என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன்: ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்30 Sep 2020 5:36 PM GMT (Updated: 30 Sep 2020 5:36 PM GMT)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்னெர் தோல்வியடைந்துள்ளார்.
பிரெஞ்ச் ஒபன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொண்டார். நடாலும் ஆட்டத்திற்கு மெக்டொனால்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் நடால் 6-1, 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் 3-ம் நிலை வீரரான டொமினிக் தீம் அமெரிக்காவின் ஜேக் சோக்கை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டையும் டொமினிக் தீம் 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் ஜேக் சற்று நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8), 6(6) எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
16-ம் நிலை வீரரான வாரிங்கா ஜெர்மனியின் கோப்ஃபெர்-ஐ எதிர்கொண்டார். இதில் வாரிங்கா 6-3, 6-2, 3-6, 6-1 என வெற்றி பெற்றார்.
தரநிலையில் 21-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் இஸ்னெர் சக நாட்டு வீரரான கோர்டாவிடம் 4-6, 4-6, 6-2, 4-6 என வீழ்ந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X