என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 247 ரன்களில் சுருண்டது.
    • இலங்கை 458 ரன்கள் குவித்தது.

    இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

    லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 96 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. லிட்டன் தாஸ் தாக்குப்பிடித்து விளையாடினால் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இலங்கை இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்யும்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
    • பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 123 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    அடுத்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து 9-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் வேகப்பந்து வீ்ச்சாளர் கைப்பற்றினார். விக்கெட்டை வீழ்த்தியதும், வெளியே போ (Dressing Room) என்ற வகையில் ஆக்ரோசமாக சைகை காட்டினார்.

    அந்த நிலையில் ஒரு வீரர் ஆட்டமிழக்கும்போது பந்து வீச்சாளர் ஐசிசி விதிமுறைக்கு மாறாக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்த போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் தடைவிதிப்பதற்கான ஒரு புள்ளிகளையும் வழங்கியது. கடந்த 24 மாதங்களில் சீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2ஆவது முறையாகும். இதனால் தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்களே சேர்த்தது. 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு சுருண்டது.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இதன்படி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 72 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் ஜோடி இணைந்து 67 ரன்கள் சேர்த்தது.

    ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    10 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

    இதுவரை ஆஸ்திரேலியா 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    • டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

    திருநெல்வேலி:

    டி.என்.பி.எல். தொடரின் 24-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

    என்.எஸ்.ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்னும், சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்னும் விளாசினர். சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, அஸ்வின், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 31 பந்தில் 45 ரன்னும்,

    மான் பாப்னா 28 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹன்னி சைனி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    • சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
    • நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

    அதிகபட்சமாக ஷட்மன் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - லஹிரு உதாரா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது.

    அதில் லஹிரு உதாரா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நிசங்காவுடன் தினேஷ் சண்டிமால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இதனால் 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 2-வது விக்கெட்டை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    பிர்மிங்காம்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக பும்ரா இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் அதிக ஓவர்களையும் அவர் வீசினார்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.

    எனவே அந்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் 2-வது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் பும்ரா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

    • சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்களும் விளாசினர்.
    • ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24ஆவது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி அந்த அணியின் சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அருண் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்கள் விளாச நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    • திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.
    • நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதில்

    இன்று நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது. அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2 -வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

    நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ஆடும் லெவன்:-

    ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர், ஜோ ரூட், டக்கெட், பஷீர், பெத்தேல், ஹாரி புரூக், கார்ஸ், சாம் குக், கிராலி, ஓவர்டன், ஆலி போப், ஸ்மித், ஜோஷ் டங் , வோக்ஸ்.

    • ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை.
    • சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் 5 சதங்களை பதிவு செய்தனர். 5 சதங்களை அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்டின் ஆட்டத்தை குறித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அந்த வகையில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. அவர் செய்வதெல்லாம் உங்களை கவர்ந்து இழுக்கும். சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

    என ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.

    இந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.
    • பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 23 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமிழனஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், கோவை கிங்ஸ் 2 புள்ளிகளுடனும் உள்ளன.

    முன்னாள் சாம்பியனான கோவை 5 போட்டியில் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம்.
    • இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன்.

    லண்டன்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.

    5 சதங்கள் அடித்து இந்திய அணி தோற்றது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 சதம் அடித்து தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    இந்த நிலையில் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் விமர்சித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்த ஆளுமை தன்மை கில்லிடம் நான் பார்க்கவில்லை. அவர் ஒவ்வொரு பந்துகளுக்கும் எதிர்வினைதான் செய்கிறார். முன்கூட்டியே அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கருதுகிறேன்.

    ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் அவர்களிடம் தான் ஆட்டத்தின் கட்டுப்பாடு இருக்கும்.

    இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன். ஒரு கமிட்டி மூலம் இந்த கேப்டன்ஷிப் நடத்தப்படுகிறது. கேட்ச்களை தவற விட்டது மற்றும் பேட்டிங் வரிசை திடீரென சரிந்தது ஆகியவை தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாகும். இதனை சுப்மன் கில்லால் சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×