என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் 7 பெரிய திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் 100 பில்லியன் டாக்கா செலவிடப்பட்டுள்ளது.
    • இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 டிரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழு வங்கதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை முகமது யூனுஸ் அவர்களிடம் வழங்கியுள்ளனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் 100 பில்லியன் டாக்கா ($836 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளது.

    இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 டிரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஹசீனாவின் அரசாங்கம் இந்த திட்டங்களின் செலவுகளை 1.95 டிரில்லியன் டாக்காவாக அதிகபடுத்தியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    • மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

    வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     

    இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

     

    முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.
    • போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல்.

    வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சம்பவத்தின் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.

    இது தொடர்பான மோதலில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்தது. மேலும் 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

    அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டு முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

    மேலும் இந்துக்கள் மீது ஒரு கும்பலும் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 24 மணிநேர கெடு விதித்தனர். மேலும் இன்று கோர்ட்டு நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே சிட்டகாங்கில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    சிட்டகாங்கின் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில்,ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில் ஆகிய கோவில்களின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.

    இதற்கிடையே தாக்கூர் கான் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத் தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் இந்துக் கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

    இதற்கிடையே வங்காள தேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறும்போது, மக்கள் அமைதி காக்க வேண்டும். எந்தவிதமான விரும்பத் தகாத செயல்களிலும் ஈடு படாமல் இருக்க வேண்டும். வங்காளதேசத்தில் எந்த விலையிலும் மத நல்லி ணக்கத்தை உறுதி செய்வ தற்கும் நிலைநிறுத்துவதற் கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.

    • இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
    • இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

    டாக்கா:

    வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

    இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பாக வாதாடும் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார். விசாரணையில், உயிரிழந்தவர் பயிற்சி வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார்.
    • முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிறது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் வலியுறுத்துவோம். போராட்டம் மற்றும் வன்முறையால் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் தகவலையும் கவனமாக சேகரித்து வருகிறோம். வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாது செய்யப்பட்டது. இதில் டாக்காவில் உள்ள 13 மருத்துவமனைகளும் அடங்கும்.

    இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நடைபெற்ற வன்முறையில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 19931 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக ஷேக் ஹசீனாவை திருப்பு அனுப்பு இந்தியாவிடம் வலியுறுத்தமாட்டோம் என முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார். தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது.
    • டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

    வங்கதேசத்தில் கொசுக்களால் பரவும் வைரல் காய்ச்சலான டெங்கு வேகமாக பரவி வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் முழுவதும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,389 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

    டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கையின் மூலம், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் மொத்தம் 415 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், இன்று காலை வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகளில் 376 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    மேலும், டாக்கா பிரிவில் 391 பேரும், மைமென்சிங் பிரிவில் 44 பேரும், சட்டோகிராம் பிரிவில் 172 பேரும், குல்னா பிரிவில் 159 பேரும், ராஜ்ஷாஹி பிரிவில் 96 பேரும், ரங்பூர் பிரிவில் 19 பேரும், பரிஷால் பிரிவில் 123 பேரும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    • மேஹடி ஹசன் பந்துவீசும் போது பந்து அவரது கையிலிருந்து நழுவி சென்றுள்ளது.
    • இதனை பெரிய ஷாட் அடிக்கலாம் என்று எண்ணிய அசதுல்லா அல் கலிப் இறங்கி வந்து பந்தை அடித்தார்.

    வங்கதேசத்தில் தேசிய கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. சில்ஹெட் பிரிவு மற்றும் குல்னா பிரிவிற்கு இடையே நடந்த போட்டியில் குல்னா அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேஹடி ஹசன் பந்துவீசும் போது பந்து அவரது கையிலிருந்து நழுவி சென்றுள்ளது. இதனை பயன்படுத்தி பெரிய ஷாட் அடிக்கலாம் என்று எண்ணிய அசதுல்லா அல் கலிப் இறங்கி வந்து பந்தை அடித்தார்.

    அந்த பந்து பேட்டில் சரியாக படாததால் பவுண்டரி லைனில் இருந்து பீல்டர் அதனை கேட்ச் பிடித்தார். இதனால் மிகவும் வேடிக்கையான முறையில் அவுட்டாகி அவர் வெளியேறினார்.

    இந்த ஆண்டின் மிகசிறந்த விக்கெட்டை மேஹடி ஹசன் எடுத்துள்ளார் என்று அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
    • ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

    தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் கமால் உதின் அகமது மற்றும் 5 பேர் தங்களது ராஜினாமா கடிதங்களை அந்நாட்டு அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 3 மாதங்கள் கழித்து தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

    2022-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தை அந்நாட்டு முன்னாள் அதிபர் அப்துல் ஹமித் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.


    போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர் பிரிவு கொலை, சித்தரவதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
    • மாணவர்கள் போராட்டத்தின்போது பல்கலைக்கழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

    வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்ட்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வலுக்கட்டாயமாக வங்கதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியேறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ராணுவம் அவருக்கு 45 நிமிடம் கால அவகாசம் கொடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேசம் சத்ரா லீக் என்ற பெயரில் இயங்கி வந்தது. போராட்டத்தின்போது கொலைகள், துன்புறுத்தல், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மாணவர்கள் போராட்டம் ஜூலை மாதம் அமைதியாக நடைபெற்றது. சத்ரா லீக் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    • அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.
    • 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது

    வங்கதேசம் 

    வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையில் ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டங்களின்மூலம் தூக்கி எறியப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆபத்தான சூழலில் இந்தியாவுக்குத் தப்பி வந்து தஞ்சமடைந்துள்ளார் ஹசீனா.

     

    வங்கதேச நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அவருக்கு எதிராக பேசியவர்கள், செயல்பட்டவர்கள் என பலர் அவ்வப்போது காணாமல் போயினர். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அந்த சிறைகளிலிருந்து வெளியே வந்தவர்கள் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

     கண்ணாடிகளின் வீடு 

    இந்த சிறைகளுக்கு 'அயினாகோர்' என்று பெயர். இதற்கு கண்ணாடிகளின் வீடு என்று பொருள். 2009இல் ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.

    அரசுக்கு எதிராக சிறிய அளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட அதிகாரப்பூர்வமாகக் கடத்தப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு தடயம் இல்லாமல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய சிலர் ரகசிய ராணுவ தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர். அதுவே அயினாகோர் என அழைக்கப்பட்டது என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    காணாமல் போனவர்கள் 

    ஹசீனா அரசுக்கு சவாலாக இருக்கும் யார் ஒருவரையும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த காணாமல் போகும் நிகழ்வு என்று அந்த இதழ் கூறுகிறது. இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    சித்ரவதை

    சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்திற்கு மேலே காலையில் ராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது என கூறுகின்றனர். சிறையில் உள்ளவர்களால், அவர்களை தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே அதற்கு கண்ணாடிகளின் வீடு என பெயர் வந்துள்ளது. விசாரணையின்போது, உடல்ரீதியான சித்ரவதைகளைக் கைதிகள் அனுபவித்தனர்.

    அந்த சித்திரவதைகளால் அவர்கள் உயிரிழக்காமல் இருக்க சுகாதார பரிசோதனைகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கைதிகளுக்கு முடி வெட்டி விடப்படும். அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதே இந்த சிறைகள் ஏற்படுத்தப்பட முக்கிய இலக்கு என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

    ஜன்னல்கள்

    வழக்கறிஞர் அகமது பின் காசிம் 2016-ல் பிடிக்கப்பட்டார். அவருடைய கண்களையும், கைகளையும் கட்டி சிறையில் வைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே வந்ததும், முதன்முறையாக புதிய காற்றை சுவாசிக்கிறேன் என்றார்.

    சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை. வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது. எல்லா நேரமும் காசிமுக்கு உலோகத்திலான கைவிலங்கு போடப்பட்டு இருந்தது. சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும். சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும்.

    காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்குக் கேட்க கூடாது என்பதற்காகவும், கைதிகளை மனரீதியாக நிலைகுலைய வைப்பதற்கும் இதுபோன்ற விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

     

    அதிகாரம் 

    வரலாறு நெடுகிலும் அதிகார மையங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் ஒரு வடிவமே இந்த கண்ணாடிகளின் வீடு. இதற்கு ஷேக் ஹசீனா உட்பட ஆட்சியாளர்கள் யாரும் விதிவிலக்கல்ல. சில இடங்களில் அது கண்ணாடிகளின் வீடாக இருக்கிறது, சில இடங்களில் அது வேறு வடிவங்களில் இருக்கிறது என்பதே ஒரே வேறுபாடு.

    ×