என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்தில் இருந்து இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் வராத பென் ஸ்டோக்ஸ் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

    நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

    அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே நேற்றைய போட்டியின்போது அணியுடன் இணைந்தார்.

    பென் ஸ்டோக்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து வார்னே கூறுகையில் ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்து மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.

    மேலும், ‘‘ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்குவது எனக்கு பிடித்திருக்கிறது. சிறந்த வீரர்களுக்கு அதிகமாக பந்துகள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். என்னை பொறுத்த வரைக்கும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் களம் இறங்குவது சரியானதே’’ என்றார்.
    ஐபிஎல் வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் விதிமுறையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் மீறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
    கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகிறது. அத்துடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருவருக்கு கொரோனா வந்து அவர்கள் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள் (Bio-Bubble). இந்த விதியின்படி ஐபிஎல் வீரர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது. அதேபோல் இந்த பயோ பபுள் பகுதிக்குள் வெளி ஆட்கள் வர முடியாது.

    ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் பயோ பபுள் இடங்களுக்கு வெளியே ஹோட்டலில் வேறு எந்த பகுதிக்கும் வீரர்கள் செல்லக்கூடாது. அதேபோல் போட்டி, பயிற்சி தவிர வேறு காரணங்களுக்காகவும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. இந்த சூழலில்தான் சிஎஸ்கே வீரரான கே.எம்.ஆசிப் இந்த விதியை மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    சிஎஸ்கே பயிற்சிக்கு சென்றுவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய ஆசிப் தன்னுடைய அறை சாவியை மைதானத்தில் மறந்து வைத்துவிட்டதால் புதிய சாவியை வாங்குவதற்காக ரிசப்ஷன் வந்துள்ளார். ஆனால் இந்த ரிஷப்ஷன் பகுதி இந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் பகுதி என்பதால் இது விதிமீறல் மீறியதாக புகார் எழுந்துள்ளது.

    ஆனால், பயோ-பபுள் விதிமுறையை ஆசிஃப் மீறவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘உண்மை ஆராயப்பட்டதா? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ரிசப்சன் பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் சந்திக்கும் ஓட்டல் ஸ்டாஃப்கள் மாறுபட்டவர்கள். ஆசிப் அங்கே சென்று, வழக்கமான ஸ்டாஃப்களுடன் பேச முடியாது. வீரர்களுடன் அர்ப்பணிப்பான குழு வேலை செய்து வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆசிஃப் சாவியை தொலைத்து விட்டு, ரிசப்சன் சென்று கேட்டது உண்மை.

    வழக்கமக பணிபுரியும் ஸ்டாஃப் இடம் சென்று அவர் சாவி கேட்டகவில்லை. இந்த விசயம் ஊதி பெரியதாக்கப்படுகிறது. உண்மையை மனதில் வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் மோசமானது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். உண்மையிலேயே வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் தங்கியுள்ள இடத்திற்கு என்னாலேயே செல்ல முடியாது. அதிகாரிகளிடமிருந்து அவர்களுடைய பபுள்ஸ் மாறுபட்டது.’’  என்றார்.
    அபு தாபி, ஷார்ஜாவை விட துபாய் மைதானத்தில் அதிகமான கேட்ச்களை பீல்டர்கள் பிடிக்க தவறியுள்ளனர். இதற்கு ‘பையர் ஆஃப் ரிங்’ காரணம் என கூறப்படுகிறது.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. மூன்று மைதானங்களில் போட்டிகளில் நடைபெறும் நிலையில் பல சுவாரஸ்யமான, கவலை அளிக்கும் விதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    பொதுவாக பவர் பிளேயில் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்தால், உடனடியாக சுழற்பந்து வீச்சை களம் இறக்குவார்கள். ஆனால். இந்த முறை 11.10 சதவீதம் மட்டுமே சுழற்பந்து வீச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019-ல் 24.30 சதவீதம், 2018-ல் 32.60 சதவீதம், 2017-ல் 25.70 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பவர் பிளே-யில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    11 போட்டிகள் முடிவதற்குள் ஒவ்வொரு அணியும் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2009-ல் 10 போட்டிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. அதன்பின் 2016-ல் 12, 2017-ல் 13, 2018 14 போட்டிகள் முடிவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்தத் தொடர் மிகவும் போட்டியான தொடராக இருக்கும் என கருதப்படுகிறது.

    12 போட்டிகள் முடிவில், 11 முறை டாஸ் வென்ற அணி பீல்டிங் கேட்டுள்ளது. இதில் இரண்டு முறையே டாஸ் வென்ற அணி வெற்றி வாகை சூடியுள்ளது. டாஸ் வென்றாலும் போட்டியில் தோல்வியடைந்த நிலையே ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு சீசனில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த முறை அது பலன் அளிக்கவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் தோல்வியை சந்தித்தது.

    இந்த முறை டெத் ஓவரில் பந்து வீச்சாளர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது, கடைசி நான்கு ஓவர்களில் அதிகபட்சமாக 79 ரன்கள் விளாசப்பட்டது. சராசரியாக அணிகள் 11.94 ரன்கள் அடித்துள்ளது. தற்போது வரை டெத் ஓவர்களில் 70 சிக்ஸ், 74 பவுண்டரிகளில் அடிக்கப்பட்டுள்ளனர். இந்த ரன்ரேட் இதுவரை நடைபெற்ற தொடர்களில் அதிகம்.

    மூன்று மைதானங்களில் சிக்ஸ், பவுண்டரிகள் சென்றதில் வித்தியாசம் உள்ளது. ஷார்ஜாவில் சராசரியாக 8 பந்திற்கு ஒரு சிக்ஸ் பறந்துள்ளது. துபாயில் 20 பந்திற்கு ஒரு சிக்சரும், அபு தாபியில் 23 பந்திற்கு ஒரு சிக்சர்தான் சென்றுள்ளது. பவுண்டரி ஷார்ஜா மற்றும் துபாயில் 9 பந்துக்கும், அபு தாபியில் 10 பந்துக்கும் அடிக்கப்பட்டுள்ளது.

    கேட்ச் மிஸ்சிங்கை பொறுத்த வரைக்கும் துபாய் மைதானம் மிக மோசம். இதற்கு காரணமாக மைதானத்தில் உள்ள விளக்கு கோபுரத்தை சொல்கிறார்கள். மிகப்பெரிய மைதானத்தில் அமைந்துள்ள விளக்கு கோபுரங்களை ரிங் ஆப் பையர் என்று அழைப்பார்கள்.

    துபாயில் 67 கேட்ச் வாய்ப்பில் 10 தவிறியுள்ளன. அபு தாபியில் 37 வாய்ப்புகளில் 3 தவறியுள்ளன. ஷார்ஜாவில் 18 கேட்ச்களில் 2 தவறியுள்ளன.

    இதுவரை கடைசி ஓவரில் 292 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. இது சராசரி 14.24 ஆகும். 15 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நானை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 12 முறை மோதியுள்ளன. இதில் 75 சதவீத போட்டிகளில் அதாவது 9 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி 3 முறைதான் வெற்றி பெற்றுள்ளது.

    போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பழைய சாதனைகளை எடுத்துக்கொள்ள முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறது.

    மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கெதிராக 176 ரன்களை சேஸிங் செய்யும்போது எந்தவிதமான பேராட்டமின்றி 131 ரன்கள் மட்டுமே எடுத்து சரணடைந்தது.

    இந்த தோல்வி டோனியை யோசிக்க வைத்துள்ளது. ஐதுராபாத் போட்டிக்கு ஒருவாரம் இடைவெளி இருந்ததால், பேலன்ஸ் அணியை தயார் செய்தல், திட்டமிடல் ஆகியவற்றிற்கு நேரம் கிடைத்திருக்கும். தொடக்க ஜோடியை மாற்ற வேண்டுமா?. இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்கவா? என்பது குறித்து யோசித்திருப்பார்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர்களால் எந்த பயனும் இல்லை. மும்பைக்கு எதிராக முரளி விஜய் - வாட்சன் ஜோடி 5 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 56 ரன்களும், டெல்லிக்கு எதிராக 23 ரன்களுமே எடுத்தன. இதில் முரளி விஜய் 1, 21, 10 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.  வாட்சன் 4, 33, 14 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

    கடைசியாக துபாயில் நடைபெற்ற டெல்லி அணிக்கெதிராக 176 இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும்போது எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாமல் 131 ரன்னில் சுருண்டு சரணடைந்தது.

    இந்த போட்டியில் டோனி 6-வது வீரராக களம் இறங்கி 15 ரன்களே அடித்தார். இரண்டு போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டிலும் 0, 5 என அவுட் ஆகி அவரும் பிரகாசிக்கவில்லை.

    கேதர் ஜாதவ் ரோல் என்ன என்பதை எம்எஸ் டோனிதான் விளக்க வேண்டும்.

    டெல்லி அணிக்கெதிரான படுதோல்விக்குப் பிறகு, அம்பதி ராயுடு அடுத்த போட்டியில் விளையாடுவார். அணி சற்று பேலன்ஸ் பெறும், சரியான பார்வையுடன் களம் இறங்குவோம் என்று டோனி தெரிவித்தார். இதனால் அணியில் மாற்றங்கள் பல இருக்கலாம். ஒரு வாரத்திற்குப்பின் போட்டியில் களம் இறங்குவதால் இந்த ஓய்வு நேரத்தில் மாற்றங்கள் குறித்து டோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் யோசித்திருப்பார்கள்.

    இப்போது ரசிகர்களின் கேள்வியே, டோனி 4-வது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவாரா? என்பதுதான். முதல் இரண்டு போட்டிகளில் ஏழாவது இடத்திலும், 3-வது போட்டியில் 6-வது இடத்திலும்தான் களம் இறங்கினார். அது அணிக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை.

    டு பிளிஸ்சிஸ் 3-வது இடத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். 58, 72, 43 என அடித்துள்ளார். சாம் கரன் சிறப்பாக பந்து வீசுவதோடு, அவரால் முடிந்த அளவிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

    தொடக்க ஜோடியை டோனி மாற்ற வாய்ப்புள்ளது. முரளி விஜய் நீக்கப்பட்டு அம்பதி ராயுடு அல்லது டு பிளிஸ்சிஸ் களம் இறக்கப்படலாம். வாட்சன் மீது நம்பிக்கை வைத்து டோனி இன்னும் வாய்ப்பு கொடுப்பார்.

    துபாய் மைதானத்தில் இரண்டு அணிகளுமே 175 ரன்களுக்கு குறைவான ஸ்கோரை சேஸிங் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. இதனால் துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக் ஆனதாகவே உள்ளது. மேலும், இரண்டு அணிகளும் தலா ஒரு முறை மோதியுள்ளது. இரண்டு அணிகளும் தோல்வியையே சந்தித்துள்ளன.

    தொடக்க ஜோடி ஓரளவிற்கு ரன்கள் அடிப்பதுடன் களத்தில் நிலைத்து நிற்பது அவசியம். முதல் 10 ஓவரில் 70 முதல் 80 ரன்கள் அடித்துவிட்டு, 15-வது ஓவருக்குப் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. இதற்கு டோனி, கேதர் ஜாதவ் பங்களிப்பு மிகமிக அவசியம்.

    தொடக்க ஜோடி யார்? டோனி எந்த ஆர்டரில் களம் இறங்குவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர் தனது 100 சதவீத முழுத்திறமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை. புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆனால் மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணிக்கெதிராக பவர் பிளே-யில் ஒரேயோரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும், 32, 31, 38 என ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவர் பவர் பிளே-யில் அசத்தினால் மட்டுமே எதிரணியை கட்டுப்படுத்த முடியும். சாம் கர்ரன் வெயின் பிராவோ செய்த பணியை செம்மையாக செய்து வருகிறார்.

    மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நிகிடி அல்லது ஹாசில்வுட் ரன்களை கட்டுப்படுத்துவது அவசியம். முதல் போட்டியில் நிகிடி சிறப்பாக பந்து வீசினார். ஆனால், ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்கள் கொடுத்தது அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அவருக்குப் பதிலாக டெல்லி அணிக்கெதிராக ஹாசில்வுட் சேர்க்கப்பட்டார். அவர் 28 ரன்கள் கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்தவில்லை. இவர்களில் யாரவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சுழற்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் பியூஷ் சாவ்லா, ஜடேஜா என இரண்டு பேர் மட்டுமே உள்ளது. இந்த ஜோடி  முதல் போட்டியில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது போட்டியில் 95 ரன்களும், 3-வது போட்டியில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளது.

    இதனால் சுழற்பந்து வீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிரை சேர்க்க வேண்டும் என்றால், அணியில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேகபந்து வீச்சாளரை நீக்கி விட்டு, இந்திய பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும். அப்படி என்றால் ஒரு இந்திய பேட்ஸ்மேனை நீக்க வேண்டியிருக்கும். மேலும், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவது சற்று பின்னடைவாகவே உள்ளது.

    இந்த ஒரு வாரத்தில் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்வது குறித்துதான் டோனி யோசித்திருப்பார். ஏறக்குறைய இந்த முறை சரியான அணியை களம் இறக்கினால் அதன்பின் மாற்றம் பெரிய அளவில் இருக்காது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ், புவனேஷ்வர் குமார், ரஷித் கான் என அணியின் முக்கியமான வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.

    முதல் இரண்டு போட்டியில் வார்னர் (6), (36) என ஆட்டமிழந்தார். டெல்லிக்கு எதிராக 33 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதேபோல் பேர்ஸ்டோவ் முதல் போட்டியில் அரைசதமும், 3-வது போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இருவரும் மிகப்பெரிய ஹிட்டர்கள். அதோடு மட்டுமல்லாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதில் வல்லவர்கள்.

    துபாய் மைதானம் மிகப்பெரியது என்பதால் அவ்வப்போது பவுண்டரிகள் அடிப்பதுடன், ஒன்றிரண்டு ரன்கள் திரட்டி விடுவார்கள். இவர்களை நீண்ட நேரம் களத்தில் நின்று விட்டால் சென்னை அணியால் கட்டுப்படுத்துவது சுலபம் அல்ல. மிடில் ஆர்டர் வலுவிழந்து காணப்பட்டதால் 3-வது போட்டியில் கேன் வில்லியம்சனை களம் இறக்கியது. அவர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். 3-வது இடத்தில் களம் இறங்கும் மணிஷ் பாண்டே அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார். இந்த நான்கு பேரும்தான் அணியின் பேட்டிங் முதுகெலும்பு. 10 ஓவருக்குள் மூன்று பேரை சாய்ந்துவிட்டால், மொத்த அணியும் சாய்ந்ததற்கு சமம்.

    பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ரஷித் கான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம். தற்போது டி. நடராஜனும் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்த மூன்று பேரும் இணைந்து டெல்லிக்கு எதிராக அற்புதமாக பந்து வீசினார்கள். புதுப்பந்தில் புவி அசத்துவார். முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த புவி, டெல்லிக்கு எதிராக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்

    அதேபோல் ரஷித் கானும் முதல் இரண்டு போட்டிகளில் 31, 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டெல்லிக்கு எதிராக 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் அள்ளி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ரஷித் கானுக்கு இந்த போட்டி ஊக்கத்தை கொடுக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியர். இவரை சரியாக எதிர்கொண்டால்தான் மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்க்க முடியும்.

    தற்போது இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் இணைந்துள்ளார். இவர் ஒரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். இந்த சீசனில் யார்க்கர் டெலிவரியை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

    ரஷித் கான், புவி பந்து வீச்சை எதிர்கொள்வது, பேர்ஸ்டோவ், வார்னரை கட்டுப்படுத்துவதை பொறுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றித் தோல்வி அமையும்.
    பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    துபாய்:

    பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று நடைபெறும்போது இந்த போட்டி நடக்கிறது.

    இந்திய வீராங்கனைகள் தலைமையில் 3 அணிகள் கலந்து கொள்ளும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

    நான்கு ஆட்டங்களையும் ஒரே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. 2-வது போட்டியில் பெங்களூர் அணியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 223 ரன் குவிக்கும் ராஜஸ்தானிடம் தோற்றது.

    பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல் (222 ரன்), மயங்க் அகர்வால் (221) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த தொடரில் அவர்கள் இருவரும் தற்போது ரன் குவிப்பில் முதல் 2 இடங்களில் உள்ளனர். இந்த இருவரும் தான் இந்த சீசனில் சதம் அடித்து இருக்கிறார்கள்.

    இது தவிர மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன், முகமது ‌ஷமி, ரவி பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    கிறிஸ் கெய்லுக்கு இன்றைய ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரிக்கொடுத்த காட்ரெல் நீக்கப்படலாம். அவர் இடத்தில் கிறிஸ் கெய்ல் அல்லது சுழற்பந்து வீரர் முஜூபூர் ரகுமானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே.விடம் 5 விக்கெட்டில் தோற்றது. 2-வது போட்டியில் கொல்கத்தாவை 49 ரன்னில் வீழ்த்தியது. 3-வது போட்டியில் பெங்களூரிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

    அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசன், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, குயின்டன் டிபாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளன. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் 24 முறை மோதுகின்றன. இதில் மும்பை 13-ல். பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    இளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.

    சுப்மன்கில் 34 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கன் 23 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்ச்சர் 2 விக்கெட்டும், ராஜ்பூத், உனட்கட், டாம் கரண், திவேதியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

    டாம் கரண் அதிகபட்சமாக 36 பந்தில் 54 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவ் சுமித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஷிவம் மவி, நாகர்கோட்டி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும், சுனில் நரீன், கம்மின்ஸ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. 2-வது போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    பல்வேறு வி‌ஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்மன் கில்,ரஸ்சல்,மார்கன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள். நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை அணிகளை வீழ்த்தி இருந்தது.

    இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, எங்களது திட்டம் எடுபடவில்லை. ஆனால் 20 ஓவர் சில சமயம் இப்படி நடைபெறலாம். தொடக்கத்திலே விக்கெட் இழந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்றார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 3-ந் தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதே தினத்தில் அபுதாபியில் எதிர்கொள்கிறது.

    பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    மின்ஸ்க்:

    ஐரோப்பிய நாடான பெலாரசில் 1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே அதிபராக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    இதையடுத்து, பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டர் 6-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதனால், 26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் தொடங்கியது. பின்னர் நாளடைவில் பொதுமக்களே அதிபருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். 

    லட்சக்கணக்கானோர் பங்கேற்றுவரும் இந்த போராட்டத்தை கண்ணீர் புகைகுண்டு, தடியடி நடத்தி போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பெலாரஸ் அரசு இறங்கியுள்ளது.

    மேலும், பெலாரஸ் நாட்டில் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் அலெக்சாண்டர் அதிபர் பதவியில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தி புகார் மனுக்களை அனுப்பினர். 

    இதில் பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீரங்கனையான யேலினா லட்சங்காவும் ஒருவர். மேலும், இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பெலாரஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி பிரபலமானவர். இவர் அதிபருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார்.   

    இந்நிலையில், சிகிச்சைக்காக நேற்று வெளிநாடு செல்ல முயன்றபோது யேலினா லட்சங்காவை பெலாரஸ் போலீசார் கைது செய்தனர். 

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யேலினா போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கூடைப்பந்து வீராங்கனை தற்போது மின்ஸ்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக போட்டு மிரட்டினார். குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில் (அணியின் 14 மற்றும் 18-வது ஓவர்) மட்டும் துல்லியமாக 10 யார்க்கர்களை வீசி திணறடித்தார். ஐதராபாத் அணியின் வெற்றியில் அவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. அவரை பாராட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘நடராஜனின் பந்து வீச்சை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியாக யார்க்கர் வீசினார்’ என்றார். ‘அற்புதம் நடராஜன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி அதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைந்தவர், 29 வயதான நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன் அந்த ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் (6 ஆட்டத்தில் 2 விக்கெட்) ஜொலிக்கவில்லை. இதன் பிறகு 2018-ம் ஆண்டில் ரூ.40 லட்சத்திற்கு ஐதராபாத் அணி அவரை வாங்கியது. ஆனால் 2018 மற்றும் 2019-ம் ஆண்டு சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. என்றாலும் தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்ட நடராஜன் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் 4 ஓவர் பந்து வீசி 25 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    சுனில் நரைன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
    இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

    சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது.

    6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது. 

    ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 

    7 பந்துகள் ஆடிய ஸ்மித் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சஞ்சு சம்சங் 9 பந்து வீச்சில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று நிதானமாக ஆடிய பட்லர் 16 பந்தில்
    21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

    இதனால், 14.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணியின் டாம் கரன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்னெர் தோல்வியடைந்துள்ளார்.
    பிரெஞ்ச் ஒபன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொண்டார். நடாலும் ஆட்டத்திற்கு மெக்டொனால்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் நடால் 6-1, 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் 3-ம் நிலை வீரரான டொமினிக் தீம் அமெரிக்காவின் ஜேக் சோக்கை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டையும் டொமினிக் தீம் 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் ஜேக் சற்று நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8), 6(6) எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    16-ம் நிலை வீரரான வாரிங்கா ஜெர்மனியின் கோப்ஃபெர்-ஐ எதிர்கொண்டார். இதில் வாரிங்கா 6-3, 6-2, 3-6, 6-1 என வெற்றி பெற்றார்.

    தரநிலையில் 21-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் இஸ்னெர் சக நாட்டு வீரரான கோர்டாவிடம் 4-6, 4-6, 6-2, 4-6 என வீழ்ந்தார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேரில் சென்று கண்டு ரசித்தார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கொல்கத்தா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம். அப்போது ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுடன் அணி உரிமையாளர்களும் சென்றுள்ளனர்.

    அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். முக்கியமான நபர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் ஷாருக்கான் இன்றைய போட்டியை பார்ப்பதற்கான மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். ஷாருக் கானுடன் அவருடைய மகனும் வந்திருந்தார்.
    ×