசித்து வரும் அவர்களது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்விந்தர் சிங் கூறும்போது என்னுடைய மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கனடாவுக்கு படிக்க சென்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை அவளுக்கு கவலை அளித்து இருக்கிறது. படிப்பில் அவளால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.
மற்றொரு மாணவியின் தந்தை குல்தீப்கவுர் கூறும்போது என்னுடைய 2 மகள்கள் கனடாவில் படித்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பதற்றத்தில் உள்ளேன். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் சுனில் ஜக்காரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள உதவி மையம் அமைத்து அதற்கான தொலைபேசி எண்ணையும், வெளிநாடு செல்ல திட்டமிடும் மாணவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.






